Monday, March 19, 2007
கொத்து பரோட்டா
Frozen பரோட்டா - 1 பாக்கெட்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க.
இப்போ செய்முறை.
வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க.
இப்போ செய்முறை.
வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
Labels: நன்றி : இலவசக் கொத்தனார்
சடுதியில் சாம்பார் சாதம்
குக்கரில் வைக்க
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் பொடி
பெருங்காயம்
பொடி செய்து கொள்ள
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பழம் - 4
மிளகு - 10
கசகசா - 1 தேக்கரண்டி
காய்கறிகள்
வெங்காயம் - பெரிதாக 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
கத்திரிக்காய் - சிறிதாக 2
காரட் - பெரிதாக 1
உருளைக்கிழங்கு - பெரிதாக 2
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலைகொத்து
மல்லி
தாளிக்ககடுகு - 1 தேக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு
நெய் - சிறிதளவு (வேண்டுமானால்)
எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா? இப்போ என்ன செய்யணும் அப்படின்னு பார்க்கலாம். ரொம்ப மெனக்கட வேண்டாம். ஒரு பத்து, பனிரெண்டு ஸ்டெப்களில் சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் வாங்க.
முதலில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் எல்லாத்தையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்துவிடுங்க. சாதாரணமாக சாதத்திற்கு வைப்பதை விட ஒன்று அல்லது இரண்டு விசில்கள் அதிகம் வரலாம்.
பொடி செய்வதற்கு அப்படின்னு சொல்லி இருக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் அப்படியே எண்ணை விடாமல் வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.
காய்கறிகள் அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்வதற்கான வாணலியை எடுத்துக் கொண்டு சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.
அதில் முதலில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும்
வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மீதமுள்ள காய்களைப் போட்டு வதக்கவும்.
காய்கறிகள் வதங்கிய பின் அதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை விட்டு , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
பச்சை வாசனை போன பின்னாடி, நாம் பொடி செய்து வைத்துள்ள பொடியைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சிறிது கொதித்த பின் குக்கரில் இருக்கும் சாதம் பருப்பை எடுத்து இதில் சேர்த்து நன்றாகக் கிளரவும்.
நன்றாகச் சேர்ந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட்டு கிளறிவிடவும்.
சாப்பிடும் முன் சிறிது நெய்யை விட்டு கிளறினால் வாசனையாக இருக்கும்.
இதில் காய்கறிகள் தேவையான அளவு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பூண்டு, பீன்ஸ், பட்டாணி, கவிப்பூ (காலி பிளவர்) என பிடித்த காய்கறி எல்லாம் போடலாம். பொடி செய்து கொள்ளும் பொழுது அதிலும் சிறிது பெருங்காயம் போடலாம். புளித் தண்ணீருடம் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போடலாம்.
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் பொடி
பெருங்காயம்
பொடி செய்து கொள்ள
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பழம் - 4
மிளகு - 10
கசகசா - 1 தேக்கரண்டி
காய்கறிகள்
வெங்காயம் - பெரிதாக 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
கத்திரிக்காய் - சிறிதாக 2
காரட் - பெரிதாக 1
உருளைக்கிழங்கு - பெரிதாக 2
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலைகொத்து
மல்லி
தாளிக்ககடுகு - 1 தேக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு
நெய் - சிறிதளவு (வேண்டுமானால்)
எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா? இப்போ என்ன செய்யணும் அப்படின்னு பார்க்கலாம். ரொம்ப மெனக்கட வேண்டாம். ஒரு பத்து, பனிரெண்டு ஸ்டெப்களில் சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் வாங்க.
முதலில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் எல்லாத்தையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்துவிடுங்க. சாதாரணமாக சாதத்திற்கு வைப்பதை விட ஒன்று அல்லது இரண்டு விசில்கள் அதிகம் வரலாம்.
பொடி செய்வதற்கு அப்படின்னு சொல்லி இருக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் அப்படியே எண்ணை விடாமல் வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.
