<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-20287032</id><updated>2011-04-21T15:26:07.234-07:00</updated><category term='நன்றி : இலவசக் கொத்தனார்'/><category term='நன்றி : இலவசக்கொத்தனார்'/><title type='text'>இரவல் சமையல்</title><subtitle type='html'>Articles on  cooking from other useful websites</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://cookoou.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>73</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-1992099379902091783</id><published>2007-03-19T19:56:00.000-07:00</published><updated>2007-03-19T19:57:59.795-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி : இலவசக் கொத்தனார்'/><title type='text'>கொத்து பரோட்டா</title><content type='html'>Frozen பரோட்டா - 1 பாக்கெட்.&lt;br /&gt;&lt;br /&gt;(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)&lt;br /&gt;தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)&lt;br /&gt;முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)&lt;br /&gt;இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)&lt;br /&gt;பச்சை மிளகாய் - 3&lt;br /&gt;கறிவேப்பிலை - கொஞ்சம்&lt;br /&gt;மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி&lt;br /&gt;கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ செய்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.&lt;br /&gt;வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.&lt;br /&gt;இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-1992099379902091783?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/1992099379902091783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/1992099379902091783'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2007/03/blog-post_19.html' title='கொத்து பரோட்டா'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-5423852135011324248</id><published>2007-03-19T19:53:00.000-07:00</published><updated>2007-03-19T19:56:15.205-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி : இலவசக்கொத்தனார்'/><title type='text'>சடுதியில் சாம்பார் சாதம்</title><content type='html'>குக்கரில் வைக்க&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி - 2 கப்&lt;br /&gt;துவரம் பருப்பு - 1 கப்&lt;br /&gt;மஞ்சள் பொடி&lt;br /&gt;பெருங்காயம்&lt;br /&gt;&lt;br /&gt;பொடி செய்து கொள்ள&lt;br /&gt;பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி&lt;br /&gt;கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி&lt;br /&gt;வெந்தயம் - 1 தேக்கரண்டி&lt;br /&gt;மிளகாய்ப் பழம் - 4&lt;br /&gt;மிளகு - 10&lt;br /&gt;கசகசா - 1 தேக்கரண்டி&lt;br /&gt;காய்கறிகள்&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் - பெரிதாக 1&lt;br /&gt;பச்சை மிளகாய் - 4&lt;br /&gt;தக்காளி - 2&lt;br /&gt;கத்திரிக்காய் - சிறிதாக 2&lt;br /&gt;காரட் - பெரிதாக 1&lt;br /&gt;உருளைக்கிழங்கு - பெரிதாக 2&lt;br /&gt;புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு&lt;br /&gt;கறிவேப்பிலைகொத்து&lt;br /&gt;மல்லி&lt;br /&gt;தாளிக்ககடுகு - 1 தேக்கரண்டி&lt;br /&gt;எண்ணை - தேவையான அளவு&lt;br /&gt;நெய் - சிறிதளவு (வேண்டுமானால்)&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா? இப்போ என்ன செய்யணும் அப்படின்னு பார்க்கலாம். ரொம்ப மெனக்கட வேண்டாம். ஒரு பத்து, பனிரெண்டு ஸ்டெப்களில் சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் எல்லாத்தையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்துவிடுங்க. சாதாரணமாக சாதத்திற்கு வைப்பதை விட ஒன்று அல்லது இரண்டு விசில்கள் அதிகம் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொடி செய்வதற்கு அப்படின்னு சொல்லி இருக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் அப்படியே எண்ணை விடாமல் வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகள் அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.&lt;br /&gt;புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;குழம்பு செய்வதற்கான வாணலியை எடுத்துக் கொண்டு சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் முதலில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும்&lt;br /&gt;வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மீதமுள்ள காய்களைப் போட்டு வதக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகள் வதங்கிய பின் அதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை விட்டு , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.&lt;br /&gt;பச்சை வாசனை போன பின்னாடி, நாம் பொடி செய்து வைத்துள்ள பொடியைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.&lt;br /&gt;சிறிது கொதித்த பின் குக்கரில் இருக்கும் சாதம் பருப்பை எடுத்து இதில் சேர்த்து நன்றாகக் கிளரவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாகச் சேர்ந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட்டு கிளறிவிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடும் முன் சிறிது நெய்யை விட்டு கிளறினால் வாசனையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் காய்கறிகள் தேவையான அளவு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பூண்டு, பீன்ஸ், பட்டாணி, கவிப்பூ (காலி பிளவர்) என பிடித்த காய்கறி எல்லாம் போடலாம். பொடி செய்து கொள்ளும் பொழுது அதிலும் சிறிது பெருங்காயம் போடலாம். புளித் தண்ணீருடம் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-5423852135011324248?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/5423852135011324248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/5423852135011324248'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2007/03/blog-post.html' title='சடுதியில் சாம்பார் சாதம்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-115403099573675302</id><published>2006-07-27T13:09:00.000-07:00</published><updated>2006-08-28T16:29:39.376-07:00</updated><title type='text'>பால் ஆப்பம் / வடைகறி</title><content type='html'>தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி  2 கப், தேங்காய் துருவல் amp; 2 டேபிள்ஸ்பூன், சற்றுப் பழையதான (அதாவது, 2, 3 நாட்கள் புளிக்கவைத்த) தேங்காய் தண்ணீர்  2 கப், புழுங்கலரிசி சாதம்  ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு, ஆப்ப சோடா  கால் டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆப்பத்துக்காக, தேங்காய் தண்ணீரை 2, 3 நாட்கள் முன்னரே எடுத்து வைக்கவேண்டும். 2 கப் தண்ணீர் என்றால், 2 டீஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து புளிக்கவைக்க வேண்டும். ஆப்பம் செய்யப்போகும் நாளில், அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், தேங்காய் தண்ணீர், சாதம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்தெடுங்கள். நன்கு நைஸாக அரைபட்டதும், உப்பு, ஆப்ப சோடா சேர்த்துக் கரைத்து வையுங்கள். பிறகு, வழக்கம் போல, குழிவான வாணலியிலோ, ஆப்பச்சட்டியிலோ ஆப்பங்களாக ஊற்றி எடுங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள, கடலைக் குழம்பு அல்லது உருளைக்கிழங்கு கறி போன்றவை மிக சுவையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; ‘வடகறி’ செய்வது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நாங்கள் சென்னைக்கு புதுசு. இங்கே வந்த பிறகு, கல்லூரியில் படிக்கும் என் மகன் ஹோட்டலில், நண்பர்கள் வீட்டில் சாப்பிட்ட ‘வடகறி’ என்ற அயிட்டத்தை வீட்டில் செய்யச் சொல்லிக் கேட்கிறான். வடகறி செய்வது எப்படி எனக் கூறுவீர்களா?’’ &lt;br /&gt;&lt;br /&gt; ‘‘ ‘வடகறி’ என்பது சென்னையின் புகழ்பரப்பும் சைட்டிஷ்களில் ஒன்று. அதை செய்யத்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்:&lt;br /&gt;&lt;br /&gt; கடலைப்பருப்பு  1 கப், பெரிய வெங்காயம்  2, தக்காளி  3, தேங்காய்ப்பால்  ஒரு கப், புதினா, மல்லித்தழை  சிறிது, மிளகாய்தூள்  1 டீஸ்பூன், மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன், உப்பு  ருசிக்கேற்ப, எண்ணெய்  தேவையான அளவு. அரைக்க: இஞ்சி  1 துண்டு, பூண்டு  5 பல், சோம்பு  1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய்  தலா ஒன்று, பச்சை மிளகாய்  3.&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அந்த மசாலா விழுதில் இருந்து சிறிதளவு எடுத்து, கடலைப் பருப்பு அரைத்த கலவையில் கலந்து, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து, எண்ணெயைக் காயவைத்து சிறுசிறு பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், தக்காளி, அரைத்த மசாலா விழுது, மிளகாய்தூள், மஞ்சள் தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு பாதி அளவு தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் பக்கோடாக்களை உடைத்துப் போடுங்கள். இது 5 நிமிடம் கொதித்ததும் மீதியுள்ள பாலை சேர்த்து கிளறி இறக்குங்கள். (தளதளவென இல்லாவிட்டால், சிறிது கொதிக்கும் நீரை சேர்க்கலாம்). இதுதான் ‘வடகறி’. இட்லி, இடியாப்பம், ஆப்பம், பொங்கல் போன்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மசால்வடை மீந்துவிட்டால் கூட இதுபோல் செய்யலாம்’’.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-115403099573675302?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115403099573675302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115403099573675302'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/07/blog-post_115403099573675302.html' title='பால் ஆப்பம் / வடைகறி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-115403094096345878</id><published>2006-07-27T13:08:00.000-07:00</published><updated>2006-08-28T16:34:17.520-07:00</updated><title type='text'>முகலாய் நெல்லியவல்</title><content type='html'>தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;மைதா மாவு - ஒரு கப், நெல்லிக்காய் amp; 8, கடலைப்பருப்பு  அரை கப், தேங்காய் துருவல்  1 கப், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு  தலா 10, ஏலக்காய் தூள்  சிறிதளவு, நெய்  கால் கப், கேசரி பவுடர்  ஒரு சிட்டிகை, வெல்லம் (பொடித்தது)  ஒரு கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மைதா மாவை 1 ஸ்பூன் நெய் விட்டு, கேசரி பவுடர் சேர்த்து, போளி மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். நெல்லிக்காயை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து, ஆறியவுடன் எடுத்து கொட்டை நீக்கவும். அதன் பிறகு, நெல்லிக்காயை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பை சிவக்க வறுத்து, ஊறவைத்து வேகவிட்டு, எடுத்துக்கொள்ளவும். அந்தப் பருப்புடன், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின்பு நெல்லிக்காய் அரைத்த விழுது, கடலைப்பருப்புதேங்காய் விழுது, வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பூரணம் தயார் செய்து, ஏலப்பொடி போட்டு கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, மைதா மாவை சிறிய வட்டமாக இட்டு, பூரணம் வைத்து மூடி போளியாக தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லில் நெய் விட்டு, போளிகளை சுட்டெடுக்கவும். -நெல்லிக்காயை குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கினால் ஈஸியாக மசிக்கலாம். சத்தும் வீணாகாது&lt;br /&gt;&lt;br /&gt; வெஜிடபிள் முகலாய்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கோஸ், உருளைக் கிழங்கு, கேரட், நூல்கோல், குடமிளகாய் (எல்லாமே பொடியாக நறுக்கியது), பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை  2 கப், பச்சை மிளகாய்  4, தயிர், தேங்காய் துருவல்  தலா 1 கப், சீரகம், கசகசா  தலா 2 டீஸ்பூன், பட்டை 1 , இலை  சிறிது, இஞ்சி  பூண்டு விழுது, மல்லித்தழை  சிறிது, மிளகாய்தூள்  1 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு  10, பாதாம்பருப்பு  5, மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய், நெய்  தேவைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகளை உப்பு, மஞ்சள்தூள், தயிர் போட்டு பிசறி, அரை மணி நேரம் ஊறவிடவும். தேங்காய், சீரகம், மிளகாய், கசகசா, முந்திரி, பாதாம் இவற்றை மைய அரைக்கவும். வாணலி யில் எண்ணெய் காய விட்டு பட்டை, இலை, சோம்பு, கிராம்பு இவற்றை சற்றுத் தட்டிப் போட்டு, 2 டீஸ்பூன் நெய் விடவும். பின் காய்கறிக் கலவை, மிளகாய்தூள் போட்டு மூடி, சிறு தீயில் வேகவிடவும். தயிர் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை போட்டுக் கிளறி, சிறு தீயில் மூடி வைக்கவும். நல்ல பதம் வந்தவுடன் இறக்கி மல்லித்தழை போடவும். சாதம், சப்பாத்தி, தோசை என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் இந்த கிரேவி.  பாதாம், முந்திரி, உருளைக்கிழங்கு சேர்க்காதவர்கள் இன்னும் சில பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; அவல் லெமன் கிச்சடி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;அவல்  ஒன்றரை கப், வறுத்த நிலக்கடலை  2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள், கறுப்பு எள், மஞ்சள்தூள்  தலா அரை டீஸ்பூன், சாம்பார்தூள்  2 டீஸ்பூன், தனியாதூள்  1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)  முக்கால் கப், தேங்காய் துருவல்  2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு  3 டேபிள்ஸ்பூன், நன்கு பழுத்த தக்காளி  5, நறுக்கிய பச்சை மிளகாய்  ஒன்றரை டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை  ஒரு டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ரவை போலப் பொடித்துக்கொள்ளவும். நிலக்கடலையைத் தோல் நீக்கி, கரகரப்பாகப் பொடிக்கவும். எள்ளையும் தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறிது நேரம் வெந்நீரில் போட்டெடுத்து, தோலை உரித்து ஜூஸ் எடுக்கவும். அதனுடன் வெல்லத்தூள், தனியாதூள், சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பொடித்த அவலையும் கலக்கவும். அரை மணி நேரம் இந்தக் கலவையை ஊறவைக்கவும். தக்காளி ஜூஸ§டன் தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். மீதி எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அத்துடன் ஊறவைத்த அவல் கலவை சேர்த்துக் கிளறவும். உதிர், உதிராக வரும்போது, மல்லித்தழை சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து பரிமாறவும்.  ஒரு டீஸ்பூன் தனியா, 2 காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் வறுத்து, கரகரவென்று பொடித்து, இறக்குவதற்கு முன் தூவினால் வாசம் பிரமாதமாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-115403094096345878?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115403094096345878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115403094096345878'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/07/blog-post_115403094096345878.html' title='முகலாய் நெல்லியவல்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-115403061834311093</id><published>2006-07-27T13:02:00.000-07:00</published><updated>2006-08-28T16:37:20.256-07:00</updated><title type='text'>சேமியா பால் போளி ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி</title><content type='html'>தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;சேமியா  ஒரு கப், மைதா amp; ஒரு கப், பால்  4 கப், எண்ணெய்  ஒன்றரை கப், சர்க்கரைத் தூள்  2 கப், ஏலப்பொடி  ஒரு சிட்டிகை, கேசரி பவுடர்  ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;சேமியாவை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, சிறிது பால் விட்டு அரைக்கவும். பின் மைதா, நெய்யையும் சேர்த்துப் பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிபோல் இட்டுப் பொரிக்கவும். பொரித்த பூரிகளை தாம்பாளத்தில் அடுக்கவும். பாலைக் காய்ச்சி, ஏலப்பொடி, கேசரி பவுடர் போட்டு, சுடச் சுட பூரிமேல் விடவும். நன்றாக ஊறிய பிறகு, தனித்தனி தாம்பாளத்தில் போட்டு அவரவர் தேவைக்கு ஏற்றவாறு சர்க்கரைப் பொடியை தூவி, ஸ்பூன் போட்டு பரிமாறவும். மிக மிக சுவையான இந்த பால் போளி, வீட்டு விருந்துகளுக்கு செய்வதற்கேற்ற புதுமையான ஸ்வீட். காய்ச்சிய பாலில், சிறிது மில்க்மெயிட் சேர்த்து கரைத்து, பூரி மேல் ஊற்றிக் கொடுத்தால், சர்க்கரை தூளின் அளவைக் குறைத்துக் கொள்ள லாம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உடைத்த சேமியா - அரை கப், உருளைக்கிழங்கு _ கால் கிலோ, சோயா உருண்டை துருவல் _ கால் கப், சோம்பு _ அரை டீஸ்பூன், இஞ்சி _ சிறு துண்டு, பச்சை மிளகாய் _ 3, பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) _ அரை கப், மிளகுதூள் _ முக்கால் டீஸ்பூன், கரம்மசாலா தூள் _ அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் _ அரை டீஸ்பூன், உப்பு _ ருசிக்கேற்ப, வெள்ளை அவல் (வறுத்து பொடித்தது) _ அரை கப், கார்ன்ஃப்ளார் _ கால் கப், எண்ணெய்  தேவைக்கேற்ப.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;சோயா உருண்டை துருவலை ஐந்து நிமிடம் சுடுநீரில் போட்டு, ஊற வைத்து, வடிகட்டி, 23 முறை அதில் குளிர்ந்த நீரை விட்டு, வாடை போக நன்கு அலசி, பிழிந்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். சேமியாவையும் வேகவிட்டு, உதிர் உதிராக, வடிகட்டி வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும், சோம்பு போட்டு வெடித்ததும், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பிழிந்து வைத்த சோயா துருவல் போட்டு, ஒன்றிரண்டு நிமிடம் கிளறவும். அத்துடன் கரம்மசாலா தூள், மிளகுதூள், மஞ்சள்தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். இத்துடன் வெந்த சேமியாவை சேர்த்து கலந்து கொள்ளவும். இக்கலவையை நன்கு ஆறவிட்டு, உருண்டைகளாக உருட்டவும். கார்ன்ஃப்ளாருடன் போதுமான நீர் விட்டு நீர்க்க கரைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கியெடுத்து, அவல் பொடியில் புரட்டி எடுத்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பின் ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். இதனை சூடாக, தக்காளி சாஸ§டன் பரிமாற, சுவையோ சுவை!&lt;br /&gt;கார்ன்ஃப்ளார் மாவுடன் சிறிது கடலைமாவையும் சேர்த்துக் கரைத்தால், கூடுதல் ருசி கிடைக் கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-115403061834311093?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115403061834311093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115403061834311093'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/07/blog-post_115403061834311093.html' title='சேமியா பால் போளி ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-115403052991909884</id><published>2006-07-27T13:01:00.000-07:00</published><updated>2006-08-28T16:40:18.576-07:00</updated><title type='text'>எரிசேரி/ கப்பக் கஞ்சி / சக்கப் பிரதமன்</title><content type='html'>எரிசேரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;முழு பாசிப்பயறு (அல்லது) காராமணி  அரை கப், பூசணிக்காய் amp; ஒரு கீற்று, வாழைக்காய்  1 (அல்லது) சேனைக்கிழங்கு  ஒரு துண்டு, மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, உப்பு  தேவையான அளவு. அரைக்க: தேங்காய்  ஒரு மூடி, சீரகம்  ஒரு டீஸ்பூன், பூண்டு (விருப்பப்பட்டால்)  2 பல், காய்ந்த மிளகாய்  6லிருந்து 8. தாளிக்க: தேங்காய் எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன், கடுகு  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது, தேங்காய் துருவல்  ஒரு டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பூசணிக்காய், வாழைக்காய் இரண்டையும் தோல் சீவி, சிறு துண்டுகளாக்குங்கள். பாசிப்பயறை வேகவிடுங்கள். பாதியளவு வேகும்போது, நறுக்கிய காய்களை அதனுடன் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவிடுங்கள். காய்கறிகள் வெந்ததும் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துச் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதிக்கும் எரிசேரி. இப்போது, தேங்காய் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தேங்காய் துருவலை போட்டு, அது பொன்னிறமாகச் சிவந்ததும் கொதிக்கும் எரிசேரியில் கொட்டுங்கள். கேரளத்தின் பாரம்பரியக் கூட்டு வகை இது. குறிப்பு: காராமணி சேர்ப்பதானால், வறுத்து, வேகவைத்து, பிறகு காய்களை சேருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சக்கப் பிரதமன்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பலாச்சுளைகள்  10, வெல்லம் (பொடித்தது)  ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால்  ஒரு கப், ஏலக்காய் தூள்  சிட்டிகை, நெய்  3 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பலாச்சுளைகளை விதை நீக்கிப் பொடியாக நறுக்குங்கள். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை காயவைத்து, நறுக்கிய பலாச்சுளைகளை வதக்குங்கள். பிறகு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளுங்கள். அரைத்த பலாச்சுளை விழுதுடன், வெல்லப்பாகை சேர்த்து, குறைந்த தீயில், விடாமல் கிளறுங்கள். கடைசியில் தேங்காய்ப்பாலை ஊற்றி, ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். மீதியிருக்கும் நெய்யையும் சேருங்கள். பலாச்சுளை மணமும் தேங்காய்ப்பால் சேர்ந்த சுவையும் உங்கள் மனசையும் நாவையும் கட்டிப் போடும். கேரளத்தின் தலையாய இனிப்பு இது.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பக் கஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; சிகப்பரிசி (புட்டரிசி)  அரை கப், பரங்கிக்காய்  சிறு துண்டு, வாழைக்காய்  பாதி, தேங்காய்ப்பால்  ஒரு கப், உப்பு  தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt; செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;காய்களை தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரிசியை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெந்த பிறகு, கரண்டியால் மசித்து விடுங்கள். அதனுடன், கொதிக்கும் நீர் 3 கப் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளையும் சேருங்கள். காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேங்காய்ப் பாலையும் ஊற்றுங்கள். கொதித்ததும் இறக்குங்கள். மணக்கும் கஞ்சி ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள, மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து விரல்நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளலாம். அல்லது, காய்ந்த மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தும் தொட்டுக் கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-115403052991909884?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115403052991909884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115403052991909884'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/07/blog-post_115403052991909884.html' title='எரிசேரி/ கப்பக் கஞ்சி / சக்கப் பிரதமன்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-115402962839623996</id><published>2006-07-27T12:47:00.000-07:00</published><updated>2006-08-28T16:43:58.870-07:00</updated><title type='text'>ஜாதி நாரத்தங்காய் சாதம் இன்ன பிற ....</title><content type='html'>ஜாதி நாரத்தங்காய் சாதம்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; வடித்த சாதம்  2 கப், நாரத்தங்காய் amp; 1, தேங்காய்துருவல்  1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய்  2, காய்ந்த மிளகாய்  2, உப்பு  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது. தாளிக்க: கடுகு  கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  அரை டீஸ்பூன், பெருங்காயப்பொடி  கால் டீஸ்பூன், எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள்  சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; நாரத்தங்காயைப் பிழிந்து சாறெடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு இவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து அந்த விழுதை சாதத்துடன் சேர்க்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை தாளித்து சாதத்தில் கொட்டி, கடைசியாக நாரத்தங்காய் சாறையும் விட்டு எல்லா வற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி இறக்கவும்.   பித்தத்துக்கு மிகவும் நல்லது. இதே போன்று கிடாரங் காய் சாறு விட்டும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; கடுகோரை&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; வடித்த சாதம்  2 கப். அரைக்கவேண்டியவை: தேங்காய் துருவல்  1 டேபிள்ஸ்பூன், கடுகு  1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  5, புளி  கொட்டைப்பாக்கு அளவு, வெல்லம்  ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், உப்பு  அரை டீஸ்பூன், பெருங்காயம்  சிறிது, கறிவேப்பிலை  சிறிது. தாளிக்க: கடுகு  கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு  அரை டீஸ்பூன், வேர்க்கடலை  ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது, எண்ணெய்  கால் கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, பின் அரைத்த விழுதையும் போட்டு நன்றாக வதக்கவும். பின் வடித்த சாதத்தைப் போட்டு கிளறி இறக்கவும். ஆடி 18க்கு செய்ய அருமையான சித்ரான்னம், கர்நாடகா ஸ்பெஷலான இந்த கடுகோரை! &lt;br /&gt;அரைக்கும் சாமான்களில் கடுகுக்கு பதில் எள் சேர்த்து இதே போன்றே செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மல்டி புரோட்டீன் ரைஸ்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; வடித்த சாதம்  2 கப், வேர்க்கடலை  ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை  ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு  ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு  5, பாதாம்பருப்பு  5, காய்ந்த மிளகாய்  4, பெருங் காயப் பொடி  கால் டீஸ்பூன், உப்பு  அரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வேர்க்கடலை, முந்திரி, பாதாம் இவை களை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை இவைகளை ஒன்றாக வறுத்துக் கொள்ளவும். மிளகாயை ஒரு துளி எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், உப்பு, பெருங்காயப் பொடி இவைகளை பொடி செய்து பின்னர் அவற்றுடன் வேர்க்கடலை, முந்திரி, பாதாம் இவைகளை போட்டு பொடி செய்யவும். பின்னர் இந்த பொடியை சாதத்தில் போட்டு கலந்து பரிமாறவும். சுவையான புரோட்டீன் ரைஸ் தயார்.வேர்க்கடலை, பாதாம், முந்திரி இவைகளை கடைசியில் தான் போட்டு பொடி செய்ய வேண்டும். முதலிலேயே போட்டால் மற்ற பருப்புகள் பொடியாகாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-115402962839623996?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115402962839623996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115402962839623996'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/07/blog-post_115402962839623996.html' title='ஜாதி நாரத்தங்காய் சாதம் இன்ன பிற ....'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-115402950867156454</id><published>2006-07-27T12:45:00.000-07:00</published><updated>2006-08-28T16:49:10.856-07:00</updated><title type='text'>பாகற்காய் பிரியாணி/ ஆனியன் பிரியாணி / நொய் பாயசம்</title><content type='html'>பாகற்காய் பிரியாணி&lt;br /&gt;&lt;br /&gt; தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசுமதி அரிசி  ஒரு கப், பாகற்காய் (நடுத்தர சைஸ்) amp; 1, பெரிய வெங்காயம்  2, பால்  ஒரு கப், எலுமிச்சம்பழச் சாறு  2 டீஸ்பூன், மிளகாய்தூள்  ஒரு டீஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது  2 டீஸ்பூன், உப்பு  தேவையானது, புதினா, மல்லித்தழை  தலா சிறிதளவு, வினிகர்  2 டீஸ்பூன். தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய்  தலா 2, நெய்  3 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; அரிசியைக் கழுவி ஒரு கப் தண்ணீரில் ஊற வையுங்கள். பாகற்காயை வில்லைகளாகவும் வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். பாகற்காயில் வினிகரையும் ஒரு சிட்டிகை உப்பையும் கலந்து பிசறி வையுங்கள். குக்கரில் நெய்யைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, அவை பொரிந்ததும் பாகற்காயைப் பிழிந்து போட்டு சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி  பூண்டு விழுது, மிளகாய்தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, உப்பு, பால், பாசுமதி அரிசி (தண்ணீருடன்), எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி போட்டு ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் வைத்து இறக்குங்கள். சூடாகப் பரிமாறுங்கள். பாகற்காய்க்கே உரிய கசப்பு லேசாக இருந்தாலும், ‘இது வரை இப்படி ஒரு பிரியாணியை சாப்பிட்டதே இல்லை’ என்று சர்டிபிகேட் கொடுப்பார்கள் சாப்பிட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனியன் பிரியாணி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பாசுமதி அரிசி  ஒரு கப், சின்ன வெங்காயம்  15, பூண்டு  6 பல், பச்சை மிளகாய்  3, பால்  ஒரு கப், உப்பு  தேவையான அளவு. தாளிக்க: பட்டை  ஒரு துண்டு, சீரகம்  அரை டீஸ்பூன், நெய்  3 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியைக் கழுவி ஒரு கப் தண்ணீர், பால் சேர்த்து ஊற வையுங்கள். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து இரண்டு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை கீறுங்கள். குக்கரில் நெய்யைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து சிட்டிகை உப்பு சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்குங்கள். இவை வதங்கியதும் அரிசியை, ஊற வைத்த பால் + தண்ணீருடன் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு ஒரு விசில் வந்ததும், தீயை குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நொய் பாயசம்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பச்சரிசி நொய்  அரை கப், கெட்டியான தேங்காய்ப்பால்  ஒரு கப், வெல்லம் (பொடித்தது)  ஒன்றரை கப் (பாகு வெல்லமாக இருந்தால், ஒன்றேகால் கப்), நெய்  கால் கப், ஏலக்காய்தூள்  அரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt; செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அரிசி நொய்யை சேருங்கள். சிறுதீயில், நன்கு குழைய வேகவிடுங்கள். இன்னொரு அடுப்பில், வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, வெந்து கொண்டிருக்கும் நொய்யுடன் சேருங்கள். விடாமல் கிளறி, அவ்வப்போது சிறிது நெய்யும் சேருங்கள். நன்கு வெந்து, பாகு வாசனை வரும்போது கீழே இறக்கி, மீதமுள்ள நெய், தேங்காய்ப்பால், ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறுங்கள். குறிப்பு: நொய் வேகும்வரை விடாமல் கிளறவேண்டும். இல்லையெனில் கட்டிபடும். இறக்கும்போது கெட்டியாக இருந்தால், தேவையான அளவு கொதிக்கும் நீரை சேர்த்துக்கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-115402950867156454?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115402950867156454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115402950867156454'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/07/blog-post_115402950867156454.html' title='பாகற்காய் பிரியாணி/ ஆனியன் பிரியாணி / நொய் பாயசம்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-115402943781335117</id><published>2006-07-27T12:43:00.000-07:00</published><updated>2006-08-28T16:46:28.146-07:00</updated><title type='text'>அசைவம் - ஈரல் பிரியாணி</title><content type='html'>ஈரல் பிரியாணி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; ஈரல்  200 கிராம், பிரியாணி அரிசி amp; ஒரு கப், தக்காளி  3, பெரிய வெங்காயம்  2, மிளகு  ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி  ஒரு துண்டு, பூண்டு  7 பல், பட்டை  1, ஏலக்காய்  3, லவங்கம்  1, மிளகாய்தூள்  கால் டீஸ்பூன், தனியாதூள்  கால் டீஸ்பூன், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, உப்பு  அரை டீஸ்பூன், மல்லித்தழை  ஒரு கைப்பிடி, புதினா  10 இலை, கறிவேப்பிலை  5 இலை, எண்ணெய்  கால் கப், நெய்  2 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ஈரலை நன்கு கழுவி, பொடியாக நறுக்குங்கள். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் மிளகு முதல் உப்பு வரை சேர்த்து, நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், தக்காளி போட்டு வதக்குங்கள். வதங்கியபின், அரைத்த மசாலாவைப் போட்டு, ஈரலையும் சேர்த்து, சுருளச் சுருள வதக்குங்கள். (கவனிக்கவும்: தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை). வதங்கும்போதே புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் கக்கும் வரை வதக்குங்கள். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்துவிடுங்கள். இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, உப்புப் போட்டு, ஊறவைத்த அரிசியைச் சேர்த்து அரைவேக்காடாக வடித்துக்கொள்ளுங்கள். வடித்த சாதத்தை, வதங்கிக்கொண்டிருக்கும் ஈரல் தொக்கில் சேர்த்துக் கிளறி, ‘தம்’ போடுங்கள். 5 நிமிடம் கழித்து, இறக்கி சுடச்சுடப் பரிமாறுங்கள். காரசாரமான பிரியாணி இது.&lt;br /&gt;&lt;br /&gt;முந்திரிப்பால் கைமா பிரியாணி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பாசுமதி அரிசி  ஒரு கப், மட்டன் கைமா (கொத்துக்கறி)  150 கிராம், முந்திரி  50 கிராம், திராட்சை  10, நெய்  கால் கப், எண்ணெய்  3 டீஸ்பூன், இஞ்சி  பூண்டு விழுது  2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்  தலா 1, ஏலக்காய்  3, பெரிய வெங்காயம்  1, தயிர்  கால் கப், பச்சை மிளகாய்  5, புதினா  ஒரு கைப்பிடி, உப்பு  அரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பிரியாணி அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். கைமாவைக் கழுவி எடுத்துவையுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்குங்கள். முந்திரியை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து, ஊறியதும், மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரையுங்கள். அரைத்ததை தேங்காய்ப்பால் போல கெட்டியாக வடிகட்டி, திப்பி இல்லாமல் ஒரு கப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். பட்டை, லவங்கம், ஏலக்காய் மூன்றையும் நைஸாகப் பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு, பொன் வறுவலாக வதக்குங்கள். நன்கு வதங்கியதும், பட்டை, லவங்கத் தூள் போட்டுப் பொரிந்ததும், இஞ்சி  பூண்டு விழுது, புதினா போட்டு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், தயிர், உப்பு சேர்த்து, அத்துடன் கைமாவையும் போட்டு வதக்குங்கள். வெந்தபிறகு, வடிகட்டி வைத்திருக்கும் முந்திரிப்பாலைத் தூக்கி ஊற்றி, அது கொதிக்கும்போது அரிசியைப் போட்டு, அது வெந்து, தண்ணீர் வற்றி ‘தளதள’வென வரும்போது தீயைக் குறைத்து, நெய்யில் வறுத்த திராட்சையைச் சேர்த்து 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள். ‘பொலபொல’வென வந்ததும் இறக்குங்கள். இந்த பிரியாணி, முந்திரியின் சுவையும் மணமும் சேர்ந்து, படு ‘ரிச்’சாக இருக்கும். குறிப்பு: முந்திரிப்பால் அடிப்பிடிக்கும் என்பதால் குக்கரில் இந்த பிரியாணியை செய்யமுடியாது. பாத்திரத்தில் செய்யும்போது கூட, நன்கு கிளறிவிட வேண்டும். இல்லையெனில் அடிப்பிடித்து விடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-115402943781335117?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115402943781335117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/115402943781335117'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/07/blog-post_27.html' title='அசைவம் - ஈரல் பிரியாணி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114445205177593230</id><published>2006-05-12T16:20:00.000-07:00</published><updated>2006-05-12T14:02:08.126-07:00</updated><title type='text'>ஐஸ்க்ரீம் வகைகள்</title><content type='html'>இதோ கோடை காலம் தொடங்கி விட்டது. கொளுத்தும் வெயிலுக்கு ஜில்லென்று என்ன சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர் கள். உங்கள் யோசனையில் நிச்சயமாக ஐஸ்க்ரீம்தான் முதலில் நினைவிற்கு வந்திருக்கும். இதோ உங்களுக்காகவே நீங்கள் வீட்டிலே சுலபமாக செய்யக்கூடிய சில சிம்பிள் ஐஸ்க்ரீம் ரெஸிபிகளைத் தருகிறார் ‘மெனுராணி’ செல்லம்.&lt;br /&gt;ஐஸ்க்ரீம் செய்யப் போவதற்கு முன் இந்த டிப்ஸை முதலில் படியுங்கள். பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ஐஸ்க்ரீம் செய்ய ஜி.எம்.எஸ். மற்றும் ஸ்டெபிளைசர் ஆகியவை கிடைக்கும். இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்தாலே போதும்... எந்த ஃப்ளேவர் ஐஸ்க்ரீமாக இருந்தாலும் சாஃப்டாக வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பைனாப்பிள் ஐஸ்கிரீம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்&lt;/strong&gt;&lt;/em&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;பைனாப்பிள்_4 ஸ்லைஸ்கள்பால்பவுடர்_1 கப்தண்ணீர்_2 கப்சர்க்கரை_1 கப்ப்ரெஷ் க்ரீம்_1 கப்ஜி.எம்.எஸ்._லு தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டிபைனாப்பிள் எசென்ஸ் _1 தேக்கரண்டிமஞ்சள் ஃபுட் கலர் _ சிட்டிகையளவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;செய்முறை:&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிதளவு தண்ணீரில் பைனாப்பிள் ஸ்லைஸ்களை போட்டுக் கொதிக்க வையுங்கள். வேகவைத்த பைனாப்பிள் ஸ்லைஸ்களை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பால் பவுடருடன் தண்ணீர் கலந்து பிறகு க்ரீம், எசென்ஸ், பைனாப்பிள் துண்டுகள், சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். கடைசியாக ஜி.எம்.எஸ்., ஸ்டெபிளைசர் கலவையைச் சேர்த்துவிட, ஐஸ்க்ரீம் கலவை தயார்!&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஃப்ரீசரில் செட் செய்து இறுகியதும் சுவைத்து சாப்பிடலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காஃபி பிரலைன் ஐஸ்க்ரீம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால் பவுடர் _ 1 கப்தண்ணீர் _ 2 கப்சர்க்கரை _ 1 கப்ஜி.எம்.எஸ். _ அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர் _ 1 தேக்கரண்டிக்ரீம் _ 1 கப்டிகாஷன் அல்லதுஇன்ஸ்டெண்ட் காஃபி பொடி(வெந்நீரில் கலந்தது) _ அரை கப்காஃபி எசென்ஸ் _ 2 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஃபியே பிடிக்காதவர்களுக்கும் இந்த காஃபி ஐஸ்கிரீம் பிடிக்கும். வீட்டிலேயே பில்டர் காபி தயாரிப்பவர்கள் டிகாஷனை உபயோகப்படுத்தலாம். வீட்டில் டிகாஷன் செய்யாதவர்கள், எந்த இன்ஸ்டண்ட் பொடியிருந்தாலும் அதை சிறிதளவு வெந்நீரில் கலந்து கொண்டு பயன்படுத்தலாம்.&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், தண்ணீர், சர்க்கரை, கிரீம் முதலியவைகளைக் கலக்கவும். பின் காஃபி டிகாஷனைச் சேர்க்கவும். (சூடாக இருக்கக் கூடாது) டிகாஷன் போடுபவர்கள், எஸென்ஸ் போட அவசியமில்லை. கலர், மணம், ருசி எல்லாம் அதிலேயே அடங்கி விடும். எல்லாம் கலந்ததும் கடைசியாக ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையைச் சேர்த்து இந்தக் கலவையை கலக்கவும். ஒரு வாயகன்ற அதிக உயரமில்லாத அலுமினிய டிரேயில் கொட்டி ஃப்ரிட்ஜில் செட் செய்யவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ப்ரலைன் செய்முறை&lt;/em&gt;&lt;/strong&gt; :பாதாம் _ 1 கப்சர்க்கரை _ 1 கப்தட்டில் தடவ _ வெண் ணெய் சிறிதளவு&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாதாமையும் சர்க்கரையையும் சேர்ந்து, ஒரு வாணலியில் சூடாக்கவும். கிளறக் கிளற சர்க்கரை இளகி, தேன் கலரில் வரும். இது பாதாமுடன் சேர்த்து ஒரு கலவை போல் இருக் கும். கலர் பொன்னிற மானவுடன் வாசனை வரும். உடனே வாணலியிலிருந்து எடுத்து வெண்ணை தடவிய தட்டில் பரத்தி ஆற விடுங்கள். பிறகு தட்டி லிருந்து எடுத்துக் கொட்டி கரகர வென்று பொடிக்கவும்.&lt;br /&gt;இதை தயாரித்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம் மேலேயும் இதைத் தூவலாம். வெண்ணிலா ஐஸ்கிரீம் மேல் தூவலாம். தேவைப் படும்போது ஃபிரெஷ்ஷாக செய்து கொள்ளலாம். நீண்ட நாட்கள் வைத்திருந்தால் நமுத்து விடும். சில மணி நேரங்கள் வரைதான் இது ‘கிரிஸ்ப்’ ஆக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராஸ்பெர்ரி ஐஸ்கிரீம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தேவையான பொருட்கள்&lt;/em&gt;&lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர்_2 கப்பால்பவுடர்_1 கப் சர்க்கரை _ 1 கப்கிரீம் _ 1 கப்ராஸ்ப்பெர்ரி எசென்ஸ் _ 1 தேக்கரண்டிரோஸ் ஃபுட் கலர் _ சில துளிகள்ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரும், பால் பவுடரும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். அத்துடன் சர்க்கரை, கிரீம், எசென்ஸ், கலர் முதலியவை சேர்த்து, கடைசியில் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையும் சேர்த்து பிரிட்ஜில் செட் செய்யவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்கிரீம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தேவையான பொருட்கள் :&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால்பவுடர் _ 1 கப்ஆரஞ்சு ஷ§ஸ் _ அரை கப்தண்ணீர் _ 2 கப்சர்க்கரை _ 1 கப்கிரீம் _ 1 கப்டூட்டிஃப்ரூட்டிஎஸென்ஸ் _ 1தேக்கரண்டிரோஸ் அல்லது ஆரஞ்சு கலர்_சில துளிகள்.ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;செய்முறை :&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; வழக்கம் போல் ஜி.எம்.எஸ். மற்றும் ஸ்டெபிளைசர் கலவையைக் கலந்து வைக்கவும். பால், தண்ணீர் இரண்டையும் கலந்து பின்பு கிரீம், எஸென்ஸ், (டூட்டி ஃப்ரூட்டி எஸென்ஸ் கிடைக்கவில்லை என்றால்&lt;br /&gt;1 தேக்கரண்டி ஐஸ்கிரீம் எசென்ஸ் சேர்க்கலாம்.) கலர், ஆரஞ்சு ஷ§ஸ் இவற்றைச் சேர்த்து, கடைசியில் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவையையும் சேர்க்கவும்.&lt;br /&gt;இவற்றுடன், 50 கிராம் முந்திரி, 50 கிராம் செர்ரி, 50 கிராம் டூட்டி ஃப்ரூட்டி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கலவையுடன் சேர்க்கவும்.&lt;br /&gt;ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கிரீம் செய்தால், கலவை கொஞ்சம் கெட்டியான பிறகு சேர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலிலேயே சேர்த்தால் பருப்புக் கலவை பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள் &lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;பால் பவுடர் _ 1 கப்சர்க்கரை _1 கப்க்ரீம்_1 கப்தண்ணீர்_2 கப்பட்டர் ஸ்காட்ச் எஸென்ஸ் _2 தேக்கரண்டி மஞ்சள் கலர்_சிறிதளவு (கேக் அலங்கரிக்க உபயோகிக்கும் கலர்)ஜி.எம்.எஸ்._அரை தேக்கரண்டிஸ்டெபிளைசர்_1 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால் பவுடரைத் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பால் ரெடியானவுடன் ஜி.எம்.எஸ். ஸ்டெபிளைசர் கலவை, கிரீம் கலர், எஸென்ஸ், சர்க்கரை முதலானவை சேர்த்துக் கலவையை டிரேயில் கொட்டி, ஃப்ரிட்ஜில் செட் செய்யுங்கள். பரிமாறும் முன் பட்டர் ஸ்காட்ச் எஸன்ஸ் கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;பட்டர் ஸ்காட்ச் செய்யும் முறை: சுமார் இரண்டு கப் சர்க்கரையை ஒரு கடாயில் போட்டு, கைவிடாமல் (தண்ணீரோ, எண்ணையோ சேர்க்காமல்) கிளற வேண்டும். சர்க்கரை இளகி பொன்னிறமாக தளதளவென்று கொப்புளம் வரும் நிலையில், நிறைய வெண்ணை (சுமார் 1 மேஜைக்கரண்டி) தடவிய தட்டில், சுடச்சுட கொட்டி விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உருக்கிய சர்க்கரை ஒரு பலகை போல் எடுக்க வரும். அதை நொறுக்கினால், பளபளவென்று கண்ணாடித்தூள் போல் நொறுங்கி விடும். இதுவே பட்டர் ஸ்காட்ச். இதைத் தயார் செய்த ஐஸ்கிரீம் மேல் தூவிவிட, பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் சுவைக்க தயார்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114445205177593230?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114445205177593230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114445205177593230'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_114445205177593230.html' title='ஐஸ்க்ரீம் வகைகள்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746794362329509</id><published>2006-05-12T14:04:00.000-07:00</published><updated>2006-05-12T14:05:43.636-07:00</updated><title type='text'>உணவு போல் மனசு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p28.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p28.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;‘‘பச்சை மிளகாயைக் கடிச்சிட்டியா? இப்படி ‘சுள்’னு எரிஞ்சி விழறியே!’’ என்பது நாம் சாதாரணமாகப் பேசும் உரையாடல்தான். மிளகாயைக் கடித்தால், பேச்சு ‘சுள்’ளென்று வருமா என்பது எந்த அளவுக்கு உண்மையோ... தெரியவில்லை! ஆனால், நம் குணத்தையும் எண்ண ஓட்டத்தையும் மாற்றுகிற சக்தி உணவுக்கு உண்டு’’ என்கிறார், ஊட்டச் சத்து நிபுணரான ஷைனி சந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷைனி சொல்லும் உணவு மந்திரங்கள் சில இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;‘‘மூளையில் செரடோனின், டோபமின், நார்எபிநெஃப்ரைன் என்கிற மூன்று ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்’ இருக்கின்றன. இவைதான் தகவல்களை உருவாக்குவது, முக்கியமான தகவல்களை அனுப்புவது, அவற்றைப் பாதுகாப்பது... என்கிற மூன்று முக்கியமான வேலைகளையும் செய்கின்றன.எனவேதான் இவற்றுக்கு மூளையின் ‘ரசாயன தூதுவர்கள்’ (கெமிக்கல் மெசெஞ்சர்ஸ்) என்று பெயர். இந்த மூன்றும், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் கிடைக்கின்றன.&lt;br /&gt;செரடோனின், நம்மை அமைதியாக, ரிலாக்ஸ்டாக வைத்திருக்கும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மற்ற இரண்டும் நம்மை உஷாராகவும் கவனத்துடனும் சக்தியுடனும் வைத்திருப்பதுடன், எந்த வேலை யையும் செய்வதற்குத் தூண்டு கோலாகவும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நியூரோ டிரான்ஸ் மிட்டர்களைத் தூண்டும் ஊட்டச்சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;செரடோனின், ‘காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’ நிறைந்த உணவுகளில் இருக்கிறது. அதாவது, கைக்குத்தல் அரிசி, சிவப்பு அவல், கேழ்வரகு, கம்பு, சோளம், முழு கோதுமை மாவு, பருப்புகள், ராஜ்மா, பச்சைப் பயறு, பட்டாணி, உருளைக்கிழங்கு, கோதுமை பிரெட் ஆகிய தானியங்கள் ‘காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’ அடங்கியவை. ரிலாக்ஸ்டாக இருக்க விரும்புகிறவர்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புரோட்டீன் நிரம்பிய உணவுகளை சேர்க்கும்போது மற்ற இரு டிரான்ஸ்மிட்டர்களான டோபமினும், நார்எபிநெஃப்ரைனும் தூண்டப்படுகின்றன. பாதாம், முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், மீன், முட்டை, முளை கட்டிய பயறுகள், பருப்புகள் ஆகியவை புரோட்டீன் உணவுகள். கால் சென்டர்கள் மற்றும் இரவு ஷிஃப்ட்களில் வேலை செய்பவர்கள் புரோட்டீன் நிறைந்த உணவை இரவில் உட்கொண்டால், சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடியும் (இரவில் நன்கு தூங்க விரும்பினால், புரோட்டீன் அடங்கிய உணவு களைத் தவிர்த்து, காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரேட் நிரம்பிய உணவை சாப்பிட வேண்டும்).&lt;br /&gt;இவை தவிர, மற்ற உணவுப் பொருட்களும் மூளையுடன் தொடர்புடையவைதான். ஃப்ரெஷ் ஷான பழங்களிலும் காய்கறிகளிலும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களும் எஸன்ஷியல் ஃபேட்டும்தான் மூளையின் செல்களை பாதுகாக்கின்றன. ‘நல்ல கொழுப்பு’ சத்து நிறைந்த நெய்மீன், கானாங்கெழுத்தி போன்ற மீன் உணவிலும், பாதாம், வால்நட், பரங்கி விதை, எள், வெந்தயம் போன்றவற்றிலும் இந்த எஸன்ஷியல் ஃபேட் அபரிமிதமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மூளையின் நலத்துக்கு இன்னொரு முக்கியமான தேவை தண்ணீர். பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 லிட்டர் தண்ணீராவது அருந்தவேண்டும். ஃப்ரெஷ்ஷான எலுமிச்சம்பழச் சாறு, சர்க்கரை சேர்க் காத பழச்சாறுகள், காய்கறிச்சாறுகள், இளநீர், சூப், மோர், மூலிகை டீ, பச்சைத் தேயிலை டீ (பசுமையான தேயிலை இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ) போன்றவையும் உடலுக்கு புத்துணர்ச்சி தரக் கூடியவை. கோடைகாலத்தில் பானகம் அருந்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதியையும் சுறுசுறுப்பையும் மட்டுமல்ல... எரிச்சலைக் கொடுக்கும் உணவு வகைகளும் உண்டு. கோலா பானங்கள், அடர் நிற சாக்லெட்டுகள், சத்து பானங்கள், காபி, டீ போன்றவற்றில் இருக்கும் காஃபைன் என்கிற பொருள், உடலில் இருக்கும் வைட்டமின் பி, சி, பொட்டாஷியம், கால்ஷியம், ஸின்க் போன்ற சத்துக்களை செயல் இழக்கச் செய்து விடும். இதனால், மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டு, எரிச்சலும் பதற்றமும் ஏற் படுகிறது. எனவே, இந்த வகை பானங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. இரவில் இவற்றை அருந்தவே கூடாது.&lt;br /&gt;மிட்டாய்கள், ஸாஃப்ட் டிரிங்க்ஸ், ஜாம், ஜெல்லிகள், இனிப்புகள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாகக் கூட்டி, பிறகு குறைக்கக் கூடியவை. எனவேதான் இவற்றை எடுத்துக் கொண்டதும் உற்சாகமாக இருப்பது போல தோன்றும். சிறிது நேரத்தில், சக்தி அனைத்தும் வடிந்து விட்டதைப் போன்ற களைப்பு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த ஊட்டச் சத்துடன் கூடிய உணவு, மன அழுத்தம், சுற்றுப்புற சீர்கேடுகள், அதிக வேலைப் பளு, போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், எக்கச்சக்கமாக நொறுக்குத் தீனி போன்றவையும்கூட மூளையின் செயல்பாடுகளை பாதித்து, உடலைச் சோர்வடையச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான இடைவெளியில் சாப்பிடும் பழக்கம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க உதவும். பசியுடன் இருக்கையில் சர்க்கரையின் அளவில் மாறுபாடுகள் ஏற் படுவதால், மனநிலை மாறுகிறது. தேவை இல்லாத எரிச்சல், பதற்றம், கவலை, பயம், மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த மாதிரி நேரங்களில் உடனடியாக பழங் களையோ, காய்கறிகளையோ சாப் பிட்டால், வயிறோடு சேர்ந்து மனமும் குளிர்வதை உணர முடியும்’’ என்கிறார் ஷைனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746794362329509?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746794362329509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746794362329509'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_114746794362329509.html' title='உணவு போல் மனசு'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746724249887980</id><published>2006-05-12T13:46:00.000-07:00</published><updated>2006-05-12T13:57:27.386-07:00</updated><title type='text'>முப்பது வகை கஞ்சி</title><content type='html'>&lt;strong&gt;உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;உணவுகளிலேயே மிக எளிமையான, ஆரோக்கியத்துக்கு மிக உகந்ததும் ஆன உணவு கஞ்சி. குறைந்த செலவில், வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம் என்பதுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் என்பதும் இதன் பிளஸ். கோடைக்காலத்தில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைத்து, உடலைக் குளிர்விக்கும் மகத்துவம் வாய்ந்த கஞ்சியில், 30 வகைகளை வழங்கியிருப்பவர்... ஏற்கெனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமான அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. சமையல் கலை நிபுணராகப் புதிய பொறுப்பை ஏற்றபோதிலும் அதில் அழகு + ஆரோக்கியக் குறிப்புகளையும் போனஸாகத் தந்திருக்கிறார். வெயிலுக்கு இதமாக கஞ்சியைப் பருகி, உடலையும் மனதையும் ‘குளு குளு’வென ஆக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சீஸனல் கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;மாங்காய் இஞ்சி 25 கிராம், பச்சை மிளகு 10 கிராம், பெருங்காயம் ஒரு சிட்டிகை, மோர் ஒரு கப், உப்பு தேவையான அளவு, எலுமிச்சம்பழம் 1, மல்லித்தழை சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மாங்காய் இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகை உதிர்த்துக்கொள்ளவும். கேழ்வரகுக் கூழை (பக்கம் 112ல் சொல்லப்பட்டுள்ள) முறைப்படி தயார் செய்துகொள்ளவும். அதில் ஒரு கப் எடுத்து, மோர், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். அத்துடன் துருவிய இஞ்சி, மிளகு சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து சாப்பிடவும். மாங்காய் இஞ்சி, பச்சை மிளகு சீஸனில் அடிக்கடி இந்தக் கஞ்சியை செய்து சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓட்ஸ், பால், பழக் கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்ஸ் அரை கப், பால் ஒரு கப், பழங்கள் (ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் எல்லாம் கலந்தவை) அரை கப், சர்க்கரை ஒரு டீஸ்பூன்.