காய்கறிகள் அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்வதற்கான வாணலியை எடுத்துக் கொண்டு சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.
அதில் முதலில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும்
வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மீதமுள்ள காய்களைப் போட்டு வதக்கவும்.
காய்கறிகள் வதங்கிய பின் அதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை விட்டு , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
பச்சை வாசனை போன பின்னாடி, நாம் பொடி செய்து வைத்துள்ள பொடியைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சிறிது கொதித்த பின் குக்கரில் இருக்கும் சாதம் பருப்பை எடுத்து இதில் சேர்த்து நன்றாகக் கிளரவும்.
நன்றாகச் சேர்ந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட்டு கிளறிவிடவும்.
சாப்பிடும் முன் சிறிது நெய்யை விட்டு கிளறினால் வாசனையாக இருக்கும்.
இதில் காய்கறிகள் தேவையான அளவு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பூண்டு, பீன்ஸ், பட்டாணி, கவிப்பூ (காலி பிளவர்) என பிடித்த காய்கறி எல்லாம் போடலாம். பொடி செய்து கொள்ளும் பொழுது அதிலும் சிறிது பெருங்காயம் போடலாம். புளித் தண்ணீருடம் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போடலாம்.
Labels: நன்றி : இலவசக்கொத்தனார்
Thursday, July 27, 2006
பால் ஆப்பம் / வடைகறி
தேவையானவை:
பச்சரிசி 2 கப், தேங்காய் துருவல் amp; 2 டேபிள்ஸ்பூன், சற்றுப் பழையதான (அதாவது, 2, 3 நாட்கள் புளிக்கவைத்த) தேங்காய் தண்ணீர் 2 கப், புழுங்கலரிசி சாதம் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, ஆப்ப சோடா கால் டீஸ்பூன்.
செய்முறை:
இந்த ஆப்பத்துக்காக, தேங்காய் தண்ணீரை 2, 3 நாட்கள் முன்னரே எடுத்து வைக்கவேண்டும். 2 கப் தண்ணீர் என்றால், 2 டீஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து புளிக்கவைக்க வேண்டும். ஆப்பம் செய்யப்போகும் நாளில், அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், தேங்காய் தண்ணீர், சாதம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்தெடுங்கள். நன்கு நைஸாக அரைபட்டதும், உப்பு, ஆப்ப சோடா சேர்த்துக் கரைத்து வையுங்கள். பிறகு, வழக்கம் போல, குழிவான வாணலியிலோ, ஆப்பச்சட்டியிலோ ஆப்பங்களாக ஊற்றி எடுங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள, கடலைக் குழம்பு அல்லது உருளைக்கிழங்கு கறி போன்றவை மிக சுவையாக இருக்கும்.
‘வடகறி’ செய்வது எப்படி?
‘‘நாங்கள் சென்னைக்கு புதுசு. இங்கே வந்த பிறகு, கல்லூரியில் படிக்கும் என் மகன் ஹோட்டலில், நண்பர்கள் வீட்டில் சாப்பிட்ட ‘வடகறி’ என்ற அயிட்டத்தை வீட்டில் செய்யச் சொல்லிக் கேட்கிறான். வடகறி செய்வது எப்படி எனக் கூறுவீர்களா?’’
‘‘ ‘வடகறி’ என்பது சென்னையின் புகழ்பரப்பும் சைட்டிஷ்களில் ஒன்று. அதை செய்யத்
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு 1 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, தேங்காய்ப்பால் ஒரு கப், புதினா, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா ஒன்று, பச்சை மிளகாய் 3.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அந்த மசாலா விழுதில் இருந்து சிறிதளவு எடுத்து, கடலைப் பருப்பு அரைத்த கலவையில் கலந்து, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து, எண்ணெயைக் காயவைத்து சிறுசிறு பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், தக்காளி, அரைத்த மசாலா விழுது, மிளகாய்தூள், மஞ்சள் தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு பாதி அளவு தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் பக்கோடாக்களை உடைத்துப் போடுங்கள். இது 5 நிமிடம் கொதித்ததும் மீதியுள்ள பாலை சேர்த்து கிளறி இறக்குங்கள். (தளதளவென இல்லாவிட்டால், சிறிது கொதிக்கும் நீரை சேர்க்கலாம்). இதுதான் ‘வடகறி’. இட்லி, இடியாப்பம், ஆப்பம், பொங்கல் போன்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மசால்வடை மீந்துவிட்டால் கூட இதுபோல் செய்யலாம்’’.
பச்சரிசி 2 கப், தேங்காய் துருவல் amp; 2 டேபிள்ஸ்பூன், சற்றுப் பழையதான (அதாவது, 2, 3 நாட்கள் புளிக்கவைத்த) தேங்காய் தண்ணீர் 2 கப், புழுங்கலரிசி சாதம் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, ஆப்ப சோடா கால் டீஸ்பூன்.
செய்முறை:
இந்த ஆப்பத்துக்காக, தேங்காய் தண்ணீரை 2, 3 நாட்கள் முன்னரே எடுத்து வைக்கவேண்டும். 2 கப் தண்ணீர் என்றால், 2 டீஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து புளிக்கவைக்க வேண்டும். ஆப்பம் செய்யப்போகும் நாளில், அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், தேங்காய் தண்ணீர், சாதம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்தெடுங்கள். நன்கு நைஸாக அரைபட்டதும், உப்பு, ஆப்ப சோடா சேர்த்துக் கரைத்து வையுங்கள். பிறகு, வழக்கம் போல, குழிவான வாணலியிலோ, ஆப்பச்சட்டியிலோ ஆப்பங்களாக ஊற்றி எடுங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள, கடலைக் குழம்பு அல்லது உருளைக்கிழங்கு கறி போன்றவை மிக சுவையாக இருக்கும்.
‘வடகறி’ செய்வது எப்படி?
‘‘நாங்கள் சென்னைக்கு புதுசு. இங்கே வந்த பிறகு, கல்லூரியில் படிக்கும் என் மகன் ஹோட்டலில், நண்பர்கள் வீட்டில் சாப்பிட்ட ‘வடகறி’ என்ற அயிட்டத்தை வீட்டில் செய்யச் சொல்லிக் கேட்கிறான். வடகறி செய்வது எப்படி எனக் கூறுவீர்களா?’’
‘‘ ‘வடகறி’ என்பது சென்னையின் புகழ்பரப்பும் சைட்டிஷ்களில் ஒன்று. அதை செய்யத்
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு 1 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, தேங்காய்ப்பால் ஒரு கப், புதினா, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா ஒன்று, பச்சை மிளகாய் 3.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அந்த மசாலா விழுதில் இருந்து சிறிதளவு எடுத்து, கடலைப் பருப்பு அரைத்த கலவையில் கலந்து, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து, எண்ணெயைக் காயவைத்து சிறுசிறு பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், தக்காளி, அரைத்த மசாலா விழுது, மிளகாய்தூள், மஞ்சள் தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு பாதி அளவு தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் பக்கோடாக்களை உடைத்துப் போடுங்கள். இது 5 நிமிடம் கொதித்ததும் மீதியுள்ள பாலை சேர்த்து கிளறி இறக்குங்கள். (தளதளவென இல்லாவிட்டால், சிறிது கொதிக்கும் நீரை சேர்க்கலாம்). இதுதான் ‘வடகறி’. இட்லி, இடியாப்பம், ஆப்பம், பொங்கல் போன்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மசால்வடை மீந்துவிட்டால் கூட இதுபோல் செய்யலாம்’’.
முகலாய் நெல்லியவல்
தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப், நெல்லிக்காய் amp; 8, கடலைப்பருப்பு அரை கப், தேங்காய் துருவல் 1 கப், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு தலா 10, ஏலக்காய் தூள் சிறிதளவு, நெய் கால் கப், கேசரி பவுடர் ஒரு சிட்டிகை, வெல்லம் (பொடித்தது) ஒரு கப்.