&lt;br /&gt;0 பாலை, சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சிக்கொள்ளவும். பிறகு இறக்கி, அத்துடன் ஓட்ஸை சேர்த்துக் கலக்குங்கள். ஓட்ஸ் பாலில் நன்கு ஊறிவிடும். அதில் பழத்துண்டுகளை தூவிப் பரிமாறுங்கள். இது ஸ்பூனால் எடுத்து சாப்பிடும் பக்குவத்தில் இருக்கும். காலை உணவாகக் கூட இந்தக் கஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புழுங்கலரிசி லெமன் கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, எலுமிச்சம்பழம் அரை மூடி, இஞ்சிச் சாறு சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வேகவைத்த அரிசி ரவையுடன் இஞ்சிச் சாற்றையும் எலுமிச்சம்பழச் சாற்றையும் கலந்து உப்பு சேர்த்து பரிமாறவும். இந்தக் கஞ்சியை தினமும் காலையில் இரண்டு டம்ளர் சாப்பிட்டால், உடல் எடை குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புழுங்கலரிசி ஓமக்கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, ஓமம் ஒரு டேபிள்ஸ்பூன், மோர் 2 கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ரவையை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஓமத்தை நன்கு பொடித்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்ததும், ஓமத்தண்ணீரை வண்டல் இல்லாமல் இறுத்துக்கொள்ளவும். இந்தத் தண்ணீரை வெந்த ரவையுடன் சேர்த்து, அத்துடன் மோர், உப்பு கலந்து அருந்தலாம். பசியெடுக்காதவர்களுக்கு நல்ல உணவும் மருந்துமாக இந்தக் கஞ்சி அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புழுங்கலரிசி பூண்டுக்கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, பூண்டு 4 பல், மோர் 2 கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி ரவையுடன் தண்ணீர் சேர்த்து, உரித்த பூண்டையும் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு, இந்தக் கஞ்சியில் நிறைய பூண்டு சேர்த்துக் கொடுத்தால், பால் நன்கு சுரக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புழுங்கலரி இஞ்சி கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, இஞ்சி 25 கிராம், மோர் 2 கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு சொன்னது போலவே ரவையை, தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும். வேகவைத்த ரவையுடன், இஞ்சிச் சாறு, மோர், உப்பு கலந்து சாப்பிடலாம். சைனஸ், ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ளவர்களுக்கு வாய்க்கு இதமாக இருக்கும் இந்தக் கஞ்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கறிவேப்பிலை கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;புழுங்கலரிசி ரவை அரை கப், உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு மூடவும். சில நிமிஷங்கள் கழித்துத் திறந்தால், கறிவேப்பிலையின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கி, தண்ணீர் பச்சை நிறமாகி இருக்கும். கறிவேப்பிலையை வடிகட்டி எடுத்துவிட்டு, அந்தத் தண்ணீரில் ரவையை வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும், உப்பு, மோர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு என்று விருப்பமானதை கலந்து அருந்தலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொட்டுக்கடலை கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டுக்கடலை 1 கப், பால் ஒரு கப், சர்க்கரை தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டுக்கடலையை மிக்ஸியில் அல்லது மிஷினில் நன்கு அரைத்து, சலித்துக்கொள்ளவும். இந்த மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, நன்கு கொதிக்கும் நீரை கொஞ்சம் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.&lt;br /&gt;கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, பொட்டுக்கடலைக் கஞ்சியில் பால் சேர்க்காமல் கொஞ்சம் தண்ணீராகக் காய்ச்சிக் கொடுக்கலாம். பால் அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கும் இதே போல் கொடுக்கலாம். புரோட்டீன் சத்து நிறைந்தது இந்தக் கஞ்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராகி மால்ட்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கேழ்வரகு 5 கப், சர்க்கரை தேவையான அளவு, ஏலக்காய் (தோல் நீக்கிய பருப்பு மட்டும்) சிறிது, கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;முதல்நாள் இரவே கேழ்வரகை கல் இல்லாமல் அரித்து, ஊறவைக்கவும். மறுநாள் காலையில், நீரை வடித்துவிட்டு, கேழ்வரகை மட்டும் ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்துவைக்கவும். மூன்றாம் நாள் இது நன்கு முளை விட்டு வந்திருக்கும். முளைகட்டிய இந்தக் கேழ்வரகை துணியில் விரித்துவிட்டு உலர்த்தவும். நன்கு காய்ந்ததும், அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து வறுக்கவும். (வாணலி சூடானதும் போட்டு, சில விநாடிகள் வறுத்தால் போதும். இல்லையெனில் தீய்ந்துவிடும்).&lt;br /&gt;இதை மிஷினில் கொடுத்து நன்கு நைஸாக அரைத்துக்கொள்ளவும். பிறகு, மெல்லிய ஒரு துணியில் போட்டு சலித்துக்கொள்ளவும் (இதற்கு ‘வஸ்திரகாயம்’ என்று பெயர்). சலித்தெடுத்த மாவுடன் பொடித்த ஏலம், கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ, பொடித்த சர்க்கரை ஆகியவற்றைக் கலந்துவைத்துக்கொள்ளவும். இதுதான் ‘இன்ஸ்டன்ட் ராகிமால்ட்’ பவுடர்.&lt;br /&gt;&lt;br /&gt;சூடான பால் ஒரு கப் எடுத்து, அதில் இந்த ராகிமால்ட் பவுடரை ஒரு டீஸ்பூன் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிரவைத்தும் குடிக்கலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பானம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேழ்வரகுக் கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கேழ்வரகு மாவு அரை கப், உப்பு தேவையான அளவு, மோர் 2 கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;கேழ்வரகு மாவை, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கையால் கரைத்து, அடுப்பில் சிறு தீயில் வைத்து கிளறுங்கள். கட்டிபடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், மாவு வெந்துவிடும். சிறிது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, தொட்டுப் பார்த்தால் ஒட்டாமல் இருக்கவேண்டும். அந்தப் பதத்தில் இறக்கிவிடவும். ஆறியதும், இந்தக் களியில் சிறிது எடுத்து, மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் குடிக்கலாம். இந்தக் கஞ்சிக்கு, ஊறுகாய், சின்ன வெங்காயம் அல்லது காரமில்லாத பிஞ்சு பச்சை மிளகாய் சரியான ஜோடி. காலையில் இரண்டு டம்ளர் நிறைய கேழ்வரகு கஞ்சி குடித்தால், வேறு டானிக்கே வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பச்சரிசி நொய் வெஜ் கஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி நொய் கால் கப், உப்பு தேவையான அளவு, தண்ணீர் ஒரு கப், துருவிய பச்சைக் காய்கறிகள் (கேரட், வெள்ளரி, வெங்காயம், வாழைத்தண்டு போன்றவை) தலா ஒரு டேபிள்ஸ்பூன், மோர் அரை கப், உப்பு தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி நொய்யை, தண்ணீருடன் சேர்த்து பாத்திரத்தில் வேகவிடவும் (குக்கரில் வேண்டாம்). நன்கு வெந்ததும் இறக்கி, ஆறவைத்து அத்துடன் மோர், உப்பு சேர்த்து, துருவிய காய்கறிகள் மற்றும் மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீராகாரக் கஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பழைய சாதம் சிறிதளவு, மோர் 1 கப், சின்ன வெங்காயம் 4 அல்லது பெரிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பழைய சாதத்தை உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். அதோடு மோர் சேர்த்து அருந்தினால், உடம்பைக் குளிரவைக்கும் அற்புதமான கஞ்சி இது. விருப்பமுள்ளவர்கள் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மேலே தூவிக் குடிக்கலாம். அம்மை நோய் கண்டவர்களுக்கு உகந்த கஞ்சி இது. மண் பாத்திரத்தில் பழைய சாதத்தை வைத்திருந்து அருந்தினால் இன்னும் குளிர்ச்சி. செலவேயில்லாத எளிய கஞ்சி. ஆனால், கிடைக்கும் பலனோ மிகவும் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜவ்வரிசி லெமன் கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய (மாவு) ஜவ்வரிசி 2 டீஸ்பூன், தண்ணீர் 1 கப், உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழம் அரை மூடி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;முதல்நாள் இரவே ஜவ்வரிசியைக் கழுவி, ஒரு கப் தண்ணீரில் போட்டு வைக்கவும். மறுநாள் இதை அடுப்பில் வைத்துக் காய்ச்ச, கூழ் மாதிரி வரும். ஆறியதும், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து ஸ்பூனால் சாப்பிடலாம் அல்லது தேவையான மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓட்ஸ் தக்காளி கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்ஸ் கால் கப், தக்காளி (பெரியது) 2, உப்பு ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளியைக் கழுவி, துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டுங்கள். சிறிது தண்ணீரை சூடாக்கி, அதில் ஓட்ஸைப் போட்டால், சில விநாடிகளில் வெந்து, தண்ணீரை இழுத்துக்கொள்ளும். அதோடு, வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தலாம். உப்பு, உறைப்புடன் கூடிய சுவையான கஞ்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவல் கஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;அவல் அரை கப், பால் ஒரு கப், சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி, அதில் அவலைச் சேர்த்து, ஏலக்காய்தூள் போட்டு சூடாகப் பரிமாறவும். ஸ்பூன் போட்டு சாப்பிடும் பக்குவத்தில் இது இருக்கும். இதையே இன்னும் சிறிது பால், தண்ணீர் சேர்த்தால் குடிக்கும் பதத்தில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கோதுமை ரவை கஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை ரவை அரை கப், தண்ணீர் ஒரு கப், (விருப்பப்பட்டால்) பொடியாக துருவிய பீன்ஸ் சிறிதளவு, ஆய்ந்த வெந்தயக் கீரை சிறிதளவு, உப்பு தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரைக் கொதிக்கவைத்து, கோதுமை ரவையைச் சேர்க்கவும். அத்துடன் வெந்தயக்கீரை, துருவிய பீன்ஸையும் சேர்க்கவும். சில நிமிடங்களிலேயே ரவை வெந்துவிடும். இத்துடன் உப்பு சேர்த்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அருமையான காலை உணவு இது. சர்க்கரை இல்லாதவர்களும் இந்தக் கஞ்சியில் அரை கப் பால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தி மீந்து போனால், அதை சிறு துண்டுகளாக்கவும். ஒரு கப் பாலை 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டு ஊறவைத்து, சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பர் ‘வீட் சீரியல்’ இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலவை கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கலரிசி அரை கப், கோதுமை அரை கப், பொட்டுக்கடலை அரை கப், மக்காச்சோளம் அரை கப், கேழ்வரகு அரை கப், கம்பு அரை கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டுக்கடலை தவிர மீதி தானியங்களை வாசம் வர வறுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து மிஷினில் கொடுத்து, ஒன்றாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும். காலையில் இந்தக் கஞ்சி மாவிலிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து, லேசாக வெந்நீர் விட்டுக் கட்டியில்லாமல் கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதன் நடுவே கஞ்சி மாவு கலக்கிய கிண்ணத்தை வைத்தால் போதும், மாவு வெந்துவிடும்.(வறுத்து அரைத்திருப்பதால், அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தேவையில்லை). அதில் உங்கள் விருப்பம் போல மோர், உப்பு அல்லது பால், சர்க்கரை கலந்து பருகலாம். ‘சத்துமாவுக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்தக் கலவைக் கஞ்சி, அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டூ இன் ஒன் கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பார்லி அரை கப், கொள்ளு அரை கப், சுக்குப் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மோர் ஒரு கப், பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழம் அரை மூடி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பார்லியையும் கொள்ளையும் கல் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு அப்படியே மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். அந்த மாவில் 3 டீஸ்பூன் எடுத்து, வெறும் வாணலியை சூடுபடுத்தி வறுக்கவும். கருகிவிடாமல் வறுபட்டதும், அதில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்கவிடவும். (கட்டிபடாமல் இருக்க, முதலில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறிவிட்டு, பிறகு மீதித் தண்ணீரை சேர்க்கவும்). மாவு வெந்ததும் இறக்கி, உப்பு, மோர், சுக்குப்பொடி சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து அருந்தவும். எடையைக் குறைக்கக்கூடிய எளிய கஞ்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலேயே, வெந்த மாவில், ஒரு கப் பால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால், உடற்பயிற்சி போன்றவற்றால் இழந்த எடை கூடும்.&lt;br /&gt;எடையைக் கூட்ட, குறைக்க என இரண்டுக்கும் பயன்படும் ‘டூ இன் ஒன்’ கஞ்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயத்தங்கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பயத்தம்பருப்பு கால் கப், தண்ணீர் ஒரு கப், பால் அரை கப், வெல்லம் (பொடித்தது) கால் கப், ஏலக்காய்தூள் ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீர் சேர்த்து மலர வேகவைக்கவும். வெல்லத்தை, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவும். பிறகு அதை வடிகட்டி, பயத்தம்பருப்போடு சேர்க்கவும். அதில் பால், ஏலக்காய்தூள் சேர்த்து சாப்பிடவும். இரவு உணவுக்கு பதிலாக இந்தக் கஞ்சியை அருந்தினால், வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். விரதம் இருப்பவர்கள், இரவில் பயத்தங்கஞ்சி அருந்தினால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழைத்தண்டு மோர் கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;வாழைத்தண்டு சிறிய துண்டு, மோர் ஒரு கப், உப்பு தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வாழைத்தண்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். அதோடு மோர், உப்பு சேர்த்து பருகினால், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெறும் வாழைத்தண்டு மோர் அருந்த விருப்பமில்லாதவர்கள், புழுங்கலரிசி நொய்க் கஞ்சியையோ, பச்சரிசி நொய்க் கஞ்சியையோ அரை கப் சேர்த்துக் கலக்கி சாப்பிடலாம்.&lt;br /&gt;இன்னும் சொல்லப் போனால், இட்லி இருந் தால் அதைக் கூட சிறு துண்டுகளாக உதிர்த்து, வாழைத்தண்டு மோரில் சேர்த்து சாப்பிடலாம்.&lt;br /&gt;வாழைத்தண்டுக்கு பதிலாக, வாழைப்பூவை மிக்ஸியில் அடித்து சாறெடுத்து, அத்துடன் மோர், உப்பு கலந்து பருகினால் பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சம்பா கோதுமை கஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;சம்பா கோதுமை மாவு 3 டீஸ்பூன், தண்ணீர் ஒரு கப், ஓமம், சுக்கு, சீரகம், மிளகு சிறிதளவு, எலுமிச்சம்பழம் அரை மூடி அல்லது கசகசா சிறிதளவு, சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் 2.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும். வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும்.&lt;br /&gt;குழந்தைகளுக்குக் கொடுப்பதானால், சிறிது கசகசாவை வறுத்து, சிறிது சர்க்கரை, 2 ஏலக்காய் (தோல் நீக்கியது) சேர்த்து பொடிசெய்து, அதில் சில துளிகள் பால் அல்லது நெய் விட்டு, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொண்டு, கோதுமைக் கஞ்சியில் மிதக்கவிட்டு கொடுக்கலாம். விரும்பிக் குடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜவ்வரிசி ஹெல்த் டிரிங்க்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;ஜவ்வரிசி அரை கப், சர்க்கரை 2 டீஸ்பூன், பால் ஒரு கப், ஏலக்காய் சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ஜவ்வரிசியை வாணலியில் போட்டு, நன்கு பொரியும் வரை வறுக்கவும். பிறகு மிக்ஸியில் அரைக்கவும். பொடித்த மாவுடன், சிறிது கொதிக்கும் நீர் விட்டுக் கரைத்து, அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பரிமாறவும். தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும் இந்தக் கஞ்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மசாலா பால் கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பாதாம் 4, பிஸ்தா 4, அக்ரூட் 2, ஜாதிக்காய், மாசிக்காய் சேர்த்துப் பொடித்த பொடி 2 சிட்டிகை, பால் ஒரு கப், சர்க்கரை ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ 5 கீறல்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாலைக் காய்ச்சிக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, அக்ரூட் மூன்றையும் சர்க்கரை சேர்த்து, கால் கப் சூடான பாலில் ஊறவைக்கவும். சிறிது நேரத்தில் ஊறியதும், அவற்றை அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதை, மீதி இருக்கும் பாலில் கலந்து, ஜாதிக்காய், மாசிக்காய் பொடி சேர்த்து அப்படியே அருந்தலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது உலர்பழங்கள், ஜெம்ஸ் போன்ற கலர் மிட்டாய்கள் போட்டுக் கொடுக்க, கண்களுக்கும் விருந்தாகும்.&lt;br /&gt;பாலில் இந்த விழுதைக் கலந்து, ஆப்பம், இடியாப்பம் போன்ற பலகாரங்களின் மீது ஊற்றி சாப்பிடுவது இன்னொரு வகை.&lt;br /&gt;&lt;br /&gt;அயல்நாடுகளில், ‘பாரிட்ஜ்’ என்று விரும்பிச் சாப்பிடும் இந்தக் கஞ்சி, கொஞ்சம் ‘காஸ்ட்லி’யானது என்றாலும், வாரம் ஒருமுறையேனும் கண்டிப்பாக அருந்த வேண்டிய கஞ்சி. இரவில் இதை அருந்தினால், நல்ல தூக்கம் வரும். மூளைக்கும் மனசுக்கும் அமைதி கிடைக்கும். சருமத்துக்கு பளபளப்பு கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வரகரிசி கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;வரகரிசி கால் கப், ஓமம் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, தண்ணீர் அரை கப், மோர் ஒரு கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வரகரிசியை கல் பொறுக்கி சுத்தம் செய்து, ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும். 2 விசில் வைத்தால் வெந்துவிடும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகவும். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு, ஜீரணம் ஆவதற்கு உதவும் இந்தக் கஞ்சி. மஞ்சள்காமாலை போன்ற நோய் தாக்கியவர்களுக்கும் பசியே எடுக்காதவகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறுசுவை நீர் கஞ்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி கால் கப், மாங்காய் (தோல் சீவியது) 4 துண்டுகள், வெல்லம் (பொடித்தது) 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, பச்சை வேப்பம்பூ ஒரு டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;செய்முறை: மாங்காய் துண்டுகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து, வெந்ததும் வெல்லம், பச்சை மிளகாய், வேப்பம்பூ எல்லாம் போட்டு இறக்கிவைக்கவும். பச்சரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலை உப்பு சேர்த்து, அம்மியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கட்டிபடாமல் கிளறினால் சில நிமிடங்களில் வெந்துவிடும். அத்துடன் மாங்காய், வெல்லக் கலவையைச் சேர்த்துக் கிளறினால், கஞ்சி ரெடி. புளிப்பு, இனிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு எல்லாம் சேர்ந்த இந்தக் கஞ்சி, பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு நல்லது. கர்ப்பிணிகளின் வாய்க்கு ருசியான கஞ்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லவங்க நீர் கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;லவங்கம் 2 டீஸ்பூன், பால் ஒரு கப், சர்க்கரை 3 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கப் பாலை சர்க்கரை சேர்த்து, கால் கப்பாக வற்றும் வரை காய்ச்சவும். லவங்கத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றியதும் இறக்கி, மிக்ஸி அல்லது அம்மியில் வைத்து நைஸாக அரைத்தெடுக்கவும். இந்த விழுதைப் பாலில் சேர்த்து, ஸ்பூன் போட்டு சாப்பிடவும். லவங்கம் மணக்க, மணக்க பாஸந்தி போல இருக்கும். மழை, குளிர் காலங்களில் சாப்பிட ஏற்ற கஞ்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெந்தய கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;வெந்தயம் கால் கப், மோர் 1 கப், இஞ்சி (தோல் சீவியது) விரல் நீளம், பெருங்காயப் பொடி ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வெந்தயத்தை, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து வேகவிடவும். இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். வெந்தயம் வெந்ததும் எடுத்து, மோர், இஞ்சி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து அருந்தவும்.&lt;br /&gt;நீரிழிவு, அல்சர் போன்ற நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி இந்தக் கஞ்சியை செய்து தரலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய காபி நல்லது. மேலே சொன்னது போல வெந்தயத்தை வேகவிட்டு, மேலே தெளிந்து நிற்கும் நீருடன் பால், சர்க்கரை சேர்த்து காபியாக பருகலாம். இதே வெந்தய நீரில் புழுங்கலரிசி ரவை அல்லது பாம்பே ரவை அல்லது சேமியா சேர்த்து வேகவிட்டு, உப்பு சேர்த்து சாப்பிட்டால் சத்தான மாலை உணவு. உடம்புக்கு குளிர்ச்சி தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அங்காய கஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;சுண்டைக்காய் வற்றல் ஒரு டீஸ்பூன், மணத்தக்காளி வற்றல் ஒரு டீஸ்பூன், உலர்ந்த வேப்பம்பூ ஒரு டீஸ்பூன், சுக்கங்காய் வற்றல் ஒரு டீஸ்பூன் (இவை எல்லாமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்), பச்சை கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மோர் ஒரு கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வற்றல்களையும் வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பச்சைக் கறிவேப்பிலையை லேசாக (கருகிவிடாமல்) சூடான வாணலியில் புரட்டி எடுத்துவிட்டு, அதையும் பெருங்காயத்தையும் வறுத்த வற்றல்களுடன் சேர்த்துப் பொடிக்கவும். மோரில் இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் போட்டு, உப்பு சேர்த்துக் கலக்கிக் குடிப்பது ஒரு வகை. ஒரு கப் வெந்நீரில், வற்றல் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுக் கலக்கி மூடிவைத்தால், ஒரு மணி நேரத்தில் தெளிந்து நிற்கும். இந்தத் தெளிவை இறுத்து, அதில் மோர், உப்பு சேர்த்து அருந்துவது இன்னொரு வகை. வயிற்றில் பூச்சி, வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கஞ்சி மிகவும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தனியா ஊறல் கஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;தனியா, மிளகு, சுக்கு தலா 10 கிராம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன மூன்றையும், 2 அல்லது 3 கப் தண்ணீர் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தை மூடி வைத்துவிடவும். தனியா, சுக்கு, மிளகு ஆகியவற்றின் சாரம் இறங்க, இறங்கத்தான் அந்த நீருக்கு அதிக சுவை கிடைக்கும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். ஒரு முறை வேகவைக்கும் சுக்கு, மிளகு, தனியாவிலேயே இரண்டு, மூன்று முறை தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாம். தெளிந்த சுக்கு நீரைக் கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் பாம்பே ரவையைப் போட்டு வேகவிட்டு, வெந்ததும் உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம்.&lt;br /&gt;ஆசிரியப் பணியில் இருப்பவர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள் ஆகியவர்கள் இந்தக் கஞ்சியை அடிக்கடி பருகலாம். தொண்டைக்கு இதம் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அது சரி...இந்த சுண்டக் கஞ்சி இதுல வராதா..??&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746724249887980?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746724249887980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746724249887980'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_114746724249887980.html' title='முப்பது வகை கஞ்சி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746663170520108</id><published>2006-05-12T13:42:00.000-07:00</published><updated>2006-05-12T13:43:51.706-07:00</updated><title type='text'>சக்க பிரதமன்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p71a.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p71a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலாச்சுளை &amp; 15, வெல்லம் &amp;amp; ஒன்றரை கப், தேங்காய்ப்பால் &amp; ஒன்றரை கப், ஏலக்காய் தூள் &amp;amp; அரை டீஸ்பூன், நெய் &amp; 4 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலாச்சுளைகளை சிறு துண்டுகளாக நறுக்கி, பாதியளவு நெய்யில் வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் மிக்ஸியில் ஒரு சுற்றுசுற்றி எடுங்கள். வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டி அரைத்த விழுதுடன் சேருங்கள். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சுங்கள். மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, 5 நிமிடம் கழித்து தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஏலக்காய்தூள் சேருங்கள்.&lt;br /&gt;கேரளத்தின் மிக பிரபலபான இந்த இனிப்பு, சுவையிலும் முதல் தரமானது. ‘சக்க பிரதமன்’ இல்லாத விசேஷமே அங்கு இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746663170520108?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746663170520108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746663170520108'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_114746663170520108.html' title='சக்க பிரதமன்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746654920827086</id><published>2006-05-12T13:41:00.000-07:00</published><updated>2006-05-12T13:42:29.210-07:00</updated><title type='text'>இஞ்சி புளி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p71.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p71.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சி  100 கிராம், புளி  பெரிய எலுமிச்சையளவு, பச்சை மிளகாய்  8, உப்பு  தேவையான அளவு, மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன், வெல்லம்  2 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு  அரை டீஸ்பூன், பெருங்காயம்  அரை டீஸ்பூன், எண்ணெய்  கால் கப்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சியை தோல் சீவி, சிறு துண்டு களாக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து மிளகாய், இஞ்சி சேருங்கள். நன்கு சுருள வதக்குங்கள். பின்னர் புளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு கெட்டியானதும் இறக்குங்கள்.&lt;br /&gt;புளிப்பு, இனிப்பு, காரம் சேர்ந்த இந்த கேரள ஸ்பெஷலை ஒரு வாரம் வரையிலும் கூட வைத்திருந்து சாப்பிடலாம். காலை, மதியம் என எல்லா நேர உணவுகளுக்கும் ஏற்ற சூப்பர் சைட் டிஷ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746654920827086?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746654920827086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746654920827086'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_114746654920827086.html' title='இஞ்சி புளி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746646033903689</id><published>2006-05-12T13:38:00.000-07:00</published><updated>2006-05-12T13:41:00.340-07:00</updated><title type='text'>ஓரின்- மள்ளு ஸ்பெஷல்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p70a.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p70a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூசணி பத்தை  1, பச்சை மிளகாய்  4, தேங்காய்ப்பால்  3 கப், மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூசணியை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். மிளகாயை கீறிக்கொள்ளுங்கள். காராமணியை வாசனை வரும் வரை வறுத்து வேக விடுங்கள். பாதியளவு தேங்காய்ப்பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பூசணி, வேகவைத்த காராமணி, மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். காய் நன்கு வெந்ததும் மீதமுள்ள பாலை விட்டு, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து மூடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காய்ப்பால் மணக்கும் இந்தக் கூட்டு, வயிற்றுக்கும் வாய்க்கும் இதமானது. தேவையானவை: கோதுமை மாவு  2 கப், உப்பு  அரை டீஸ்பூன், தனி மிளகாய்தூள்  அரை டீஸ்பூன், தனியா தூள்  கால் டீஸ்பூன், நெய்  1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை கொத்துமல்லி  சிறிதளவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746646033903689?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746646033903689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746646033903689'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_114746646033903689.html' title='ஓரின்- மள்ளு ஸ்பெஷல்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746625891352425</id><published>2006-05-12T13:36:00.000-07:00</published><updated>2006-05-12T13:37:38.913-07:00</updated><title type='text'>கார சப்பாத்தி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p62b.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p62b.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை மாவு &amp; 2 கப், உப்பு &amp;amp; அரை டீஸ்பூன், தனி மிளகாய்தூள் &amp; அரை டீஸ்பூன், தனியா தூள் &amp;amp; கால் டீஸ்பூன், நெய் &amp; 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை கொத்துமல்லி &amp;amp; சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை மாவு, உப்பு, மிளகாய்தூள், தனியா தூள், நெய், நறுக்கிய கொத்துமல்லி எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலக்கவும். அதில் தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும். சாதாரணமானவர்களை விட, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிற்றுண்டி இது. பயணம் செய்யும்போது அவர்களுக்கு வழியில் அடிக்கடி பசியெடுக்கும். அப்போது, இந்த சப்பாத்தியைச் சாப்பிட்டுப் பசியாறலாம். &amp;amp; என்.பத்மா, ஸ்ரீரங்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746625891352425?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746625891352425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746625891352425'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_114746625891352425.html' title='கார சப்பாத்தி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746616962158419</id><published>2006-05-12T13:34:00.000-07:00</published><updated>2006-05-12T13:36:09.623-07:00</updated><title type='text'>பிக்னிக் மிக்சர்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p63.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p63.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜவ்வரிசி  2 கப், அவல்  அரை கப், பொட்டுக்கடலை  அரை கப், நிலக்கடலை  அரை கப், முந்திரிப்பருப்பு  15, உலர் திராட்சை  10, கறிவேப்பிலை  சிறிது, மிளகாய்தூள்  அரை டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, எண்ணெய்  பொரிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அவலையும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். முந்திரிப்பருப்பு, உலர் திராட்சையை எண்ணெயில் பொரித்து, கறிவேப்பிலையையும் பொரித்துக்கொள்ளவும். நிலக்கடலை, பொட்டுக்கடலையை வெறும் சூடான வாணலியில் போட்டு, சூடு வரும்வரை கிளறி எடுக்கவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, மிளகாய்தூள் போட்டுக் கலந்துவைத்தால் சுவையான ‘பிக்னிக் மிக்சர்’ ரெடி. பாலித்தீன் பையில் பேக் செய்து, எடுத்துச் செல்லலாம். பசிக்கும்போது கொறிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746616962158419?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746616962158419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746616962158419'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_114746616962158419.html' title='பிக்னிக் மிக்சர்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746606771862692</id><published>2006-05-12T13:32:00.000-07:00</published><updated>2006-05-12T13:34:27.720-07:00</updated><title type='text'>புதினா சாதம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p62a.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p62a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி  2 கப், புதினா  அரை கப், பச்சை கொத்துமல்லி  அரை கப், புளி  கொட்டைப் பாக்கு அளவு, காய்ந்த மிளகாய்  5, நல்லெண்ணெய்  1 டேபிள்ஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அரிசியை உதிர் உதிராக சாதமாக வடிக்கவும். பின்னர், புதினா, கொத்துமல்லி, புளி, மிளகாய், உப்பு எல்லா வற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து அரைத்த மசாலா வைப் போட்டு நன் றாக கையில் ஒட்டும் பக்குவத்தில் கிளறி இறக்க வும். இதுதான் ‘மின்ட் பாத்’துக்கான மசாலா. சாதத்தை ஆறவைத்து, வதக்கி வைத்திருக்கும் மசாலாவைப் போட்டுக் கிளறி பேக் செய்ய வேண்டியதுதான். பயணத்துக்கும் வயிற்றுக்கும் ஏற்ற கலவை சாதம் இது. சீக்கிரமாகவும் செய்யலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746606771862692?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746606771862692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746606771862692'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post_12.html' title='புதினா சாதம்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114746595703917291</id><published>2006-05-12T13:28:00.000-07:00</published><updated>2006-05-12T13:32:37.040-07:00</updated><title type='text'>மாம்பழ ஜெல்லி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p62.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p62.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாம்பழக் கூழ்  2 கப், சர்க்கரை  1 கப், நெய்  2 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கனிந்த மாம்பழங்களை தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு மாம்பழக் கூழ் தயாரிக்கவும். ஒரு அடி கனமான வாணலியில் இந்த மாம்பழக் கலவையை போட்டு அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அது சற்று கெட்டியானதும் சர்க்கரையை அதில் சேர்க்க வேண்டும். பின் மீண்டும் கிளற வேண்டும். இரண்டும் சேர்ந்து கெட்டியானதும் நெய்யை ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். வித்தியாசமாக செய்ய விரும்புவோர் பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை சீவி போட்டு கிளறி, துண்டுகள் போடலாம். செய்ய எளிது சுவைக்க இனிது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114746595703917291?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746595703917291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114746595703917291'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/05/blog-post.html' title='மாம்பழ ஜெல்லி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114547269462916134</id><published>2006-04-19T11:48:00.000-07:00</published><updated>2006-04-19T11:51:34.630-07:00</updated><title type='text'>சர்க்கரை வள்ளிக்கிழங்கு பட்டுவா</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p38.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/320/p38.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை வள்ளிக்கிழங்கு  1 கிலோ, அரிசி மாவு  6 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் விதைகள்  1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை  அரை கப், தண்ணீர்  கால் கப், டால்டா அல்லது நெய்  தேவையான அளவு, ரோஸ் எஸன்ஸ்  சில துளிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி மாவைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி, அப்படியே உள்ளங்கையில் வைத்து லேசாகத் தட்டி, அவற்றில் ஏலக்காய் விதைகளைப் பதித்து வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். ரோஸ் எஸன்ஸ் விட்டு கலக்கவும்.&lt;br /&gt;வாணலியில் டால்டா விட்டு காய்ந்த உடன், தட்டி வைத்தவற்றைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, அவற்றை சர்க்கரை பாகில் போட்டு சிறிது ஊறியவுடன் எடுத்து பரிமாறவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114547269462916134?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114547269462916134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114547269462916134'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_114547269462916134.html' title='சர்க்கரை வள்ளிக்கிழங்கு பட்டுவா'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114547251363878136</id><published>2006-04-19T11:45:00.000-07:00</published><updated>2006-04-19T11:48:33.640-07:00</updated><title type='text'>ஸ்டஃப்ட் தால்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p39.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/320/p39.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை மாவு  2 கப், சோள மாவு  கால் கப், பெரிய வெங்காயம்  1, பச்சை மிளகாய்  2, கடலைப்பருப்பு  1 கப், உப்பு  தேவையான அளவு, நெய்  கால் கப் அல்லது எண்ணெய்  தேவையான அளவு, வெந்நீர்  தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிளகாயை விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நறுக்கிய வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய் விழுது, வேக வைத்த கடலைப்பருப்பு, உப்பு, லேசாக சுட வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசையவும். கடைசியில் லேசாக எண்ணெய் விட்டு பிசைந்து அரை மணி நேரம் அதன் மீது ஒரு பாத்திரமோ அல்லது மெலிதான துணியையோ போட்டு மூடி வைக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பிசைந்து வைத்த மாவை திரட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெயை மாவைச் சுற்றி லேசாக விட்டு அடுப்பை சின்னதாக வைத்து ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் போட்டு மீண்டும் லேசாக நெய்யோ அல்லது எண்ணெய் விட்டு எடுக்கவும்.&lt;br /&gt;இது குழந்தைகள் விரும்பக்கூடிய வித்தியாசமான சப்பாத்தியாகும். இதற்கு தொட்டுக்கொள்ள வெள்ளரிக்காய் ராய்தா சரியான தேர்வாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;கடலைப்பருப்பு பிடிக்காதவர்கள் பாசிப்பருப்பை சேர்த்து கொள்ளலாம். ஆனால், குக்கரில் வேக வைக்காமல் பாத்திரத்தில் வேக வையுங்கள்.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114547251363878136?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114547251363878136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114547251363878136'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_114547251363878136.html' title='ஸ்டஃப்ட் தால்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114547233486703806</id><published>2006-04-19T11:42:00.000-07:00</published><updated>2006-04-19T11:45:34.886-07:00</updated><title type='text'>சில்லி பனீர்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p39a.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/320/p39a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பனீர் (or Tofu or bean curd)  200 கிராம், கார்ன் மாவு  4 டேபிள்ஸ்பூன், வெங்காயம்  2, பூண்டு  4 பற்கள், பச்சை மிளகாய்  3, குட மிளகாய்  2, உப்பு  தேவையான அளவு, எண்ணெய்  தேவையான அளவு, மிளகுத்தூள்  அரை டீஸ்பூன், சோயா சாஸ்  2 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ்  2 டேபிள்ஸ்பூன், அஜினோமோட்டா  சிறிதளவு, சில்லி சாஸ்  1 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பனீரை டைமண்ட் வடிவமாக வெட்டி சிறிதளவு கார்ன் மாவில் பிசறி வைக்கவும். எண்ணெய் சூடானவுடன் பனீரை பொன்னிறமாக பொரித்து தனியே வைக்கவும். மீதி உள்ள கார்ன் மாவை கால் கப் தண்ணீரில் கலந்து வைக்கவும்.&lt;br /&gt;வெங்காயத்தை நான்காக வெட்டி தனித்தனியே உதிர்த்து வைக்கவும். குட மிளகாயையும், இதே அளவில் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும். பூண்டு பற்களை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் 2 ஸ்பூன் சூடானவுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்து உப்பு, மிளகுத்தூள், சாஸ்வகைகள், அஜினோமோட்டோ கலந்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது கார்ன் மாவு தண்ணீரை கலந்து பனீர், காய்கறிகள் சேர்ந்தாற்போல் கெட்டியாக ஆனவுடன் இறக்கவும். இதற்கு ஆலிவ் எண்ணெய் உபயோகித்தால் நன்றாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114547233486703806?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114547233486703806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114547233486703806'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_19.html' title='சில்லி பனீர்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114471292371398864</id><published>2006-04-10T16:48:00.000-07:00</published><updated>2006-04-10T22:32:48.010-07:00</updated><title type='text'>30 வகை பஜ்ஜிபக்கோடா!</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;ஏப்ரல் வந்தாச்சு... பள்ளிகளில் விடுமுறையும் விட்டாச்சு! குழந்தைகள் எல்லாம் லூட்டி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டில் இருக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது நொறுக்ஸ் தேவையாக இருக்கும். கடையில் வாங்கும் ஸ்நாக்ஸை விட, நாமே வீட்டில் செய்யும் ஸ்நாக்ஸால் செலவும் குறைவு. குடும்பத்தவரின் உடல்நலனுக்கும் கெடுதல் இல்லை. உங்கள் சௌகரியத்துக்காகவே, சௌசௌ பஜ்ஜி, கார்ன் பக்கோடா, பிரெட் பக்கோடா என்று 30 வகை பஜ்ஜி பக்கோடாக்களை எளிய முறையில் வழங்கியிருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். தினம் ஒரு ஸ்நாக்ஸாக, வீட்டிலேயே வெரைட்டியாக செய்து கொடுத்து அசத்துங்கள். செலவையும் மிச்சம் பிடியுங்கள்&lt;/em&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆப்பிள் பஜ்ஜி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள் 1, கடலை மாவு 1 கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்தூள் (விருப்பமானால்) 1 டீஸ்பூன், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; ஆப்பிளை கழுவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி விதை நீக்குங்கள். மாவுடன், மஞ்சள்தூள், உப்பு, ஆப்ப சோடா தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்து, ஆப்பிள் துண்டுகளை மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதினா, மல்லி பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; புதினா 1 கட்டு, மல்லித்தழை 1 சிறிய கட்டு, கடலை மாவு 1 கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, சோம்பு 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு அல்லது உருட்டிப் போட்டு வேகவிட்டெடுங்கள். (குறிப்பு: தேவையானால் தண்ணீர் சிறிது தெளித்தும் பிசறலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெங்காய பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; வெங்காயம் 3, கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, வெங்காய வில்லைகளை மாவில் நன்கு அமிழ்த்தி எடுத்து காயும் எண்ணெயில் போடுங்கள். இருபுறமும் திருப்பி வேகவிட்டெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்புகள்: உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப்பருப்பு 2 கப், பச்சரிசி கால் கப், காய்ந்த மிளகாய் 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.&lt;br /&gt;எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெண்டைக்காய் பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;வெண்டைக்காய் கால் கிலோ, கடலை மாவு ஒன்றேகால் கப், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வெண்டைக்காயைக் கழுவி துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பிசறிய மாவில் சிறிது தண்ணீர் தெளித்து, சேர்ந்தாற்போல் மீண்டும் பிசறி, காயும் எண்ணெயில் கிள்ளிப் போடுங்கள். விருப்பம் உள்ளவர்கள், கொஞ்சம் பூண்டை நசுக்கியும் சில சின்ன வெங்காயத்தை தட்டியும் சேர்க்கலாம். சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சௌசௌ பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;சௌசௌ (சிறியதாக) 1 , கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மைதா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், ஆப்ப சோடா 1 சிட்டிகை, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;சௌசௌவை தோல், விதை நீக்கி வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை மாவுடன் ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சௌசௌ துண்டுகளை மாவில் நன்கு நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள். வித்தியாசமான பஜ்ஜி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேர்க்கடலை பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; வேர்க்கடலைப் பருப்பு (வறுக்காதது) 2 கப், கடலை மாவு ஒன்றேகால் கப், அரிசி மாவு கால் கப், மிளகாய்தூள் இரண்டரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன் (அல்லது) இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வேர்க்கடலையுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள் (அல்லது) இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிசறி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உருளைக்கிழங்கு பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; உருளைக்கிழங்கு (சற்று பெரியதாக) 2 , கடலை மாவு 1 கப், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், இட்லி மாவு 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப சோடா அரை சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;கிழங்கை தோல் சீவி சற்று மெல்லிய வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். உருளை வில்லைகளை ஒவ்வொன்றாக மாவில் போட்டெடுத்து காயும் எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசிப்பருப்பு பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; பாசிப்பருப்பு 1 கப், தனியா 2 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். தனியா, சோம்பு இரண்டையும் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள். பருப்பை சற்றுக் கரகரப்பாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவிட்டு, சிறுசிறு உருண்டைகளாக வேகவிட்டு எடுங்கள்.&lt;br /&gt;இது வட இந்தியர்களின் ஃபேவரிட் பக்கோடா. இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை சட்னியும், இனிப்பு சட்னியும் நல்ல சைட்டிஷ்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழைக்காய் பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;வாழைக்காய் 1, கடலை மாவு 1 கப், கார்ன்ஃப்ளவர் 1 டேபிள்ஸ்பூன், சோம்பு தூள் அரை டீஸ்பூன், பூண்டு விழுது 1 டீஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப சோடா சிட்டிகை&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; வாழைக்காயின் இரு பக்கங்களிலும் சிறிது தோலை விட்டு விட்டு மீதமுள்ளதை சீவி எடுத்து விடுங்கள். பின் நீளவாக்கில் இரண்டாக வெட்டி, இரு ஓரங்களிலும் சிறிது தோல் இருக்குமாறு விட்டுவிட்டு, மெல்லியதாக நறுக்குங்கள்.&lt;br /&gt;எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயை காய வைத்து ஒவ்வொரு துண்டையும் மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். தேங்காய் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடலைப் பருப்பு பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; கடலைப் பருப்பு 1 கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, பூண்டு 4 பல், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை தலா சிறிதளவு, சோம்பு அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நசுக்கிக் கொள்ளுங்கள். சோம்பைப் பொடித்துக்கொள்ளுங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா மூன்றையும் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருட்களை கலந்து பிசறி, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு, வேகவிட்டெடுங்கள். சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும் காரக்குழம்பு, மோர்க்குழம்பில் போடுவதற்கும் ஏற்ற பக்கோடா இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கத்தரிக்காய் பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; பெரிய கத்தரிக்காய் 1, கடலை மாவு 1 கப், மைதா மாவு 1 டீஸ்பூன், அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப சோடா அரை சிட்டிகை.&lt;br /&gt;அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல், சோம்பு 1 டீஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள். இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள். கடலை மாவுடன் உப்பு, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு துண்டையும் மாவில் அமிழ்த்தி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மெது பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; கடலை மாவு 1 கப், பெரிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மல்லித்தழை சிறிது, நெய் அல்லது டால்டா 2 டேபிள்ஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். டால்டா, எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக பிசறிக்கொள்ளுங்கள். டால்டாவை உருக்கி சூடாக மாவில் சேர்த்துப் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். சிறிதளவு தண்ணீரை மாவில் தெளித்து, சேர்ந்தாற்போல பிசறி, காயும் எண்ணெயில் உதிர்த்து விடுங்கள். நன்கு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொத்தவரங்காய் பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பிஞ்சு கொத்தவரை 100 கிராம், கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப சோடா அரை சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; கொத்தவரங்காயை நுனியையும் காம்பையும் கிள்ளிவிட்டு, அலசுங்கள். 3 கப் தண்ணீரை கொதிக்கவைத்து சிறிது உப்பு, கொத்தவரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டுங்கள். ஒரு பேப்பரையோ அல்லது துணியையோ விரித்து, அதன் மேல் காயைக் கொட்டி விரித்துவிட்டு அரை மணி நேரம் உலர விடுங்கள். மாவுடன் மிளகாய்தூள், உப்பு, பெருங்காயம், ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்துகொள்ளுங்கள். கொத்தவரையை மாவில் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதிர் வெங்காய பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; கடலை மாவு 1 கப், பெரிய வெங்காயம் 4, சீரகம் அரை டீஸ்பூன், மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; வெங்காயத்தை தோல்நீக்கி, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். மாவுடன் சீரகம், மிளகாய்தூள், உப்பு, ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட கெட்டியாக கரையுங்கள். வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து, வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்துப் பிசறி, எண்ணெயை நன்கு காயவைத்து, சிறிது சிறிதாக உதிர்த்துவிட்டு, பொன்னிறத்தில் வேகவிட்டெடுத்து பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தூள் பக்கோடா&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; கடலை மாவு 1 கப், அரிசி மாவு கால் கப், பெரிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மல்லித்தழை சிறிது, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, பூண்டு 6 பல்.