செய்முறை:
மைதா மாவை 1 ஸ்பூன் நெய் விட்டு, கேசரி பவுடர் சேர்த்து, போளி மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். நெல்லிக்காயை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து, ஆறியவுடன் எடுத்து கொட்டை நீக்கவும். அதன் பிறகு, நெல்லிக்காயை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பை சிவக்க வறுத்து, ஊறவைத்து வேகவிட்டு, எடுத்துக்கொள்ளவும். அந்தப் பருப்புடன், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின்பு நெல்லிக்காய் அரைத்த விழுது, கடலைப்பருப்புதேங்காய் விழுது, வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பூரணம் தயார் செய்து, ஏலப்பொடி போட்டு கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, மைதா மாவை சிறிய வட்டமாக இட்டு, பூரணம் வைத்து மூடி போளியாக தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லில் நெய் விட்டு, போளிகளை சுட்டெடுக்கவும். -நெல்லிக்காயை குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கினால் ஈஸியாக மசிக்கலாம். சத்தும் வீணாகாது
வெஜிடபிள் முகலாய்
தேவையானவை:
கோஸ், உருளைக் கிழங்கு, கேரட், நூல்கோல், குடமிளகாய் (எல்லாமே பொடியாக நறுக்கியது), பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை 2 கப், பச்சை மிளகாய் 4, தயிர், தேங்காய் துருவல் தலா 1 கப், சீரகம், கசகசா தலா 2 டீஸ்பூன், பட்டை 1 , இலை சிறிது, இஞ்சி பூண்டு விழுது, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, பாதாம்பருப்பு 5, மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய், நெய் தேவைக்கு.
செய்முறை:
காய்கறிகளை உப்பு, மஞ்சள்தூள், தயிர் போட்டு பிசறி, அரை மணி நேரம் ஊறவிடவும். தேங்காய், சீரகம், மிளகாய், கசகசா, முந்திரி, பாதாம் இவற்றை மைய அரைக்கவும். வாணலி யில் எண்ணெய் காய விட்டு பட்டை, இலை, சோம்பு, கிராம்பு இவற்றை சற்றுத் தட்டிப் போட்டு, 2 டீஸ்பூன் நெய் விடவும். பின் காய்கறிக் கலவை, மிளகாய்தூள் போட்டு மூடி, சிறு தீயில் வேகவிடவும். தயிர் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை போட்டுக் கிளறி, சிறு தீயில் மூடி வைக்கவும். நல்ல பதம் வந்தவுடன் இறக்கி மல்லித்தழை போடவும். சாதம், சப்பாத்தி, தோசை என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் இந்த கிரேவி. பாதாம், முந்திரி, உருளைக்கிழங்கு சேர்க்காதவர்கள் இன்னும் சில பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
அவல் லெமன் கிச்சடி
தேவையானவை:
அவல் ஒன்றரை கப், வறுத்த நிலக்கடலை 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள், கறுப்பு எள், மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், சாம்பார்தூள் 2 டீஸ்பூன், தனியாதூள் 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) முக்கால் கப், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 3 டேபிள்ஸ்பூன், நன்கு பழுத்த தக்காளி 5, நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்றரை டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ரவை போலப் பொடித்துக்கொள்ளவும். நிலக்கடலையைத் தோல் நீக்கி, கரகரப்பாகப் பொடிக்கவும். எள்ளையும் தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறிது நேரம் வெந்நீரில் போட்டெடுத்து, தோலை உரித்து ஜூஸ் எடுக்கவும். அதனுடன் வெல்லத்தூள், தனியாதூள், சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பொடித்த அவலையும் கலக்கவும். அரை மணி நேரம் இந்தக் கலவையை ஊறவைக்கவும். தக்காளி ஜூஸ§டன் தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். மீதி எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அத்துடன் ஊறவைத்த அவல் கலவை சேர்த்துக் கிளறவும். உதிர், உதிராக வரும்போது, மல்லித்தழை சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து பரிமாறவும். ஒரு டீஸ்பூன் தனியா, 2 காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் வறுத்து, கரகரவென்று பொடித்து, இறக்குவதற்கு முன் தூவினால் வாசம் பிரமாதமாக இருக்கும்.