&lt;br /&gt;செய்முறை: மெது பக்கோடாவுக்கான செய்முறையேதான். பூண்டை நசுக்கிச் சேர்த்துப் பிசறி, எண்ணெயைக் காயவைத்து, ஒற்றை ஒற்றையாக உதிர்த்து விடுங்கள். மொறுமொறுவென வெந்ததும் எடுத்து, சுடச் சுட பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேபிகார்ன் பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பேபிகார்ன் 12, கடலை மாவு 1 கப், அரிசிமாவு 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளவர் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு, ஆப்ப சோடா சிட்டிகை&lt;br /&gt;அரைக்க: பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டெடுங்கள். மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முந்திரி பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; முந்திரிப்பருப்பு 100 கிராம், கடலை மாவு 1 கப், மிளகாய் தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; எண்ணெய் நீங்கலாக, மீதி எல்லாப் பொருட்களையும் பிசறுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். பிசறிய கலவையில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயில் உதிர்த்துவிடுங்கள். நடுத்தரத் தீயில் வேகவிடுங்கள். இல்லையெனில், முந்திரிப்பருப்பு கருகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பனீர் பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; பனீர் 200 கிராம், கடலை மாவு 1 கப், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;பொடிக்க: சீரகம் அரை டீஸ்பூன், மிளகு கால் டீஸ்பூன், கருப்பு உப்பு கால் டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பனீரை சிறு சதுரத் துண்டுகளாக்குங்கள். மாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காயவைத்து, பனீர் துண்டுகள் ஒவ்வொன்றையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பொடித்து சூடான பஜ்ஜியின் மேல் தூவி பரிமாறுங்கள். ருசி அபாரமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸ்டஃப்டு குடமிளகாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; குடமிளகாய் 2, கடலை மாவு ஒன்றேகால் கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;ஸ்டஃப் செய்ய: பெரிய வெங்காயம் 2, மல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். அதனுடன் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, சீரகம் சேர்த்து பிசறுங்கள். இதுதான் ஸ்டஃப் செய்வதற்கான கலவை.&lt;br /&gt;பிறகு, குடமிளகாயைக் கழுவித் துடைத்து, உள்ளிருக்கும் விதை நீக்கி, நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். மாவுடன் பெருங்காயத்தூள், மிளகாய்தூள், ஆப்ப சோடா, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;எண்ணெயைக் காயவைத்து குடமிளகாய் துண்டுகளை, கரைத்த மாவில் நனைத்து, எண்ணெயில் பொரித்தெடுங்கள். வெந்ததும் எடுத்து, நடுவில் லேசாக கீறி, வெங்காயக் கலவையை அதனுள் அடைத்து சூடாகப் பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸ்டஃப்டு பிரெட் பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பிரெட் 4 ஸ்லைஸ், கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் 2, மல்லித்தழை சிறிது, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;பச்சை சட்னிக்கு: புதினா அரை கப், மல்லி அரை கப், பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழச் சாறு 1, உப்பு சுவைக்கேற்ப.&lt;br /&gt;கார (சிவப்பு) சட்னிக்கு: காய்ந்த மிளகாய் 6, பூண்டு 3 பல், வெல்லம் 1 டீஸ்பூன், புளி சிறிய துண்டு, உப்பு சுவைக்கேற்ப.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; சட்னிகள் இரண்டையும் தனிதனியே நைஸாக அரையுங்கள். வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டுங்கள். குறுக்காக வெட்டி முக்கோண துண்டுகளாக்குங்கள். ஒரு துண்டின் மேல் பச்சை சட்னி, மற்றொன்றின் மேல் கார சட்னி தடவுங்கள். கடலை மாவு முதல் ஆப்ப சோடா வரை ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். சட்னி (பச்சை) தடவிய பிரெட் ஸ்லைஸின் மேல் சிறிது வெங்காயம், மல்லித்தழை தூவி கார சட்னி ஸ்லைஸால் மூடுங்கள். எண்ணெயை காய வைத்து பிரெட் ஸ்லைஸ்களை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கார்ன் பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; பேபிகார்ன் 10, கடலை மாவு முக்கால் கப், கார்ன்ஃப்ளவர் 1 டேபிள்ஸ்பூன், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப.&lt;br /&gt;அரைக்க: பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 4 பல்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சற்றுக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பேபிகார்னை சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்து, தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயைக் காயவைத்து, சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். புதுமையான, சுவையான பக்கோடா இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புடலங்காய் பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; புடலங்காய் (சிறியதாக) 2 , கடலை மாவு ஒன்றரை கப், இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;ஸ்டஃப் செய்ய: உருளைக்கிழங்கு 2, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, கடுகு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கை வேக வைத்து மசியுங்கள். வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கை சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள். புடலங்காயை கழுவி, வட்டமாக சிறு துண்டுகளாக நறுக்கி விதையை நீக்குங்கள். உப்பு கலந்த கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டெடுங்கள். அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை அடையுங்கள். கடலை மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கரையுங்கள். மிதமான தீயில் எண்ணையைக் காய வைத்து, புடலங்காய் துண்டுகளை மாவில் போட்டெடுத்து, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கீரை பக்கோடா &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; ஏதாவது ஒரு கீரை 1 கட்டு, கடலை மாவு 1 கப், பச்சை மிளகாய் இஞ்சி விழுது 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி (விரும்பினால்) 1 டேபிள்ஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய்&lt;br /&gt;தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;கீரையைப் பொடியாக நறுக்கி, அலசி, ஒரு துணியில் பரவினாற் போல போட்டு காயவிடுங்கள். மாவுடன், கீரை, உப்பு, சீரகம் சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். மாவில் தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக உருட்டி அல்லது கிள்ளிப் போட்டு எடுங்கள். சத்துமிக்க, மாலைநேர டிபன் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸ்டஃப்டு சில்லி பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; பஜ்ஜி மிளகாய் 6, கடலை மாவு முக்கால் கப், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;ஸ்டஃப் செய்ய: துருவிய வெள்ளரி கால் கப், துருவிய வெங்காயம் கால் கப், துருவிய தேங்காய் 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை 1 டேபிள்ஸ்பூன், முளைப்பயறு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன் (அல்லது) மாங்காய் தூள் 1 டீஸ்பூன், சீரகத்தூள் 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; முதலில், ஸ்டஃப் செய்வதற்கான பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து பிசறிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;பிறகு, மிளகாய்களை கழுவி, லேசாக நீளவாக்கில் கீறி, உள்ளிருக்கும் விதைகளை கவனமாக நீக்குங்கள். பிசறி வைத்திருக்கும் காய்கறி கலவையை மிளகாயினுள் நிரப்புங்கள். கடலை மாவு, ஆப்ப சோடா, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய்களை மாவில் போட்டெடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.&lt;br /&gt;(குறிப்பு: பஜ்ஜி மிளகாய் கிடைக்காதவர்கள், சற்று வெளிர் பச்சை நிறத்தில், பெரிய சைஸில் இருக்கு பச்சை மிளகாய்களை உபயோகிக்கலாம். அதில் விதையும் காரமும் குறைவாக இருக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெங்காய பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கடலை மாவு 1 கப், பெரிய வெங்காயம் 4, சீரகம் அரை டீஸ்பூன், மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; வெங்காயத்தை தோல்நீக்கி, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். மாவுடன் சீரகம், மிளகாய்தூள், உப்பு, ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட கெட்டியாக கரையுங்கள். வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து, வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்துப் பிசறி, எண்ணெயை நன்கு காயவைத்து, சிறிது சிறிதாக உதிர்த்துவிட்டு, பொன்னிறத்தில் வேகவிட்டெடுத்து பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிளகாய் பூரண பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; பஜ்ஜி மிளகாய் 6, கடலை மாவு முக்கால் கப், மிளகாய் தூள் அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;பூரணத்துக்கு: கடலை மாவு அரை கப், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் அரை டீஸ்பூன் (அல்லது) எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா தூள் 1 சிட்டிகை, சீரகத்தூள் 1 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பூரணம் தயாரித்துக் கொள்ளவேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, குறைந்த தீயில் கடலை மாவை வறுத்துக்கொள்ளுங்கள். நிறம் மாறி வாசனை வந்ததும் இறக்கி ஆறவிட்டு, அதனுடன் பூரணத்துக்கான மற்ற பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஆறவிடுங்கள்.&lt;br /&gt;மிளகாய்களை சுத்தம் செய்து, லேசாக நீளவாக்கில் கீறி, உள்ளே இருக்கும் விதைகளை கவனமாக நீக்குங்கள். அதனுள், கடலை மாவு பூரணத்தை நன்கு நிரப்புங்கள். பிறகு, பஜ்ஜிக்கான கடலை மாவு, ஆப்ப சோடா, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பூரணம் நிரப்பப்பட்ட மிளகாய்களை மாவில் நனைத்தெடுத்து, எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரெட் பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; பிரெட் ஸ்லைஸ் 2, கடலை மாவு முக்கால் கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, பூண்டு 4 பல், பெரிய வெங்காயம் 1, கறிவேப்பிலை சிறிது, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பிரெட், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். கடலை மாவில் போட்டு, உப்பையும் சேர்த்து பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவில் சிறிது தண்ணீர் தெளித்து அழுத்திப் பிசைந்து, சிறு பக்கோடாக்களாக உதிர்த்துவிடுங்கள். நன்கு வேக விட்டெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காய்கறி பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் 1 டேபிள்ஸ்பூன். காய்கறிக்கலவை (எந்தக் காய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்) ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருட்களை ஒன்றாகப் பிசறுங்கள். எண்ணெயைக் காய வைத்து, அந்த எண்ணெயிலிருந்து, ஒரு குழி கரண்டி அளவுக்கு எடுத்து, மாவில் சேருங்கள். இட்லி மாவை விட சற்று கெட்டியாக கரையுங்கள். சிறிது சிறிதாக காயும் எண்னெயில் ஊற்றுங்கள். நன்கு வெகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாகற்காய் பக்கோடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பாகற்காய் (நடுத்தரமான அளவில்) 2, கடலை மாவு அரை கப், அரிசி மாவு அரை கப், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாகற்காயைக் கழுவித் துடைத்து, மெல்லிய வட்டங்களாக நறுக்கி, விதைகளை நீக்குங்கள். கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை பாகற்காயுடன் சேர்த்துப் பிசறிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;எண்ணெயைக் காயவைத்து, பிசறிய கலவையில் மேலும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயில் போட்டு மித மான தீயில் பொரித் தெடுங்கள்.&lt;br /&gt;எண்ணெய் அதிகமாகக் காய்ந்தால், பாகற்காய் கருகிவிடும். எனவே தீயைக் குறைத்துவைத்து வேகவிடுங்கள். கசப்பு தெரியாத, கரகரப்பான பக்கோடா இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காலிஃப்ளவர் பஜ்ஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt; காலிஃப்ளவர் 1, கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய் தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt; மாவுடன் கார்ன்ஃப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியான பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி, அலசி, உப்பு கலந்த கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டெடுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். காலிஃப்ளவரை சிறிது சிறிதாக மாவில் போட்டெடுத்து எண்ணெயில் தூவினாற்போல் போட்டு, வேகவிட்டு எடுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114471292371398864?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471292371398864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471292371398864'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/30.html' title='30 வகை பஜ்ஜிபக்கோடா!'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114471283033091641</id><published>2006-04-10T16:46:00.000-07:00</published><updated>2006-04-10T16:47:10.333-07:00</updated><title type='text'>நேந்திரம் சிப்ஸ்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/nenthi.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/nenthi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேந்திரங்காய்  2, மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன், உப்பு  தேவையானது, தேங்காய் எண்ணெய்  பொரிக்கத் தேவையானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேந்திரங்காய்களை வாழைப்பழம் உரிப்பது போல் உரித்து தோலை நீக்குங்கள். மஞ்சள்தூள், உப்பை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து நேந்திரங்காய்களை நேரடியாக எண்ணெயில் சீவி விடுங்கள். நன்கு வெந்து எடுக்கும் சமயம் உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரை சிறிது எண்ணெயில் தெளித்து, படபடவென்று பொரிந்து அடங்கியதும் சிப்ஸை அரித்தெடுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114471283033091641?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471283033091641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471283033091641'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_114471283033091641.html' title='நேந்திரம் சிப்ஸ்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114471272807617226</id><published>2006-04-10T16:43:00.000-07:00</published><updated>2006-04-10T16:45:28.076-07:00</updated><title type='text'>இலை அடை - பூரணக் கொழுக்கட்டை..??</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/poorani.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/poorani.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/poorani.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/poorani.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பச்சரிசி மாவு 1 கப், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் அல்லது நெய் 1 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரணத்துக்கு: தேங்காய் துருவல் (அழுத்தி அளந்தது) அரை கப், வெல்லம் (பொடித்தது) அரை கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நெய் 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி மாவை, உப்பு, கொதிக்கும் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டுங்கள். வடிகட்டிய வெல்லப்பாகில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஒரு வாழையிலையை சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். ஒவ்வொரு இலைத் துண்டிலும் சிறிது மாவு வைத்து, மெல்லிய அடையாக தட்டி, நடுவில் பூரணம் வைத்து இலையோடு மடித்து, இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்தெடுத்துப் பரிமாறுங்கள்.&lt;br /&gt;ஒருமுறை சாப்பிட்டால் அந்த மணமும் ருசியும் உங்கள் நாவிலும் மனசிலும் தங்கிவிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114471272807617226?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471272807617226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471272807617226'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_114471272807617226.html' title='இலை அடை - பூரணக் கொழுக்கட்டை..??'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114471255789237849</id><published>2006-04-10T16:40:00.000-07:00</published><updated>2006-04-10T16:42:37.893-07:00</updated><title type='text'>பருப்பு பிரதமன்</title><content type='html'>&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேவையானவை:&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;பாசிப்பருப்பு  அரை கப், அரிசி ரவை  2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (பொடித்தது)  1 கப், முதல் தேங்காய்ப்பால் (கெட்டியானது)  1 கப், இரண்டாம் தேங்காய்ப் பால்  1 கப்,\ ஏலக் காய்தூள்  1 டீஸ்பூன், நெய்  1 டேபிள்ஸ்பூன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt; பருப்பை வாசனை வரும்வரை வறுத்து, வேகவிடுங்கள். அதனுடன் ரவையையும் சேர்த்து வேகவிடுங்கள். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டி, வெந்த பருப்பில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இரண்டாவது தேங்காய்ப்பாலை சேருங்கள். 5 நிமிடம் கொதிக்கவிட்டு, முதல் பாலை ஊற்றி இறக்குங்கள். ஏலக்காய்தூள், நெய் சேர்த்து பரிமாறுங்கள். கேரள மாநிலத்தவரின் ஃபேவரிட் பாயசங்களில் இதுவும் ஒன்று.&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114471255789237849?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471255789237849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471255789237849'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_114471255789237849.html' title='பருப்பு பிரதமன்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114471233322509615</id><published>2006-04-10T16:38:00.000-07:00</published><updated>2006-04-10T16:38:53.226-07:00</updated><title type='text'>வடுமாங்காய் - நாக்கு ஊறுதுங்கோ</title><content type='html'>அரைக்காமல் கொள்ளாமல் செய்யக் கூடிய, ஒரு வருடத்துக்கு வைத்துக்கொள்வது போல ஒரு சூப்பரான வடுமாங்காய் ஊறுகாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து கப் உருண்டை மாவடுவை கழுவித் துடைத்து, அரைமணி நேரம் நிழலில் உலரவிடுங்கள். ஒரு கப் கல் உப்பை எடுத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். (தூள் உப்பாக இருந்தால் முக்கால் கப் போதும்). மாவடுவுடன் பொடித்த உப்பைச் சேர்த்து பிசறி, ஒரு ஜாடியில் போட்டு மூடிவையுங்கள். மறுநாள் நன்கு குலுக்கிவிடுங்கள். மூன்றாம் நாள், வடு தண்ணீர் விட்டிருக்கும். மீண்டும் நன்கு கிளறி மூடிவையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் நாள், உப்பு நீரிலிருந்து வடுக்களை எடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில், போட்டுவைத்துவிட்டு, ஒரு கரண்டியால் உப்பு நீரை நன்கு கலக்குங்கள். (கரையாமல் இருக்கும் உப்பும் கரைந்துவிடும்). ஒரு மெல்லிய, சுத்தமான துணியால் வடிகட்டுங்கள். அந்த நீரில் அரை கப் மிளகாய்தூளையும் கால் கப் கடுகுத்தூளையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பிறகு, அதனுடன் வடுவையும் சேர்த்துக் கலந்து ஒரு ஜாடியில் போட்டு, மூடிவையுங்கள். அவ்வளவுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஊறுகாய் எவ்வளவு நாளானாலும் அப்படியே இருக்கும். மேலே ஏடு படியாது. இந்த முறைக்கு விளக் கெண்ணெய், மஞ்சள்தூள் தேவை இல்லை.’’&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114471233322509615?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471233322509615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471233322509615'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_114471233322509615.html' title='வடுமாங்காய் - நாக்கு ஊறுதுங்கோ'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114471222622974777</id><published>2006-04-10T16:34:00.000-07:00</published><updated>2006-04-10T16:37:06.230-07:00</updated><title type='text'>வேப்பம்பூ பச்சடி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/veppilai.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/veppilai.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;தேவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை (புதிய) வேப்பம்பூ  1 கப், வெல்லத்தூள்  1 கப், புளி கரைத்த தண்ணீர்  1 கப், உப்பு  சிறிதளவு, காய்ந்த மிளகாய்  3, கடுகு  கால் டீஸ்பூன், நெய்  அரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புளி கரைத்த தண்ணீரை உப்பு போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, பின் வெல்லம் போட்டுக் கொதிக்க விட வும். சற்று பிசுக்கு பதம் வந்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டிக் கலக்கவும். இப்போது பச்சடியில் உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு சேர்த்தாயிற்று.&lt;br /&gt;கைப்பு (கசப்பு), துவர்ப்பு இரு சுவையும் உடைய வேப்பம்பூவை புதிதாக பறித்து வந்து, வாணலியில் போட்டு அடுப்பை நிழல் போல் எரியவிட்டு, மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுக்கவும். அவசரப்படாமல், நிதானமாக வறுக்கவும். பிறகு, அதை மிக்ஸியில் பொடிக்கவும். அப்பளக் கல்லில் வைத்து குழவியால் கூட பொடிக்கலாம். பொடித்த பூவை பச்சடியில் தூவவும். உடனே பரிமாறவும். அறுசுவை ருசியோடு வேப்பம்பூ பொடியும் மொறுமொறுப்பாக வாயில் அகப்படும். தமிழ் வருடப் பிறப்பன்று அறுசுவையோடு சாப்பிடவேண்டும் என்பதற்காக இந்த பச்சடியை செய்வார்கள். உடம்புக்கும் மிக மிக நல்லது.&lt;br /&gt;பூவைப் பச்சையாகப் போட்டால் அதன் சத்து அப்படியே கிடைக்கும். பச்சைப் பூ கிடைக்காவிட்டால், காய்ந்த வேப்பம்பூவை வறுத்துப் போடலாம். பூவை நன்கு கருக வறுக்காவிட்டால், பச்சடி கசந்துவிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114471222622974777?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471222622974777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471222622974777'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_114471222622974777.html' title='வேப்பம்பூ பச்சடி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114471204089900744</id><published>2006-04-10T16:32:00.000-07:00</published><updated>2006-04-10T16:34:00.900-07:00</updated><title type='text'>முருங்கைக் கீரை தொக்கு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/murungs.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/murungs.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;முருங்கை கீரை  2 கப், உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  5, புளி  நெல்லிக்காய் அளவு, எண்ணெய்  1 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பெருங்காயம் (விருப்பப்பட்டால்)  துளியளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முருங்கைக் கீரையை சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். பிறகு, அந்த எண்ணெயிலேயே, கீரையை போட்டு வதக்கி எடுக்கவும். மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைக்கவும். தயிர் சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகிய உணவுகளுக்கு அருமையான சைட்டிஷ் இது. முருங்கை கீரை பிடிக்காத பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தண்ணீர் விடாமல் பொடி போலவும் அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், சிறிது தண்ணீர் விட்டு அரைத்தால்தான், எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள சுவையான தொக்கு கிடைக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114471204089900744?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471204089900744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471204089900744'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_114471204089900744.html' title='முருங்கைக் கீரை தொக்கு'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114471188253652452</id><published>2006-04-10T16:28:00.001-07:00</published><updated>2006-04-10T16:31:22.843-07:00</updated><title type='text'>கோவா சீஸ் ஜாமூன்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/kovaa.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/kovaa.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவா (பாலை சுண்டக் காய்ச்சி எடுத்தது)  ஒரு கப், சீஸ் (துருவியது)  அரை கப், மைதா மாவு  முக்கால் கப், சர்க்கரை  5 கப், சோடாமாவு  ஒரு சிட்டிகை, கடலை எண்ணெய்  இரண்டரை கப், ஏலப்பொடி  ஒரு சிட்டிகை, கேசரி பவுடர்  ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பால்கோவாவை நன்கு உதிர்த்துத் தேய்த்து மிருதுவாக்கிக் கொள்ளவும். சீஸையும் தேய்த்து மிருதுவாக்கிக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் மைதா மாவையும் சேர்த்து நன்கு பிசையவும். ஜாமூன் உருண்டைகளாக உருட்டவும். சர்க்கரையில் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு, கெட்டியாக இல்லாமல் ஜீரா தயார் செய்யவும். ஏலப்பொடி, கேசரி பவுடர் சேர்த்து இறக்கவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஜாமூன் உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்து ஜீராவில் போடவும். செய்வதற்கும் சுலபம். சாப்பிடுவதற்கும் புதுச் சுவையாக இருக்கும்.&lt;br /&gt; சாதாரண ஜாமூன், ஜீராவில் சிறிது கரையும். இந்த ஜாமூன் கரையாமல், உருண்டையாக அப்படியே இருக்கிறது. சீஸ் போடுவதால் மாவுக் கலவை சற்று இளகுவது போலிருந்தால், மைதாவை கொஞ்சம் ஜாஸ்தி சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114471188253652452?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471188253652452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114471188253652452'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post_10.html' title='கோவா சீஸ் ஜாமூன்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114436454698404699</id><published>2006-04-06T15:59:00.000-07:00</published><updated>2006-04-06T21:00:36.216-07:00</updated><title type='text'>வயதானவர்களுக்கான உணவுகள்</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=451075&amp;amp;sid=mAK47fuIX5" border="0" height="432" width="288" align="left" /&gt;        &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=169"&gt;நன்றி: பத்மா அர்விந்த&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள்தோறும் நாம் சற்றே முதுமை அடைந்து கொண்டிருக்கிறோம். வளர்ச்சி நின்றுபோய் முதுமை தொடங்கும் காலம் நடுவயதுக்காலம். நாம் உணர்ந்தோ உணராமலோ நமது உறுப்புகள் கூட முதுமையும் தளார்ச்சியும் அடைகின்றன.60 வயதிற்கு பின் செரிமான மண்டலம் முன்போல சீரண என்சைம்களை சுரப்பதில்லை. பற்கள் நன்றாக கடித்து உமிழ்நீருடன் சேர்த்து சீரணிக்க முடிவதில்லை. சாப்பிடுவதுகூட ஒரு சீரான காலத்தில் முடியாவிட்டால் செரிக்க தடுமாறுகிறது. ஆனால் இளமையில் இருப்பவர்களுக்கு இது புரிந்து கொள்வது கஷ்டம்.