மைதா மாவு - ஒரு கப், நெல்லிக்காய் amp; 8, கடலைப்பருப்பு அரை கப், தேங்காய் துருவல் 1 கப், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு தலா 10, ஏலக்காய் தூள் சிறிதளவு, நெய் கால் கப், கேசரி பவுடர் ஒரு சிட்டிகை, வெல்லம் (பொடித்தது) ஒரு கப்.
செய்முறை:
மைதா மாவை 1 ஸ்பூன் நெய் விட்டு, கேசரி பவுடர் சேர்த்து, போளி மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். நெல்லிக்காயை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து, ஆறியவுடன் எடுத்து கொட்டை நீக்கவும். அதன் பிறகு, நெல்லிக்காயை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பை சிவக்க வறுத்து, ஊறவைத்து வேகவிட்டு, எடுத்துக்கொள்ளவும். அந்தப் பருப்புடன், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின்பு நெல்லிக்காய் அரைத்த விழுது, கடலைப்பருப்புதேங்காய் விழுது, வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பூரணம் தயார் செய்து, ஏலப்பொடி போட்டு கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, மைதா மாவை சிறிய வட்டமாக இட்டு, பூரணம் வைத்து மூடி போளியாக தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லில் நெய் விட்டு, போளிகளை சுட்டெடுக்கவும். -நெல்லிக்காயை குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கினால் ஈஸியாக மசிக்கலாம். சத்தும் வீணாகாது
வெஜிடபிள் முகலாய்
தேவையானவை:
கோஸ், உருளைக் கிழங்கு, கேரட், நூல்கோல், குடமிளகாய் (எல்லாமே பொடியாக நறுக்கியது), பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை 2 கப், பச்சை மிளகாய் 4, தயிர், தேங்காய் துருவல் தலா 1 கப், சீரகம், கசகசா தலா 2 டீஸ்பூன், பட்டை 1 , இலை சிறிது, இஞ்சி பூண்டு விழுது, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, பாதாம்பருப்பு 5, மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய், நெய் தேவைக்கு.
செய்முறை:
காய்கறிகளை உப்பு, மஞ்சள்தூள், தயிர் போட்டு பிசறி, அரை மணி நேரம் ஊறவிடவும். தேங்காய், சீரகம், மிளகாய், கசகசா, முந்திரி, பாதாம் இவற்றை மைய அரைக்கவும். வாணலி யில் எண்ணெய் காய விட்டு பட்டை, இலை, சோம்பு, கிராம்பு இவற்றை சற்றுத் தட்டிப் போட்டு, 2 டீஸ்பூன் நெய் விடவும். பின் காய்கறிக் கலவை, மிளகாய்தூள் போட்டு மூடி, சிறு தீயில் வேகவிடவும். தயிர் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை போட்டுக் கிளறி, சிறு தீயில் மூடி வைக்கவும். நல்ல பதம் வந்தவுடன் இறக்கி மல்லித்தழை போடவும். சாதம், சப்பாத்தி, தோசை என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் இந்த கிரேவி. பாதாம், முந்திரி, உருளைக்கிழங்கு சேர்க்காதவர்கள் இன்னும் சில பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
அவல் லெமன் கிச்சடி
தேவையானவை:
அவல் ஒன்றரை கப், வறுத்த நிலக்கடலை 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள், கறுப்பு எள், மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், சாம்பார்தூள் 2 டீஸ்பூன், தனியாதூள் 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) முக்கால் கப், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 3 டேபிள்ஸ்பூன், நன்கு பழுத்த தக்காளி 5, நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்றரை டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ரவை போலப் பொடித்துக்கொள்ளவும். நிலக்கடலையைத் தோல் நீக்கி, கரகரப்பாகப் பொடிக்கவும். எள்ளையும் தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறிது நேரம் வெந்நீரில் போட்டெடுத்து, தோலை உரித்து ஜூஸ் எடுக்கவும். அதனுடன் வெல்லத்தூள், தனியாதூள், சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பொடித்த அவலையும் கலக்கவும். அரை மணி நேரம் இந்தக் கலவையை ஊறவைக்கவும். தக்காளி ஜூஸ§டன் தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். மீதி எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அத்துடன் ஊறவைத்த அவல் கலவை சேர்த்துக் கிளறவும். உதிர், உதிராக வரும்போது, மல்லித்தழை சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து பரிமாறவும். ஒரு டீஸ்பூன் தனியா, 2 காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் வறுத்து, கரகரவென்று பொடித்து, இறக்குவதற்கு முன் தூவினால் வாசம் பிரமாதமாக இருக்கும்.
சேமியா பால் போளி ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி
தேவையானவை:
சேமியா ஒரு கப், மைதா amp; ஒரு கப், பால் 4 கப், எண்ணெய் ஒன்றரை கப், சர்க்கரைத் தூள் 2 கப், ஏலப்பொடி ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை.
செய்முறை:
சேமியாவை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, சிறிது பால் விட்டு அரைக்கவும். பின் மைதா, நெய்யையும் சேர்த்துப் பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிபோல் இட்டுப் பொரிக்கவும். பொரித்த பூரிகளை தாம்பாளத்தில் அடுக்கவும். பாலைக் காய்ச்சி, ஏலப்பொடி, கேசரி பவுடர் போட்டு, சுடச் சுட பூரிமேல் விடவும். நன்றாக ஊறிய பிறகு, தனித்தனி தாம்பாளத்தில் போட்டு அவரவர் தேவைக்கு ஏற்றவாறு சர்க்கரைப் பொடியை தூவி, ஸ்பூன் போட்டு பரிமாறவும். மிக மிக சுவையான இந்த பால் போளி, வீட்டு விருந்துகளுக்கு செய்வதற்கேற்ற புதுமையான ஸ்வீட். காய்ச்சிய பாலில், சிறிது மில்க்மெயிட் சேர்த்து கரைத்து, பூரி மேல் ஊற்றிக் கொடுத்தால், சர்க்கரை தூளின் அளவைக் குறைத்துக் கொள்ள லாம்.
ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி
தேவையானவை:
உடைத்த சேமியா - அரை கப், உருளைக்கிழங்கு _ கால் கிலோ, சோயா உருண்டை துருவல் _ கால் கப், சோம்பு _ அரை டீஸ்பூன், இஞ்சி _ சிறு துண்டு, பச்சை மிளகாய் _ 3, பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) _ அரை கப், மிளகுதூள் _ முக்கால் டீஸ்பூன், கரம்மசாலா தூள் _ அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் _ அரை டீஸ்பூன், உப்பு _ ருசிக்கேற்ப, வெள்ளை அவல் (வறுத்து பொடித்தது) _ அரை கப், கார்ன்ஃப்ளார் _ கால் கப், எண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை:
சோயா உருண்டை துருவலை ஐந்து நிமிடம் சுடுநீரில் போட்டு, ஊற வைத்து, வடிகட்டி, 23 முறை அதில் குளிர்ந்த நீரை விட்டு, வாடை போக நன்கு அலசி, பிழிந்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். சேமியாவையும் வேகவிட்டு, உதிர் உதிராக, வடிகட்டி வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும், சோம்பு போட்டு வெடித்ததும், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பிழிந்து வைத்த சோயா துருவல் போட்டு, ஒன்றிரண்டு நிமிடம் கிளறவும். அத்துடன் கரம்மசாலா தூள், மிளகுதூள், மஞ்சள்தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். இத்துடன் வெந்த சேமியாவை சேர்த்து கலந்து கொள்ளவும். இக்கலவையை நன்கு ஆறவிட்டு, உருண்டைகளாக உருட்டவும். கார்ன்ஃப்ளாருடன் போதுமான நீர் விட்டு நீர்க்க கரைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கியெடுத்து, அவல் பொடியில் புரட்டி எடுத்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பின் ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். இதனை சூடாக, தக்காளி சாஸ§டன் பரிமாற, சுவையோ சுவை!