சமீபத்தில் உடற்பயிற்சி கூட்டத்தில் ஒரு முதாட்டி நடப்பதும் கார் கதவுகலாஇ திறக்க கூட தான் படும் சிரமங்களை சொன்ன போது, நாம் இதை எல்லாம் எண்ணிப்பார்க்கவே தவறிவிடுகிறோம் என்பது புரிகிறது. சின்ன செயல்கள் கூட குழந்தையை போல கடுமையாகி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூட்டை அரிசியை அனாயாசமாக தூக்கி போட்ட அப்பாவால் இப்போது ஒவ்வொரு படியாக ஏறுவதே கஷ்டமாக இருக்கிறது. சின்ன குழந்தையைபோல படிப்படியாக பிடித்துக்கொண்டு நடப்பதை பார்க்கும் போது முதுமை சில சமயம் கொடுமையானதென்றே தோன்றுகிறது.&lt;br /&gt;சீக்கிரமே இரவுகளில் உண்டு உறங்கிவிடுவதும், அதிகாலையில் விழிப்பு வந்து தூக்கம் வராமல் தவிப்பதுமாய் முதியவர்கள் அல்லல் படுவதை பார்த்தால், அவர்களுடன் பொறுமையாக இல்லாமல் கடிந்து கொள்ளும் பிள்ளைகளை கண்டால் இன்னும் கோபம் வருகிறது.சிலருக்கு சாதம் பருக்கைகள் கூட குழைந்து இருந்தால் மட்டுமே உன்ண முடியும்.தனியாக இருக்கும் முதியவர்களுக்கு சமையல் செய்யும் போது மறதி வருவதும், அடுப்பில் உணவுவகககள் தீய்ந்து போவதும், இன்னும் மர வீடுகளில் இது நெருப்பு பிடிக்கும் அபாயம் இருப்பதும் கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் முதியவர்கள் விரும்பினால் அவர்கள் வீட்டிற்கே சென்று உணவை மூன்று வேளையும் உணவு தருகிறார்கள்.குறிப்பிட்ட வருமானத்திற்கு மேலாக இருந்தால் சதவிகித அ டிப்படையில் பணம் கட்டினால் போதுமானது. இது அரசாங்கம் ஏற்று நடத்தும் திட்டம் என்பதால் குறைந்த சகாய விலையில் நல்ல தரமான உணவாக தயாரிக்க படுகிறது. மேலும் பெயரை கொடுத்து பதிவு செய்யும் போது அவரவர் மருத்துவர் சான்றிதழும் பெற்றுக்கொள்ளப்படுவதால் நீரிழிவு நோய் இருந்தால் அதற்கேற்ற முறையிலும் உணவு வழங்கப்படுகிறது.இதற்கான புதிய திட்டம், கொள்கை மாற்றம் செய்யப்படும் மாநில அளவிலான குழுவில் நானும் ஒரு முக்கிய அங்கத்தினர் என்பதால் உங்கள் அனைவரிடமிருந்தும் சில கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் பலர். குறிப்பாக எடிசன் போன்ற நகரங்களில் இந்தியர்கள் மக்கள் தொகையில் 24% ஆகும். நாம் முதுமை அடைந்தால், ஏற்கெனவே முதுமை அடைந்தவர்களுக்கு அமெரிக்க உணவுவகைகள் பொறுத்தமாக இருக்காது. ஆனால், இந்தியர்கள் சுவைக்கேற்ப உணவு தயாரித்து அனுப்ப வேண்டுமானால் எததகைய உணவுகள் முதியவ்ர்களுக்கு பொறுத்தமாக இருக்கும்? மேலும் குளிர்காலத்தில் எடுத்து செல்லப்படும் உணவு நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்க என்ன செய்ய வேண்டும்? குளிர் பதனப்படுத்தப்பட்ட சாண்ட்விச்கள் ஈடாக நாம் என்ன செய்ய முடியும்? சூப் போன்றவை அனைவராலும் விரும்பி அருந்த முடியுமா? அதற்கு ஈடாக என்ன செய்ய முடியும்? அப்படி செய்ய முடியுமானாலும் எப்படி சமையல் செய்பவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது போன்றவை பற்றியும் இன்னும் நான் குறிப்பிடாமல் விட்ட சில உணர்வு பூர்வமான கலாசாரம் சார்ந்த விஷயங்கள் இருப்பினும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். உணவுவைகள் எளிதில் நிறைய பேருக்கு செய்ய கூடியதாகவும், நீண்ட நேரம் கெடாமல் இருப்பதாகவும் இருந்தால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை காய்கறிகள் சேர்த்து கொள்பவர்களுக்கு எந்தவகையில் சாலட் செய்தால் பொறுத்தமாக இருக்கும்? இங்கே அமெரிக்காவில் சாலட் என்றாலே பெரும்பாலும் அது லெட்டஸ் போட்டதுதான். உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் அதையும் சேர்த்துக்கொள்ள முடியும். ஏப்ரல் 11 ஆம் தேதி இதற்கான இரண்டாவது திட்டக்குழு கூட இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=169#311"&gt;1.&lt;/a&gt; &lt;a href="http://dubukku.blogspot.com/" rel="external nofollow"&gt;Dubukku&lt;/a&gt; - April 5, 2006&lt;br /&gt;&lt;br /&gt;ஜவ்வரிசிக்/அரிசிக் குருணைக் கஞ்சி, அப்பளம் ஆகியவற்றை பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். சூப்புக்கு பதிலாக இவை செல்லுபடியாகுமா தெரியவில்லை. பாலை தனியாக வேண்டும் பொழுது கலந்துகொண்டால் கெடாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்….&lt;br /&gt;இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்றையும் பதப்படுத்தி கெடாமல் கொடுக்கலாமே?&lt;br /&gt;just my 2p worth.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=169#312"&gt;2.&lt;/a&gt; Jayashree - April 5, 2006&lt;br /&gt;&lt;br /&gt;my 2 cents worth …..&lt;br /&gt;பொதுவாக வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் உணவுமுறைகள் வேறுபட்டு இருக்கிறது. எனவே அரிசியாலான உணவு வகைகளும், கோதுமையாலான உணவு வகைகளும் சம அளவில் இருக்கலாம்.&lt;br /&gt;கோதுமை ரவை (cream of wheat) நீரிழிவு நோயாளிகளுக்கும் மற்றும் எல்லா வயதானவர்களுக்கும் எளிதில் செரிக்கக்கூடிய உணவு. அவரவர் தேவைக்கேற்ப திட உணவாகவோ அல்லது கஞ்சி போன்றோ தயாரிக்கலாம். இரவு உணவுக்கு மிகவும் எற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகளுடன், பருப்பு (lentils) சேர்த்து இந்திய சுவைக்கேற்றதுபோல் spices சேர்த்து சூப் தயாரிக்கலாம். முழு உணவாகவோ அல்லது sidedish ஆகவோ&lt;br /&gt;இட்லி பொதுவாக எல்லாராலும் விரும்பப்படும் உணவு. டோக்ளாவும் இதைப்போலவே. இரண்டையும் freeze செய்தும் உபயோகிக்கலாம். வயதானவர்களுக்கு ஏற்றது. பருப்பும் அரிசியும் சேர்த்து செய்யப்படும் கிச்சடி.&lt;br /&gt;மிருதுவான மெல்வதற்கு எளிதான சப்பாத்தி. Dhal. வேகவைத்து மிதமான காரம் சேர்த்த காய்கறிகள். வெள்ளரி, கேரட், முதலியவற்றை துறுவியோ, பொடியாக நறுக்கியோ, எலுமிச்சை சாறு, சிறிதளவு மிளகு சேர்க்கப்பட்ட சாலட் வகைகள். கீரைகளை வேகவைத்து மசித்த சாக் போன்றவை ( இரவில் செரிப்பது கடினம்). மேலும் பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவற்றை காய்கறிகள் சேர்த்து இந்தியர்கள் சுவைக்கேற்ப சமைக்கலாம். இதுபோல உணவுவகைகளைப் பட்டியலிட்டு, பின் மெனு தயாரிக்கும்போது எல்லாருடைய தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=169#313"&gt;3.&lt;/a&gt; &lt;a href="http://thulasidhalam.blogspot.com/" rel="external nofollow"&gt;துளசி கோபால்&lt;/a&gt; - April 5, 2006&lt;br /&gt;&lt;br /&gt;பத்மா,&lt;br /&gt;&lt;br /&gt;வயசாயிட்டா நாக்கு கொஞ்சம் அலையும்தான். முதுமைவரவர, குழந்தைகளா ஆயிடறதும் இதனாலேதான்.ரசம் சாதம் பலபேர் விரும்பிச் சாப்புடறதை பார்த்துருக்கேன். சீரணமும் ஆயிரும். மைக்ரோவ்லே சூடாக்கிக்கறமாதிரி, சின்னச்சின்ன கப்களிலே கொஞ்சம் பருப்பு, தயிர், ரசம், எதாவது ஒரு காய் இருந்தாவே யதேஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இட்டிலியும் அருமைதான்.இடியாப்பம்கூட இப்படி ஃப்ரீஸ் செஞ்சுக்கலாம். சுடவச்சா வித்தியாசமே தெரியாது.அரிசி உப்புமா கூட நல்லதுதான். மிளகு, சீரகம் சேர்த்துச் செய்யலாம். வெண்பொங்கல், நல்லா குழைவா இருந்தாஅவுங்களுக்கு ரொம்ப இதமா இறங்கும். பல் சரியா இல்லேன்னா சப்பாத்தி சாப்புடறது கஷ்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப ஸ்பைஸ் இல்லாம சமைக்கணும். தென்னிந்தியர்கள்ன்னா புளிக்குழம்பு, வெந்தியக்குழம்பு வாரம் ஒரு நாள்கொஞ்சமா (நாலு டேபிள் ஸ்பூன் போதும்) கொடுக்கலாம். இன்னும் ஞாபகம் வந்தா எழுதறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான் கிழவியானப்புறம் இந்தியாவிலே முதியோர்கள் இல்லத்துலே சேர்ந்துடலாமான்னுஒரு யோசனை. அட்லீஸ்ட் ஒரு ரசஞ்சாதம் கிடைக்குமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=169#314"&gt;4.&lt;/a&gt; &lt;a href="http://aruna52.blogspot.com/" rel="external nofollow"&gt;Aruna Srinivasan&lt;/a&gt; - April 6, 2006&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் 6 / 6. 30 மணி அளவில் காபி. இரண்டு மாரி பிஸ்கட்.&lt;br /&gt;8 மணி அளவில் - சாம்பார் / சட்னி - இட்லி / தோசை / ( ஒரு wet grinder மட்டும் இருந்து விட்டால் பாதிப் பிரச்சனை தீர்ந்தது. அங்கேயே கிடைக்கிறது என்று நினைக்கிறேன். ஹ்ம்ம்.. ஆனால் குளிர் நாளில் லேசில் புளிக்காது. ரூம் ஹீடர் சூட்டில் / அல்லது கம்பளி துணி சுற்றிய கதகதப்பில், எப்படியும் இரண்டு நாளில் ஈஸ்ட் உருவாகாதா? ) கோதுமை ரவை உப்புமா / ரவா இட்லி ( இந்தியக் கடைகளில் கிடைக்கிறது) பொங்கல் ( குழைய, அதிகம் நெய்யில்லாமல்) - கொத்சு.&lt;br /&gt;&lt;br /&gt;12 / 1 மணி அளவில் - சாதம் / சாம்பார். (பிசைந்து கொள்ள மேலும் வகைகள் - காரமில்லாமல் வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, மசியல் போன்றவை) பொறியல் ( எல்லா பச்சைக்காய்கறிகளூம் ) சாலட்டுக்கு - வெள்ளரிக்காய் /தக்காளி / காரட் வெகு மெல்லிசாக சீவினது. தேவையென்றால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றலாம் - பாதகமில்லை. ( பல்லில்லாதவர்கள் சாப்பிட ஏதுவாக). தயிர்.&lt;br /&gt;4 மணிக்கு சத்துமாவு கஞ்சி அல்லது ஹார்லிக்ஸ் - பிஸ்கெட் ( அல்லது கொழுப்பு அதிகம் இராத cookies) ( அல்லது முடிந்தால் ஒரு தோசை!!) ஒரு பழம்.&lt;br /&gt;&lt;br /&gt;7 மணிக்கு - சப்பாத்தி - பயத்தம்பருப்பு கூட்டு / அல்லது சாதம் - ரசம் / பொறியல் - தயிர்&lt;br /&gt;&lt;br /&gt;சத்துமாவு கஞ்சி. இப்போதெல்லாம் இந்தியாவில் பலவித பிராண்டுகள் கிடைக்கின்றன. மொத்தமாக தருவித்துக்கொள்ளலாம். அரைக்க வசதியிருந்தால் - கம்பு, கேழ்வரகு, சோளம், புழுங்கலரிசி, கோதுமை, பயறு, மக்காச்சோளம், கொள்ளு, ஜவ்வரிசி, பார்லி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, கொத்துக்கடலை, காராமணி, சோயா, பலவித தான்யங்கள் ஒவ்வொன்றும் 100 கிராம் அளவில் போட்டு வறுத்துவிட்டு இவற்றுடன் முந்திரி, பாதாம் ஏலக்காய் போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். ஒரு ஸ்பூன் மாவை ஒரு டம்ளர் நீரில் கரைத்து அடுப்பில் ஏற்றி கூழாக வரும் வரை கிளரி, இறக்கி பாலோ அல்லது மோரோ - விருப்பப்படி சேர்க்க வேண்டும். தயாரித்து பிளாஸ்கில் ஊற்றி எடுத்துச் செல்லலாம் பால் / சர்க்கரை சேர்த்தது என்றால். மோர் / பெருங்காயம் சேர்த்தது என்றால் சாதாரணமாக ஜூஸ் எடுத்துப் போகும் பாட்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சூப்புக்கு பதிலாக நிறையத் தக்காளி போட்டு ரசம். ( பருப்பு விழுதுக்கு பதிலாக வேகவைத்த பருப்பின் நீர் மட்டும் போது. மிளகு, சீரகம் - இவை அதிகம் இல்லாமல். முடிந்தால் அந்த ரசத்திலேயே காய்கறிகள் வேகவிட்ட நீரையும் சேர்க்கலாம். கூடுதல் சத்துக்கு. பிரெட்டுக்கு பதிலாக இட்லி / தோசை / டோக்ளா வகையறாக்கள். - கார்போஹைடிரேட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகள்: பொறியல் மற்றும் சாலட்.சாலட்டுக்கு - வெள்ளரி, தக்காளி, காரட் கோஸ்மல்லி வகைகள் அல்லது வெள்ளரிக்காய் / தக்காளி தயிர் பச்சடி.&lt;br /&gt;நடுவில் எங்காவது filling வேண்டுமென்றால் மெனுவில் நன்றாக வேகவைத்த சுண்டல் சேர்த்துக்கொள்ளலாம் - புரோட்டினுக்கு தயிரும் இருக்கே.&lt;br /&gt;தொண்டூழியம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒருவர் என்று முறை வைத்துக்கொண்டு தயாரித்து கொண்டுபோய் கொடுக்கலாம்.&lt;br /&gt;ரசம் போன்ற நீர் பதார்த்தங்களை பெரிய பிளாஸ்க்குகளில் எடுத்துச் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இட்லி, / சாதம்/ பொறியல் போன்ற திடப்பதார்த்தங்கள் நம்ம ஊரில் சாதாரணமாக ஹாட்பேக்கில் மூன்று மணி நேரம் சூடாக இருக்கும். ஆனால் உங்க ஊர் குளிரில்….?!! நீங்கள் சூடாக வைக்க வீட்டுக்கு செய்யும் முறையையே பெரிய அளவில் செய்து பார்க்கலாம். அல்லது கொண்டுபோய் கொடுப்பவர்கள் ( delivery people) மைக்ரோவேவில் சூடு படுத்தி ஹாட் பேக்கில் வைத்துவிட்டு போகலாம். இன்னும் யோசித்து எழுதுகிறேன் பத்மா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=169#315"&gt;5.&lt;/a&gt; &lt;a href="http://www.thyag-thyag.blogspot.com/" rel="external nofollow"&gt;thyag&lt;/a&gt; - April 6, 2006&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர்களுக்கு காலை,மதியம்,இரவு என்ற வழக்கமான மூன்று முறை - செறிமானத்திற்கு அவ்வளவாக நல்லதல்ல.அதற்கு பதிலாக அதே அளவு உணவை ஐந்து முறையாக (3 மணி நேர இடைவெளியில்) உட்கொண்டால் எளிதாக ஜீரணமாகும். இது எனது தந்தைக்கு மருத்துவர் சொல்லியுள்ள பொதுவான அறிவுரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=169#316"&gt;6.&lt;/a&gt; karthikramas - April 6, 2006&lt;br /&gt;&lt;br /&gt;பதமா,பொதுவாக வயதானவர்களின் பிரச்சினை அல்லது வயாதானால் வரும் பிரச்சினை ஜீரணம் சார்ந்தது ஆகையால் எளிதில் ஜீரணம் ஆகும் பண்டங்கள் கொடுப்பது அவசியம்.&lt;br /&gt;1) சாதம், இட்லி போன்றவை முதன்மைப்பண்டங்களாக இருக்கலாம்.2) மாரி பிஸ்கட்3) மிகவும் நீராக இருக்கும் எதுவும் கொடுக்கலாம்.&lt;br /&gt;மேலே அருணா சொன்னவற்றில் நான் சிலவற்றை தவிர்ப்பேன்.1)தோசை எண்ணெய் இருப்பதால் தவிர்க்கலாம், அல்லது எண்ணெய் குறைவாக சேர்த்து செய்து கொடுக்கலாம்.2) சத்துமாவு கஞ்சி கொடுத்தால் நீர்ப்பதமாய் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகு சொன்னது போல 5 வேளை அல்லது 7 வேளை என்று பிரித்து உண்பதையும் பல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=169#317"&gt;7.&lt;/a&gt; Partha - April 6, 2006&lt;br /&gt;&lt;br /&gt;“One size fits all” உணவு நடைமுறைக்கு சரிவராது. இதற்கு மேல், அவரவர் வளர்ந்த இடம் பொறுத்து விருப்பமும் வேறுபடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:1) உணவு “small portions” -ஆக இருப்பது முக்கியம்.2) காய்கறிகள் அதிகம் இருக்க வேண்டும், அரிசி/கோதுமை குறைவாக இருக்க வேண்டும்.3) கலோரி ஒரு நாளுக்கு எவ்வளவு தேவை என்பதை பொறுத்து, portions பிரிக்கப்பட வேண்டும்4) பொறிக்கபடும்/வறுக்கப்படும் உணவுகள் அவனில் தயாரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;உண்பவர்களின் ஆரோக்கியம்/நோய் பொறுத்து உணவுகளை வகைப்படுத்த வேண்டும்:உதா 1: வயதானவர்கள் பெரும்பாலும்/நிறைய பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் அதிகம் கார்போஹைட்ரேட் இல்லாத உணவாக இருப்பது அவசியம். காலையும் சர்க்கரை, மதியமும் சர்க்கரை என்பது சரிவராது.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகள் அதிகம் இருக்க வேண்டும், அரிசி/கோதுமை குறைவாக இருக்க வேண்டும். கார்ப் உணவிலும், க்லைசிமிக் இன்டக்ஸ் குறைவாக உள்ள உணவாக இருக்க வேண்டும்.இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு நோய் இருக்கக்கூடும். அதனால் சில வகைப்படுத்துதல் முக்கியம்.1) உப்பு குறைவாக உள்ள உணவு2) சர்க்கரை/கார்ப் குறைவாக உள்ள உணவு3) காரம் குறைவாக உள்ள உணவு4) கொழுப்பு குறைவாக உள்ள உணவு&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கேட்ட கேள்வியை விட்டு விலகி சென்றுவிட்டேன். சில கருத்துக்கள் கீழே: (நான் சைவம் என்பதால் அசைவம் பற்றி அவ்வளவு தெரியாது. ஆனால், ஆட்டிறைச்சி நல்லதல்ல. கோழி வறுக்கபடாமல்/தோல் இல்லாமல் இருப்பது முக்கியம். மீன் வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம் (மீனிலும் அதிகம் கொழுப்புள்ள மீன்கள் இருக்கின்றன: சால்மன், ட்யூனா போன்றவை)&lt;br /&gt;1) இட்லி - புதினா சட்னி/தக்காளி சட்னி/காய்கறி சட்னி2) ராகி ரொட்டி3) பருப்பு சேர்த்த கூட்டு (முட்டைகோஸ், காலி ப்ளவர்,சௌ சௌ, சுரைக்காய்,கத்திரிக்காய் )4) பருப்பு - வட/தென்னிந்திய முறை. பல வகை கீரை சேர்த்தும் சமைக்கலாம்.5) முட்டைகோஸ் பொரியல்6) மோர்க்குழம்பு7) அவியல் (உருளை போன்ற காய்கறிகளை தவிர்க்கலாம்)8) முளைத்த பயிர் சாலட்/சுண்டல்9) கத்திரிக்காய் பொரியல் (தேங்காய், எள் சேர்க்காமல்)10) அதிகம் இனிப்பு/கொழுப்பு இல்லாத பிஸ்கட் (ஜூலியா மாரி?)11) அவல் உப்புமா12) ராகி கஞ்சி13) காலி ப்ளவர் - பட்டானி - வட/தென்னிந்திய முறை14) கீரை சேர்த்த சப்பாத்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114436454698404699?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114436454698404699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114436454698404699'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/04/blog-post.html' title='வயதானவர்களுக்கான உணவுகள்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114340717126753887</id><published>2006-03-26T13:02:00.000-08:00</published><updated>2006-03-26T13:09:10.996-08:00</updated><title type='text'>பாஸ்தா காய்கறி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/PennePasta.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/PennePasta.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தேவையானவை :&lt;br /&gt;&lt;br /&gt;ஓலிவ் எண்ணை – 3 மேசைக் சிறுகரண்டிகள்&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://www.flickr.com/photos/38589843@N00/sets/72057594091169367/"&gt;ஸ்பினாச் கீரை – ஒரு கைப்பிடி அளவு – கழுவி பிரிக்கப்பட்டது&lt;br /&gt;2. கேரட் – ஒன்று – நீள்வாக்கில் வெட்டி பாதியாக வெட்டப்பட்டவை&lt;br /&gt;3. காளான்கள் – வெட்டினால் 4 அவுன்ஸ் வருமளவிற்கு அல்லது விருப்பத்தைப் பொறுத்து.&lt;br /&gt;4. பச்சை, சிகப்பு, மஞ்சள் அமேரிக்க குடமிளகாய்கள் – தலா 1 – நீள்வாக்கில் வெட்டப்பட்டவை&lt;br /&gt;5. பச்சை மிளகாய் – 5, 6&lt;br /&gt;6.வாதாம் பருப்பு – 10, 15&lt;br /&gt;7.கொத்தமல்லி தழை – அளவு விருப்பத்தை பொறுத்து&lt;br /&gt;8.வெள்ளை வெங்காயம் – அரை – நீள்வாக்கில் வெட்டப்பட்டது&lt;br /&gt;9.பூண்டு – 2 பற்கள்&lt;br /&gt;10.பாஸ்தா – 3 கப் ( 8oz) பாஸ்தா&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செய்முறை :&lt;br /&gt;&lt;br /&gt;அவரவருக்கு பிடித்த பாஸ்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம். பென்-னி (Penne) பாஸ்தா சீக்கிரம் குழையாது மற்றும் வயிற்றை நிரப்புவதாகவும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ் ஒட்டாத வாணலியில் எண்ணையை விட்டு வெங்காயத்தையும் நசுக்கிய பூண்டையும் வதக்கிக் கொள்ளவும். இதன் மீது முறையே கேரட், குடமிளகாய்கள், காளான் கடைசியாக கீரை ஆகியவற்றை உப்புத் தூவி போட்டு வதக்க வேண்டும். முழுதும் வேகவிடாமல், saute செய்ய வேண்டும்.&lt;br /&gt;இவை பாதியாக வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் மிளகாய், கொ.ம.தழைகள் மற்றும் வாதாம் பருப்புகளை ஒரு அரைப்பானில் கொஞ்சமாக உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். விழுது மிகவும் மென்மையாக இல்லாமல் ஓரளவுக்கு கரகரப்பான கலவையாக இருத்தல் நல்லது.&lt;br /&gt;இதற்கு முன் பாஸ்தாவை வேக வைத்து ஒரு வடிப்பானில் நீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை நிமிடங்கள் வேக வைக்க வேண்டும் என்பதை பாஸ்தா உறையிலிருந்து கண்டு கொள்ளலாம். காய்கறிகள் பாதியாக வெந்த பின்னர் அவற்றின் மீது வாதாம் கலவையைப் போட்டு பிரட்டி அதன் மீது பாஸ்தாவை சேர்த்து சில நிமிடங்கள் பிரட்டினால் பாஸ்தா ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;வாதாம் கலவை பாஸ்தாவிற்கு ஒரு இந்திய ருசியைத் தரும் அதே சமயத்தில் முழுதும் இந்திய உணவாக இராது. பல அமேரிக்க தெற்காசியர்களின் உடல்நலத்திற்கு சரிவராத தேங்காய் கொழுப்பு இல்லாமல் சம ருசியைத்மட்டும் தருவதாக வாதாம் அமைகிறது.&lt;br /&gt;மீந்து போன பாஸ்தா அடுத்த நாள் சாப்பிடும் போது கூடுதல் ருசியுடன் இருப்பதகவும் உணரப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://vassan.kollidam.com/?p=21"&gt;கொள்ளிடம் வாசன் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114340717126753887?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114340717126753887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114340717126753887'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_26.html' title='பாஸ்தா காய்கறி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114314172251262668</id><published>2006-03-23T16:18:00.000-08:00</published><updated>2006-03-23T16:14:15.556-08:00</updated><title type='text'>பச்சடிகள் - முப்பது வகை</title><content type='html'>&lt;strong&gt;நன்றி : &lt;a href="http://www.vikatan.com"&gt;அவள் விகடன்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;a href="http://www.vikatan.com"&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கோடை காலம் வந்துவிட்டால், இல்லத்தரசிகளுக்கு இரட்டிப்பு வேலைதான். விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை கண்காணிப்பது ஒருபுறம் என்றால், கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வயிற்றுக்கு கெடுதல் செய்யாத உணவு வகைகளை தயாரிப்பது இன்னொரு சவால். உங்களுக்கு உதவத்தான் இந்த இணைப்பில் 30 வகை பச்சடிகளை வழங்கியிருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். தயிர் கலந்த பச்சடிகளும் பருப்பு சேர்த்து செய்யும் பச்சடிகளும் உணவுக்கு சுவை கூட்டுவதோடு உங்கள் குடும்பத்தாரின் உடல்நலனுக்கும் வலு கூட்டும். பச்சடி செய்து, பசியாற்றுங்கள்! பாராட்டுப் பெறுங்கள்!&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தக்காளி- தேங்காய் பச்சடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தேவையானவை: புளிக்காத தயிர் 1 கப், தேங்காய் துருவல் அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்) 2, பச்சை மிளகாய் 2, இஞ்சி ஒரு சிறு துண்டு, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், எண்ணெய் ஒன்றரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர்பச்சடி இது. (தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெண்டைக்காய் பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: புளிக்காத புது தயிர் 1 கப், வெண்டைக்காய் 100 கிராம், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர்பச்சடி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="339" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=445368&amp;amp;sid=buN38vyCY5" width="438" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கத்தரிக்காய் தயிர்பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: புளிக்காத புது தயிர் 1 கப், சிறிய கத்தரிக்காய் 4, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, பூண்டு 2 பல், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கத்தரிக்காயை நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து நசுக்கி வையுங்கள். எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகளை சிறிது சிறிதாகப் போட்டு, நன்கு வேகவிட்டெடுங்கள். ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை எடுத்துவிடுங்கள். பரிமாறும்பொழுது பொரித்த கத்தரிக்காய், அரைத்த விழுது, நசுக்கிய பூண்டு, உப்பு ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து, கடுகை தாளித்துக் கொட்டுங்கள். வித்தியாசமான ருசியுடன் இருக்கும் இந்த தயிர்பச்சடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாம்பழ தயிர்பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத புது தயிர் 1 கப், நன்கு பழுத்த மாம்பழம் 1, பச்சை மிளகாய் 1, மல்லித்தழை (விருப்பப்பட்டால்) சிறிது, தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மாம்பழத்தை கழுவி, தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாய், தேங்காயை கரகரப்பாக அரையுங்கள். இதனுடன் மாம்பழத் துண்டுகளை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேருங்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த இதமான தயிர்பச்சடி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="253" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=445367&amp;amp;sid=oAB01kwNS1" width="508" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாங்காய் இனிப்பு பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மாங்காய் (சற்றுப் புளிப்பானது) 1, சர்க்கரை கால் கப், வெல்லம் பொடித்தது அரை கப், சுக்குத்தூள் சிட்டிகை, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மாங்காயை தோல்சீவி துருவிக் கொள்ளுங்கள். துருவிய மாங்காயுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவிடுங்கள். கால் கப் தண்ணீரை வெல்லத்துடன் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டுங்கள். மாங்காய் வெந்ததும், அதனுடன் வெல்லத் தண்ணீர், சர்க்கரை, சுக்குத்தூள் சேர்த்து, தீயைக் குறைத்து நன்கு கிளறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து பச்சடியில் சேருங்கள். இந்தப் பச்சடி இருந்தால் இன்னும் இரண்டு கவளம் சாதம் உள்ளே போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெள்ளரி வெங்காயம் தயிர்பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத புது தயிர் 1 கப், வெள்ளரி பாதி, பெரிய வெங்காயம் 1, தக்காளி (சற்று கெட்டியாக) 1, பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கு, மல்லித்தழை (விருப்பப்பட்டால்) சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளரி, வெங்காயத்தை தோல் சீவி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். தக்காளி, பச்சை மிளகாயையும் மெல்லியதாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தயிர், உப்பு சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள். உடலுக்கு சத்தையும் நாவுக்கு சுவையையும் அள்ளித்தரும் பச்சடி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கார்ன்- பீஸ் பனீர் ராய்த்தா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத புது தயிர் 1 கப், பிஞ்சு சோளம் 1, பட்டாணி கால் கப், பொடியாக நறுக்கிய பனீர் கால் கப், பச்சை மிளகாய் 1, பூண்டு (விருப்பப்பட்டால்) ஒரு பல், மிளகுத்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;சோளத்தை உதிர்த்துக்கொள்ளுங்கள். சோளமணிகளையும் பட்டாணியையும் வேகவையுங்கள். பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். வேகவைத்த சோளம், பட்டாணிக் கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, பனீர் துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தயிரையும் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள். குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்ற சத்தான தயிர்பச்சடி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழைப்பூ பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பு அரை கப், வாழைப்பூ இதழ்கள் 20, பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பச்சை மிளகாய் 1, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி, மோரில் போட்டு வையுங்கள் (கறுத்துப் போகாமல் இருக்கும்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நான்காக கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், வாழைப்பூவையும் சேர்த்து வதக்குங்கள். வாழைப்பூ வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்குங்கள். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பையும் மிளகாய் தூளையும் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு இறக்குங்கள். சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான பச்சடி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="341" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=445364&amp;amp;sid=yGU62mrQV8" width="439" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தக்காளி பச்சடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தேவையானவை: துவரம்பருப்பு அரை கப், பெரிய வெங்காயம் 1, தக்காளி (நன்கு பழுத்தது) 4, பச்சை மிளகாய் 2, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், புளி சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் ஒன்றரை டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை அரை அங்குல வட்டங்களாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் கொத்துப் பருப்பாக வேகவைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். சற்று வதங்கியதும் தக்காளி, உப்பு சேருங்கள். 10 நிமிடம் வதங்கியதும், புளிக்கரைசலை அதில் ஊற்றுங்கள். அத்துடன் மிளகாய்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்ததும் பருப்பையும் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இந்தப் பச்சடி டிபன், சாதம் இரண்டுக்குமே ஏற்ற சூப்பர் ஜோடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுண்டைக்காய் பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;சுண்டைக்காய் (பிஞ்சாக) அரை கப், துவரம்பருப்பு அரை கப், பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பச்சை மிளகாய் 5, புளி சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். சுண்டைக்காயை அம்மியில் வைத்து தட்டிக்கொள்ளுங்கள். அம்மி இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு விப்பர் பிளேடால் ஒரு நிமிடம் ஓடவிட்டு எடுத்து, புளித்தண்ணீரில் போட்டு வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், அத்துடன் சுண்டைக்காயை புளித் தண்ணீரிலிருந்து எடுத்து சேருங்கள். நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, புளித் தண்ணீரையும் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்தபிறகு, பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் அருமையான பச்சடி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="275" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=445365&amp;amp;sid=iMS65pINX5" width="407" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குடமிளகாய் பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: துவரம்பருப்பு அரை கப், குடமிளகாய் 2, பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, எலுமிச்சம்பழச் சாறு 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 3, மிளகாய்தூள் (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். குடமிளகாயை விதைகளை நீக்கி, பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேருங்கள். நிதானமான தீயில் நன்கு வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள், பிறகு, வேகவைத்த பருப்பை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உருளைக்கிழங்கு பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பு அரை கப், உருளைக்கிழங்கு 2, பெரிய வெங்காயம் 1, தக்காளி 4, பச்சை மிளகாய் 5, புளி சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு, பூண்டு (விருப்பப்பட்டால்) 3 பல் அல்லது பெருங்காயம் அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். உருளைக்கிழங்கு, வெங்காயம் இரண்டையும் தோல்நீக்கி பொடியாக நறுக்குங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். ஐந்து நிமிடம் வதங்கியபின், உருளைக்கிழங்கு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். கிழங்கு அரைப்பதமாக வெந்ததும் தக்காளி சேர்த்து, அது கரையும் வரை நன்கு வதக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, புளியை அரை கப் தன்ணீரில் கரைத்து ஊற்றி, குறைந்த தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் பருப்பை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். (பெருங்காயத்துக்கு பதில் பூண்டை சேர்ப்பதானால், பூண்டை நசுக்கி, வெங்காயம் வதக்கும்போது சேர்த்து வதக்கவேண்டும்). சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சுவையான சைட்டிஷ் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="293" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=445366&amp;amp;sid=fjY72eEOY8" width="469" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு பழுத்த சிவப்பான தக்காளி அரை கிலோ, அன்னாசிப்பழம் 1 கீற்று, சர்க்கரை சுவைக்கேற்ப, ரோஸ் எசன்ஸ் சில துளிகள், கார்ன்ஃப்ளார் 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அன்னாசிக் கீற்றை தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியுடன் சர்க்கரை, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து சற்று சேர்ந்தாற்போல, தளதளவென வந்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். நன்கு கொதித்ததும், இறக்கி ரோஸ் எசன்ஸ் சில துளிகள் விட்டுப் பரிமாறுங்கள். குட்டீஸ§க்குப் பிடித்தமான இந்தப் பச்சடி, பிரெட் முதல் பீட்ஸா வரை எல்லாவற்றுக்கும் பொருத்தமான காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொத்துமல்லி பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பு அரை கப், மல்லித்தழை பெரிய கட்டாக 1, பெரிய வெங்காயம் 1, தக்காளி 1, பச்சை மிளகாய் 2, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவையுங்கள். மல்லித்தழையை சுத்தம் செய்து, வேர் நீக்கி இளங்காம்பாக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் முக்கால் பாகம் மல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளிக்கரைசலை சேர்த்து, அத்துடன் மிளகாய்தூளையும் போட்டு, சிறு தீயில் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள். பச்சைவாசனை போனதும் துவரம்பருப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். மல்லி மணத்துடன் கமகமக்கும் இந்தப் பச்சடி, எந்த உணவுக்கும் ஏற்ற சூப்பர் ஜோடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பூந்தி தயிர்பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத தயிர் 1 கப், காரபூந்தி அரை கப், வேர்க்கடலை (வறுத்தது) 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு (வறுத்தது) 6, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளுங்கள். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, தயிருடன் சேருங்கள். பரிமாறும்பொழுது பூந்தி, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விசேஷங்களில் பந்தியில் முதலிடம் பெறுவது இந்த பச்சடிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பீட்ரூட் இனிப்பு பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பீட்ரூட் கால் கிலோ, சர்க்கரை சுவைக்கேற்ப, முந்திரிப்பருப்பு 8, திராட்சை 12, ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் 1 டீஸ்பூன், நெய் 1 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பீட்ரூட்டை தோல்நீக்கி துருவிக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, முந்திரி, திராட்சையை நிறம் மாறாமல் வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள நெய்யில் பீட்ரூட் துருவலை சேர்த்து பத்து நிமிடம் வதக்குங்கள். வதக்கிய பின், இறக்கி ஆறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள். அத்துடன் முந்திரி, திராட்சையையும் சேருங்கள். நன்கு கொதித்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். ஐந்து நிமிடம் கொதித் ததும், ஏலத்தூள் சேர்த்து இறக் குங்கள். விருந்து களில் உங்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தரும் இந்த பச்சடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழைக்காய் பச்சடி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பு அரை கப், வாழைக்காய் 1, பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பச்சை மிளகாய் 2, சாம்பார் பொடி 1 டீஸ்பூன், புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவையுங்கள். வாழைக்காய், வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் வாழைக்காய், தக்காளி சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, புளிக் கரைசல், வேகவைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். வாழைக்காயில் ஒரு வித்தியாசமான, சுவையான சைட்டிஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாகற்காய் பச்சடி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பாகற்காய் கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, பூண்டு 8 பல், இஞ்சி ஒரு துண்டு, புளி நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் 6, வெல்லம் ஒரு சிறு துண்டு, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் கால் கப்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாகற்காயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி, பொடியாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெல்லத்தைப் பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மிளகாயைக் கிள்ளிப் போடுங்கள். மிளகாய் வறுபட்டதும் பாகற்காயை சேருங்கள். நிதானமான தீயில் பாகற்காயை பத்து நிமிடம் வதக்குங்கள். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து மேலும் பத்து நிமிடம் வதக்குங்கள். நன்கு வதங்கியபிறகு புளிக் கரைசலை சேருங்கள். அத்துடன் உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கெட்டி யான பிறகு இறக்குங்கள். இஞ்சி, பூண்டு மணமும் இனிப்பு, புளிப்பு, கசப்பு சுவைகளும் சேர்ந்து ஒரு கலக்கல் சுவை தரும் பச்சடி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொத்தவரங்காய் பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பு அரை கப், கொத்தவரங்காய் 100 கிராம், பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பச்சை மிளகாய் 2, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவையுங்கள். கொத்தவரங்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, கொத்தவரங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்குங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொத்தவரங்காயில் ஊற்றுங்கள். அத்துடன் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் குக்கரில் போட்டு மூடி, ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து திறந்து, வேகவைத்த பருப்பை சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சாப்பிட்டுப் பாருங்கள்... ‘கொத்தவரங்காயில் இப்படி ஒரு பச்சடியா?’ என்று வியப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேரட் - முளைப்பயறு பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கேரட் 1, முளைக்கவைத்த பாசிப்பயறு அரை கப், பசுமஞ்சள் (பச்சை மஞ்சள்) ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;கேரட்டை சுத்தம்செய்து, தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். பசும் மஞ்சளையும் மல்லித்தழையையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இவற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு, உப்பு கலந்து பரிமாறுங்கள். (பொங்கல் சீசனில் கிடைக்கும் மஞ்சள் கொத்தில் இருக்கும் மஞ்சளை தொட்டியில் புதைத்து வைத்தால், நமக்கு பசும் மஞ்சள் வேண்டும் சமயங்களில் ஃப்ரெஷ்ஷாக எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் சேர்த்தால்தான் இந்த பச்சடியின் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முத்து பச்சடி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத தயிர் 1 கப், மாதுளை முத்துக்கள் அரை கப், வேகவைத்த பட்டாணி கால் கப், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு 3, பச்சை மிளகாய் 2. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிளகாய், தேங்காய், முந்திரி மூன்றையும் அரைத்து, உப்பு சேர்த்து தயிரில் கலக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து தயிர் கலவையில் சேருங்கள். இவற்றோடு பட்டாணி, மாதுளையைக் கலந்து பரிமாறுங்கள். பச்சை, சிவப்பு முத்துக்கள் பளிச்சிடும் இந்த ‘முத்து பச்சடி’, குழந்தைகளின் சாய்ஸாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழைத்தண்டு தயிர்பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத தயிர் 1 கப், வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) அரை கப், முளைவிட்ட பாசிப்பயறு கால் கப், பச்சை மிளகாய் 2, பூண்டு 2 பல், மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். வாழைத்தண்டை ஆவியில் 5 நிமிடம் வேக வையுங்கள். இவை எல்லாவற்றுடனும் தயிர், உப்பு கலந்து பரிமாறுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது இந்த தயிர்பச்சடி. (இன்னொரு வகை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பச்சையாகக் கலந்து, உப்பு, தயிர் சேர்த்தும் பச்சடி செய்யலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாங்காய் இஞ்சி கொண்டைக்கடலை பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பு அரை கப், குடமிளகாய் (சிறியது) 1, கொண்டைக்கடலை (ஊற வைத்தது) கால் கப், மாங்காய் இஞ்சி 2 துண்டு, சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 5, புளி நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவையுங்கள். மாங்காய் இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். குடமிளகாயை பொடியாக நறுக்குங்கள். சின்னவெங்காயத்தையும் தோலுரித்து பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மாங்காய் இஞ்சி, குடமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீரை சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்த பின் பருப்பு, கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். செட்டிநாட்டு திருமண விருந்தில் இந்தப் பச்சடி மிகவும் பிரபலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கீரை தயிர்பச்சடி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத புது தயிர் 1 கப், முளைக்கீரை அரை கட்டு, பச்சை மிளகாய் 2, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: சீரகம் அரை டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.&lt;br /&gt;செய்முறை: கீரையை சுத்தம் செய்து, மிகவும் பொடியாக நறுக்குங்கள். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து அரையுங்கள். குக்கரில் அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நறுக்கிய கீரையை சேர்த்து வேகவைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். நன்கு ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேர்த்து பரிமாறுங்கள். புதுமையான சுவையில் உங்களை அசத்தும் இந்த கீரை தயிர்பச்சடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கத்தரிக்காய் முருங்கைக்காய் பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பு அரை கப், முருங்கைக்காய் 1, கத்தரிக்காய் 2, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 4, தக்காளி 3, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், சோம்பு 1 சிட்டிகை, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வையுங்கள். முருங்கைக்காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய், முருங்கைக்காய், உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒரு கப் தண்ணீரில் புளியைக் கரைத்து, வடிகட்டி காய்க் கலவையில் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்தபின் பருப்பை சேர்த்து இறக்குங்கள். பச்சை மிளகாய்க்குப் பதில் சாம்பார்பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். மணமாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் ருசியாக இருக்கும் இந்தப் பச்சடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பச்சை மிளகாய் பச்சடி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பு அரை கப், பச்சை மிளகாய் 50 கிராம், சின்ன வெங்காயம் 10 அல்லது பெரிய வெங்காயம் 1, புளி நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பை நிறம் மாறாமல் வாசனை வரும் வரை வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். பச்சை மிளகாயை கால் அங்குல அளவுக்கு வட்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்குங்கள் (பெரிய வெங்காயம் என்றால் பொடியாக நறுக்குங்கள்). எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து பொன்னிறமானதும், வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள். சிறு தீயில் வைத்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள். பாசிப்பருப்பை சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். கட்டுசாதத்துக்கும் தயிர்சாதத்துக்கும் டக்கரான ஜோடி இது. இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொத்துமல்லி தயிர்பச்சடி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத தயிர் 1 கப், மல்லித்தழை 1 கட்டு, பச்சை மிளகாய் 2, முந்திரிப்பருப்பு 5, இஞ்சி 1 துண்டு, உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மல்லித்தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி மூன்றையும் நைசாக அரைத்தெடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தயிர், உப்பு சேர்த்து, கடுகு தாளித்து அதனோடு கலந்து பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இஞ்சி பச்சடி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சி 50 கிராம், பச்சை மிளகாய் 5, புளி எலுமிச்சை அளவு, வெல்லம் சிறிய துண்டு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சியைக் கழுவி தோல் சீவி, பொடியாகத் துருவிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து பச்சை மிளகாய் சேருங்கள். பின்னர் இஞ்சியையும் உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். இஞ்சி வதங்கியபின் புளித் தண்ணீரை சேருங்கள். பச்சை வாசனை போன பிறகு, வெல்லம் சேர்த்து, சற்றுக் கெட்டியான பதத்தில் இறக்குங்கள். தயிர்சாதத்துக்கு இந்த பச்சடி இருந்தால், வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் உங்கள் நாக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாங்காய் பருப்பு பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பு அரை கப், கிளிமூக்கு மாங்காய் 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 4, வெல்லம் சிறிய துண்டு, புளித் தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேக வையுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காயைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், மாங்காய், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு உப்பு, புளித் தண்ணீர், பருப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். மாதா ஊட்டாத சோறை, இந்த ‘மாங்காய் பருப்பு பச்சடி’ ஊட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதினா வெங்காய தயிர்பச்சடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்காத தயிர் 1 கப், பெரிய வெங்காயம் 3, புதினா 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து பிசறி அழுத்தி வையுங்கள். புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். பரிமாறுவதற்கு சற்று முன் வெங்காய கலவையை பிழிந்து எடுத்து தயிரில் சேர்த்து, அத்துடன் புதினா, உப்பு சேர்த்து கலந்து பறிமாறுங்கள். பிரமாதமான சுவை தரும் இந்த தயிர்பச்சடி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114314172251262668?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114314172251262668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114314172251262668'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114314172251262668.html' title='பச்சடிகள் - முப்பது வகை'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114315531596394986</id><published>2006-03-23T15:07:00.000-08:00</published><updated>2006-03-23T15:51:02.200-08:00</updated><title type='text'>சில்மிஷ தமிழ்முரசு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/18_4.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/18_4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சத்துள்ள பானத்திற்கு &lt;a href="http://epaper.tamilmurasu.in/2006/mar/23"&gt;தமிழ்முரசு&lt;/a&gt; கொடுத்திருக்கும் தலைப்பைப் பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறும்புதான். !!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114315531596394986?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114315531596394986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114315531596394986'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114315531596394986.html' title='சில்மிஷ தமிழ்முரசு'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114314150079097118</id><published>2006-03-23T11:15:00.000-08:00</published><updated>2006-03-23T11:18:20.816-08:00</updated><title type='text'>அன்னாசி மோர்க்குழம்பு</title><content type='html'>&lt;strong&gt;தேவையானவை: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்று புளித்த தயிர்  1 கப், பைனாப்பிள்  1 துண்டு, மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது, தேங்காய் எண்ணெய்  2 டீஸ்பூன், கடுகு  அரை டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு. அரைக்க: தேங்காய் துருவல்  3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய்  3, இஞ்சி  ஒரு துண்டு, சீரகம்  அரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மோரை கடைந்து கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து வைத்து விட்டு மீதியை மோருடன் சேருங்கள். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;பைனாப்பிளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு, எடுத்து வைத்திருக்கும் (அரைத்த) விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிட்டு இறக்குங்கள். பாதியளவு எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து, அதில் வேகவைத்த பைனாப்பிள், கரைத்த மோர் சேருங்கள். நன்கு கிளறிக்கொண்டே ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மீதமுள்ள எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை பொரித்து சேருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் மட்டுமே செய்யப்படும் மோர்க்குழம்பு இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114314150079097118?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114314150079097118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114314150079097118'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114314150079097118.html' title='அன்னாசி மோர்க்குழம்பு'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114314104333644558</id><published>2006-03-23T11:06:00.000-08:00</published><updated>2006-03-23T11:10:43.350-08:00</updated><title type='text'>உண்ணி அப்பம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p78a.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p78a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி மாவு  2 கப், கோதுமை மாவு  அரை கப், வெல்லம் (பொடித்தது)  3 கப், பல்லுபல்லாக நறுக்கிய தேங்காய்  கால் கப், ஏலக்காய்தூள்  அரை டீஸ்பூன், நன்கு பழுத்த பூவன் வாழைப்பழம்  1, நெய்  சிறிதளவு, எண்ணெய்  சிறிதளவு, ஆப்பசோடா  கால் டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;        அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். சிறிதளவு நெய்யில் தேங்காயை சிவக்க வறுத்து அதனுடன் சேருங்கள். வாழைப்பழத்தை தோலுரித்து மிக்ஸியில் அடித்து மாவுக்கலவையில் ஊற்றுங்கள். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும், வடிகட்டி சூடாக மாவில் ஊற்றுங்கள். அத்துடன் ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழிப்பணியார சட்டியைக் காயவைத்து ஒவ்வொரு குழிக்கும் சிறிது எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, முக்கால் குழிக்கு மாவை ஊற்றி, சிறு தீயில் வைத்து, மூடி போட்டு நன்கு வேக விட்டு திருப்பிவிடுங்கள். நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். பஞ்சு போன்றிருக்கும் இந்தப் பணியாரம், கேரள விருந்தில் இடம்பெறும் முக்கியமான இனிப்பு. அப்பம் இல்லாத பண்டிகையும் அங்கே இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114314104333644558?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114314104333644558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114314104333644558'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114314104333644558.html' title='உண்ணி அப்பம்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114314079475664947</id><published>2006-03-23T10:58:00.000-08:00</published><updated>2006-03-23T11:06:35.496-08:00</updated><title type='text'>மலபார் அவியல் - அடைக்கு உகந்தது</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/p79a.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/p79a.