கார்ன்ஃப்ளார் மாவுடன் சிறிது கடலைமாவையும் சேர்த்துக் கரைத்தால், கூடுதல் ருசி கிடைக் கும்.
சேமியா ஒரு கப், மைதா amp; ஒரு கப், பால் 4 கப், எண்ணெய் ஒன்றரை கப், சர்க்கரைத் தூள் 2 கப், ஏலப்பொடி ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை.
செய்முறை:
சேமியாவை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, சிறிது பால் விட்டு அரைக்கவும். பின் மைதா, நெய்யையும் சேர்த்துப் பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிபோல் இட்டுப் பொரிக்கவும். பொரித்த பூரிகளை தாம்பாளத்தில் அடுக்கவும். பாலைக் காய்ச்சி, ஏலப்பொடி, கேசரி பவுடர் போட்டு, சுடச் சுட பூரிமேல் விடவும். நன்றாக ஊறிய பிறகு, தனித்தனி தாம்பாளத்தில் போட்டு அவரவர் தேவைக்கு ஏற்றவாறு சர்க்கரைப் பொடியை தூவி, ஸ்பூன் போட்டு பரிமாறவும். மிக மிக சுவையான இந்த பால் போளி, வீட்டு விருந்துகளுக்கு செய்வதற்கேற்ற புதுமையான ஸ்வீட். காய்ச்சிய பாலில், சிறிது மில்க்மெயிட் சேர்த்து கரைத்து, பூரி மேல் ஊற்றிக் கொடுத்தால், சர்க்கரை தூளின் அளவைக் குறைத்துக் கொள்ள லாம்.
ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி
தேவையானவை:
உடைத்த சேமியா - அரை கப், உருளைக்கிழங்கு _ கால் கிலோ, சோயா உருண்டை துருவல் _ கால் கப், சோம்பு _ அரை டீஸ்பூன், இஞ்சி _ சிறு துண்டு, பச்சை மிளகாய் _ 3, பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) _ அரை கப், மிளகுதூள் _ முக்கால் டீஸ்பூன், கரம்மசாலா தூள் _ அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் _ அரை டீஸ்பூன், உப்பு _ ருசிக்கேற்ப, வெள்ளை அவல் (வறுத்து பொடித்தது) _ அரை கப், கார்ன்ஃப்ளார் _ கால் கப், எண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை:
சோயா உருண்டை துருவலை ஐந்து நிமிடம் சுடுநீரில் போட்டு, ஊற வைத்து, வடிகட்டி, 23 முறை அதில் குளிர்ந்த நீரை விட்டு, வாடை போக நன்கு அலசி, பிழிந்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். சேமியாவையும் வேகவிட்டு, உதிர் உதிராக, வடிகட்டி வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும், சோம்பு போட்டு வெடித்ததும், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பிழிந்து வைத்த சோயா துருவல் போட்டு, ஒன்றிரண்டு நிமிடம் கிளறவும். அத்துடன் கரம்மசாலா தூள், மிளகுதூள், மஞ்சள்தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். இத்துடன் வெந்த சேமியாவை சேர்த்து கலந்து கொள்ளவும். இக்கலவையை நன்கு ஆறவிட்டு, உருண்டைகளாக உருட்டவும். கார்ன்ஃப்ளாருடன் போதுமான நீர் விட்டு நீர்க்க கரைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கியெடுத்து, அவல் பொடியில் புரட்டி எடுத்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பின் ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். இதனை சூடாக, தக்காளி சாஸ§டன் பரிமாற, சுவையோ சுவை!
கார்ன்ஃப்ளார் மாவுடன் சிறிது கடலைமாவையும் சேர்த்துக் கரைத்தால், கூடுதல் ருசி கிடைக் கும்.