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து)  கால் கிலோ, கேரட் (கலருக்காக)  1, தேங்காய் எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன், புது தயிர்  2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது, உப்பு  தேவைக்கு. அரைக்க: தேங்காய்  சிறியதாக 1, பச்சை மிளகாய்  3, சீரகம்  1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;    காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, சற்று கரகரப்பாக (தண்ணீர் ஊற்றாமல்) அரைத்து எடுங்கள். அரைத்த விழுதை காய்கறியுடன் சேர்த்து, அதோடு தயிர், எண்ணெய், கறிவேப்பிலை கலந்து பரிமாறுங்கள். ஹோட்டல்கள் முதல் விருந்துகள் வரை பிரபலமான கேரள ஸ்பெஷலான இந்த ‘மலபார் அவியல்’, அடைக்கு நல்ல ஜோடி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114314079475664947?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114314079475664947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114314079475664947'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_23.html' title='மலபார் அவியல் - அடைக்கு உகந்தது'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114290312793320382</id><published>2006-03-20T17:05:00.000-08:00</published><updated>2006-03-20T18:26:30.270-08:00</updated><title type='text'>பக்கோடா - வடை - பாதாம்கீர்</title><content type='html'>&lt;strong&gt;தூள் பக்கோடா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;கடலைமாவு ஒரு கப், அரிசி மாவு கால் கப்தேவை. இதுலநல்லா மூணு கப் அளவு வெங்காயம் சின்னதாநறுக்கிப்போடலாம்.4பச்சைமிளகாய்.நிறைய கொத்தமல்லித்தழை பொடியா நறுக்கிப்போடணும்.கொஞ்சம் புதினாஇலைகருவேப்பிலை இஞ்சி சேர்க்கலாம்.இதெல்லாம் போட்டு அரைகரண்டி ரி·பைண்ட்எண்னை காச்சி விட்டு தண்ணீரெ ஊற்றாமல் ஒருமணி ஊறவச்சி அப்புறமாஎண்னையில்உதிர்த்தாற்போல போட்டால் க்ரிஸ்ப்பா வரும்.வெங்காயமும் மற்றபதார்த்தங்களும்தானாகவே நீர் சேர்த்துவிடுவதால் இதை இப்படிச் செய்தால் சூப்பர வரும்.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆமைவடை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒருகப் கடலைப்பருப்புன்னா அரை கப் பயற்றம்பருப்பு கைப்பிடி அளவு உளுத்தம்பருப்பு இவைகளை ஊறவச்சி அறைக்கிறபோதுஉப்பு காரம் பெருங்காயம் சேர்க்கணும், மாவுல அரைகரண்டி தேங்காயெண்னைகலந்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வடை செஞ்சா ஜோரா வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கீரைவடை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;உளுத்தம்பருப்புதான் தேவை. ஒரு கப்புக்கு 2 ஸ்பூன் அரிசி சேர்த்துஊறவச்சிகொஞ்சமா அவுல் போட்டு உப்பு போட்டு மைய அறைச்சி அதுல பொடியாநறுக்கியவெங்காயம் கட் செஞ்சகீரை ஒருகப், இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்துமிக்ஸில ஒரே ஒரு சுத்து சுத்தி எடுக்கணும்இதேபோல கோஸ், கேரட் துருவுப்போட்டுகூட இதே மாதிரி செய்யலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாதாம் கீர்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாதாம் பத்து முந்திரி பத்து எடுத்து சுடற நீரில் ஒருமணி நேரமாவதுஊறவக்கணும்குக்கர்ல சாதம் வைக்கும்போதே ஒருதட்டுல 2 கேரட் கட் செஞ்சி வேகவச்சிஎடுத்துவச்சிக்கணும். இப்போ வெந்த கேரட்டுடன் தோல் உறிச்ச பாதாம்பருப்புமுந்திரிபருப்புகளை பால் விட்டு சட்னி பதத்துல மிக்ஸில அறைச்சிகக்ணும்.பால் ஒருலிட்டர் எடுத்து காச்சி அதில் ஒரு கப் அலல்து ஒரு டம்ளர்சக்கரைபோட்டுகொதிக்கவிடவும். 10நிமிஷம் கொதிச்சதும் அறைத்த விழுது சேர்த்துஎல்லாமாய்5நிமிஷம் கொதித்ததும் ஏலம் போடணும் ·ப்ரிட்ஜிலவச்சிக்குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://maraththadi.com/search.asp?txtEnglish=&amp;txtThamiz=%E0%AE%B7%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BE&amp;amp;optMatch=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF&amp;btnSearch=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81"&gt;நன்றி - மரத்தடி ஷைலஜா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114290312793320382?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114290312793320382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114290312793320382'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114290312793320382.html' title='பக்கோடா - வடை - பாதாம்கீர்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114290273279541734</id><published>2006-03-20T16:47:00.000-08:00</published><updated>2006-03-20T18:26:09.060-08:00</updated><title type='text'>கேசரி &amp; எலுமிச்சைசாதம்</title><content type='html'>&lt;strong&gt;கேசரி. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவை:&lt;br /&gt;&lt;br /&gt;மீடியம் ரவை(இந்தியாவில் பம்பாய்ரவை என்பார்கள்) ஒரு காபி கோப்பைஅளவு என்றால் அதற்கு ஒன்றரை கோப்பை சக்கரை. இதெ அளவு நெய் முந்திரி ஏலம் வாசனைக்கு, அரைகோப்பைபால், தண்ணிர் தேவையான அளவு, கேசரிகலர்பவுடர் சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை :&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ரவையில் ஒரு கோப்பை நெய் விட்டு பொன்னிறமாவறுக்கணும் முதலிலேயெ நெய் அதிகம் விடுவது நல்லது,பிறகு அது மூழ்கும்வரை எடுத்துவைத்தபால் கலந்த சுடுநீர்(அல்லதுமுழுவதுமே நீராகவும் இருக்கலாம்) ஊற்றி அடுப்பை நிதான எரிச்சலில் மூடவும், ரவை 5 நிமிடத்தில் வெந்து விடும். பிறகு சக்கரை சேர்க்கவும்,கலர்பொடி தூவவும்.அடுப்பு சற்று பெரிதா எரியட்டும்,மீத நெய் விடவும். பாயச நிலையில் இருக்கும்போதே அடுப்பை அணைத்துவிட்டு தளர்ந்திருக்கும் ரவைகரைசலை மூடி10நிமிடம் வைக்கவும்,பிறகு திறந்தால் பதமான கேசரி இருக்கும் இதில் வறுத்த முந்திரி சேர்க்கவும், த்ராட்சையும் போடலாம். நெய்யை முதலிலேயே சேர்க்க வேண்டும். அப்பொதான் அது சுடுநீர்ல ரவை கட்டி ஆவதை தடுக்கும்மேலும் அந்த நெய் கேசரியில் பிறகு ஊறிக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எலுமிச்சைசாதம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதம் பொலபொலன்னு தட்டில பரத்தி லேசா உப்பு நல்லெண்னை கலந்து ஆறவைக்கணும். இதுல வேக வச்சபச்ச பட்டாணி இருந்தா போடலாம் வெந்த உருளைகிழங்கை குட்டியா சதுர நறுக்கலாய் கலக்கலாம். குடமிளகாயைவதக்கிப் போடலாம்,முந்திரி கடல வறுத்து சேர்ப்பது அவசியம்.மற்றவை இருந்தால் சேர்க்கலாம் இல்லேன்னா பரவால்ல. சாதத்தின்மேல் மஞ்சள்பொடிதூவிவிடவும் பிறகு எண்ணையில் கடுகு உ பருப்பு,க பருப்பு பச்சைமிளகாய்1, வற்றல்மிளகாய்1 கிள்ளிப்போட்டு பெருங்காயம் சேர்த்துதாளீக்கவும்,கருவேப்பிலை கொத்தமல்லி கட் செய்து போடணும்.உப்புபோட்டு எலுமிச்சை சாறைவிட்டுக்கலந்து வைக்கணும், கடைசியா சிறிது வறுத்துப்பொடி செய்த வெந்தயப்பொடி தூவணும் இதுவே எலுமிச்சைசாதத்தின் சுவையைக்கூட்டி மணம் நிரம்பக் கொடுக்கும்.வெந்தயபொடி அதிகமாபோட்டுட்டா கசந்துடும் அரைதேக்கரண்டி போதும்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://maraththadi.com/search.asp?txtEnglish=&amp;txtThamiz=%E0%AE%B7%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BE&amp;amp;optMatch=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF&amp;btnSearch=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81"&gt;நன்றி: மரத்தடி  ஷைலஜா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114290273279541734?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114290273279541734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114290273279541734'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114290273279541734.html' title='கேசரி &amp; எலுமிச்சைசாதம்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114290123456106774</id><published>2006-03-20T16:28:00.000-08:00</published><updated>2006-03-20T18:28:11.120-08:00</updated><title type='text'>குறிப்புகள் -</title><content type='html'>&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;******கொழுக்கட்டை பிடிக்க வரவில்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கவலையை விடுங்கள். அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக(தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, கிளறிப்பாருங்கள். பந்து போல் உருண்டு வரும். அப்புறம் சொப்பு செய்வது நம் கைவண்ணம் தான். குயவனின் ஆர்வத்தோடு மாவை எடுத்து மெல்லியதாய் செய்யுங்கள். வாயில் போட்டால் கரையும் கொழுக்கட்டை தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;******பாகற்க்காய் செய்தால் குழந்தைகள் ஓடுகிறார்களா&lt;/strong&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;பாகலை பாதியாய் வெட்டி, கொட்டை எடுத்து அதில் வெங்காயம் தக்காளி ஸ்ட·பிங் வைத்து நூல் போட்டு கட்டி, பின் வதக்குங்கள். சுவையான பாகல் தயார். 'அம்மா எனக்கு தினமும் பாகல் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பாங்க குழந்தைகள்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;******குடைமிளகாய் ஸ்ட·பிங்க்கு,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்ட·ப் செய்து சமையுங்கள். குண்டு குண்டாய் குடைமிளகாய் சமைத்த பின்பும் கண்கவரும்(நாக்கையும் கவரும்)&lt;br /&gt;&lt;br /&gt;******வட இந்திய சமையல் செய்யும் பொழுது(ஒரு பஞ்சாபி தோழி கூறியது)சிறிதே சிட்டிகை(அரை ஸ்பூன்) சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;******முருங்கைக்காயில் ரசமும் வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து பீஸ் முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும் ருசியும் ஊரைக்கூட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;******பரோட்டா செய்யும் பொழுது(ஆலூ, மூலி, கோபி எதுவாக இருந்தாலும்)ஸ்ட·பிங் dry ஆக இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மூள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம். தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்ட·பிங் செய்து பரோட்டா செய்தால், எல்லோரும் பாராட்டுவர். நிமிடத்தில் காலியாகிவிடும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;******வெங்காயம் நறுக்கினால் அழுகை வருகிறதா? இனி வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். oxidize ஆவதால் நிகழும் அழுகை குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;********ஆரோக்கியத்தை வரவேற்கலாமே!**********!!!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அதில் சத்து அடங்கியிருக்கிறது. முடிந்தால் வேறெதிலாவது சேருங்கள். இல்லையெனில் குடித்துவிடுங்கள்.!!!!கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பே உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.!!!!முடிந்தவரை, artificial drinks(coke etc), preservatives இருக்கும் packed foods போன்றவற்றை வாங்காதீர்கள். வாங்கும் முன், கலரோ, ப்ரிசர்வேடிவோ இருக்கா எனப் பார்த்து வாங்குங்கள்.!!!! தினம் இரு பல் பூண்டு, முழுங்கி வாருங்கள், fatal முதல் சாதாரண வியாதி வரை எதுவுமே அண்டாது(பி.பி கூட ;)) நிஜமாகவே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெசிபி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தவலை தோசை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;1. அரிசி, து.பருப்பு, மிளகு(optional), முதலியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தேங்காய்த் துருவல், தயிர், ஜீரகம், பச்சை மிளகாய்(பொடியாய் நறுக்கியது) முதலியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. வாணலியில்(குழிவு வாணலி) சிறிதே எண்ணை விட்டு, ஒரே ஒரு தோசை வார்த்து, அதை மூடி வேக விடவும்(திருப்பிப் போடுதல் வேண்டாம்).&lt;br /&gt;&lt;br /&gt;4. சூடான தக்காளி-வெங்காய சட்னி, அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பறிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. பாராட்டைப் பெறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தவலை அடை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை ஒன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. அரிசி உப்புமா அல்லது பிடி கொழுக்கட்டைக்கு உள்ள சாமான்களை அரைவேக்காட்டில் வேக வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. குழிவு வாணலியில், சிறிதே எண்ணை விட்டு, வடைபோல் தட்டி, மேல் புறம் மூடி வேக விடவும்&lt;br /&gt;&lt;br /&gt;.3. பொட்டுப் பொட்டாய் நீர் மேல் இருந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். முறுகலான அடிபாகத்துடனும், மெதுவான மேல்பாகத்துடனும், தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை இரண்டு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. அரிசி உப்புமா மாவை, உப்புமா செய்வதற்கு முன்பே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;2. அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கடுகு, பெருங்காயம், ஜீரகம் முதலியவை தாளிதம் செய்யவும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நீர் சேர்த்து சற்றே கரகரப்பாய் கலந்து வைத்துக்கொள்ளவும்4. குழிவு வாணலியில் ஒன்றொன்றாய் விட்டு, இருபுறமும் *நிறைய எண்ணை விட்டு* shallow fry செய்து எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. எதையாவது தொட்டுக் கொண்டு சாப்பிடவும். :P&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://maraththadi.com/search.asp?txtEnglish=&amp;txtThamiz=%E0%AE%B7%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE&amp;amp;optMatch=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF&amp;btnSearch=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81"&gt;நன்றி பெங்களூர் பிரபா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114290123456106774?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114290123456106774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114290123456106774'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_20.html' title='குறிப்புகள் -'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114228355925307919</id><published>2006-03-13T12:57:00.000-08:00</published><updated>2006-03-17T14:37:22.653-08:00</updated><title type='text'>முப்பது வகை போண்டா</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;வெஜிடபிள் போண்டா&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="304" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=442836&amp;amp;sid=egL22kJKX9" width="450" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;(மேல் மாவுக்கு) கடலை மாவு 1 கப், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு 1, கேரட் 1, பீன்ஸ் 4, பட்டாணி ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், மல்லித்தழை சிறிது, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தவலை வடை&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி அரை கப், கடலைப்பருப்பு அரை கப், பாசிப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு அரை கப், ஜவ்வரிசி ஒரு கைப்பிடி, தேங்காய் பல் பல்லாகக் கீறியது கால் கப், காய்ந்த மிளகாய் 6, துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கு, எண்ணெய் தேவைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். உளுத்தம்பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள்.&lt;br /&gt;அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். கடுகைப் பொரித்து அதில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;மைசூர் போண்டா&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;img height="344" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=442830&amp;amp;sid=fkp74yJPZ0" width="450" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, மிளகு 2 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) 2 டேபிள்ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;மசால் வடை&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img height="306" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=442832&amp;amp;sid=EJR14prRX3" width="450" border="0" /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப்பருப்பு 1 கப், சின்ன வெங்காயம் அரை கப், புதினா சிறிது, மல்லித்தழை சிறிது, கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையானது.&lt;br /&gt;அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 2 பல், பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 1, சோம்பு அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலம் தலா 2.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பை 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, 1 டேபிள்ஸ்பூன் பருப்பை தனியே வைத்துவிட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரகரப்பாக அரைத்தெடுத்து மாவுடன் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தனியே எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு, நடுத்தர தீயில் மொறு மொறுப்பாக வேக விட்டு எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;மெது போண்டா&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கடலை மாவு 1 கப், டால்டா 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி 1 துண்டு, காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, முந்திரிப்பருப்பு 6, ஆப்ப சோடா கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் அரித்தெடுங்கள். திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;கீரை வடை &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு 1 கப், கடலைப்பருப்பு கால் கப், அரைக்கீரை (அ) சிறுகீரை (அ) முளைக்கீரை 1 கட்டு, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;மங்களூர் போண்டா &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;em&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/em&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;மைதா மாவு 1 கப், சற்று புளித்த தயிர் அரை கப், ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மைதாவுடன் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். அதில் கடுகைப் பொரித்து கொட்டுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள். சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பொட்டுக்கடலை வடை&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img height="305" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=442835&amp;amp;sid=dkp24mELM2" width="450" border="0" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டுக்கடலை 1 கப், பச்சரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;தாளிச்ச போண்டா&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கலரிசி 1 கப், பச்சரிசி 1 கப், உளுத்தம்பருப்பு முக்கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 1 கப், பச்சை மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறப்போடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு நைஸாக அரையுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள். அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் அரித்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;கல்கண்டு வடை&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி கால் கப், கல்கண்டு ஒன்றேகால் கப், எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, ஒட்ட அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும். நன்கு நைஸாக ஆட்டுப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கார்ன் போண்டா &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img height="379" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=442831&amp;amp;sid=bxC46anqW7" width="450" border="0" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;சோளம் 2, மைதா 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு ருசியான, எண்ணெய் தேவைக்கேற்ப.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப்போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கண்ணிமைப்பதற்குள் பறந்துவிடும் இந்த கார்ன் போண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;புதினா- மல்லி வடை&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு முக்கால் கப், கடலைப்பருப்பு கால் கப், துவரம்பருப்பு கால் கப், புதினா அரை கட்டு, மல்லித்தழை அரை கட்டு, பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;பாசிப்பருப்பு போண்டா&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பு 1 கப், துருவிய சுரைக்காய் அரை கப், துருவிய இஞ்சி 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேருங்கள். சுரைக்காயை நன்கு பிழிந்து பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஜீரா வடை&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு 1 கப், சர்க்கரை 1 கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைஸாக அரையுங்கள். மாவு மெத்தென்று இருக்க வேண்டும். உப்பு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டி எடுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்து கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள் சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து மாவை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுங்கள். இதே போல எல்லா மாவையும் செய்து, பரிமாறுங்கள். குழந்தைகளைக் கவரும் வடை இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கேசரி போண்டா &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;(கேசரிக்கு) ரவை அரை கப், சர்க்கரை 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள்ஸ்பூன், சிகப்பு கலர் சிறிது. (மேல் மாவுக்கு) மைதா ஒன்றரை கப், பால் அரை கப், ஆப்ப சோடா 1 சிட்டிகை, உப்பு 1 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கேசரி செய்துகொள்ளவேண்டும். அதற்கு, ஒரு டீஸ்பூன் நெய்யை காயவைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் ஒன்றரை கப் தண்ணீரைச் சேருங்கள். அத்துடன் சிகப்பு கலரை சேருங்கள். நன்கு கொதிக்கும்போது ரவையை சேர்த்து நன்கு கிளறுங்கள். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்தூள் சேர்த்து, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள். மேல் மாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா, தேவையான அளவு பால், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கேசரி உருண்டைகளை இதில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த கேசரி போண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;புளிப்பு கார வடை &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், பச்சரிசி கால் கப், காய்ந்த மிளகாய் 8, புளி சிறிய உருண்டை, பெருங்காயம் அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய்&lt;br /&gt;தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;மெதுவடை &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img height="300" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=442833&amp;amp;sid=aiH24sOPS5" width="450" border="0" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு 1 கப், வடித்த சாதம் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, மல்லித்தழை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;உருளைக்கிழங்கு போண்டா&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img height="400" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=442829&amp;amp;sid=iTZ02gltL0" width="400" border="0" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கடலை மாவு 1 கப், ஆப்ப சோடா 1 சிட்டிகை, ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) 1 சிட்டிகை, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள் ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.&lt;br /&gt;பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தன்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள். எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஸ்பெஷல் வடை &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு 1 கப், வெங்காயம் அரை கப், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சுத்தமாக தண்ணீரில்லாமல் வடியுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து மெல்லிய வடைகளாக தட்டி, எண்ணெயில் கொள்ளுமளவு போடுங்கள். நடுத்தர தீயில் நன்கு மொறு மொறுப்பாகவும் உள்ளே மெத்தென்றும் வேக வைத்து எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கலவை பருப்பு வடை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு கால் கப், பச்சரிசி 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, சீரகம் 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;வெங்காய வடை &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்) அரை கப், கறிவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். காயும் எண்ணெயில் (நடுத்தர தீ) சிறு சிறு வடைகளாக போட்டு, பொன்னிற மானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஜவ்வரிசி போண்டா&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;ஜவ்வரிசி 1 கப், நன்கு புளித்த தயிர் 1 கப், கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், பொரித்த கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும். பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கார போண்டா&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி அரை கப், புழுங்கலரிசி அரை கப், துவரம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், காய்ந்த மிளகாய் 10, பெருங்காயம் 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் அரை கப், சீரகம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி, பருப்பை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;தயிர்வடை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;img height="400" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=442834&amp;amp;sid=esu90fSNZ4" width="400" border="0" /&gt; &lt;/p&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;p&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு அரை கப், புளிக்காத புது தயிர் 1 கப், பால் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய் தேவையான அளவு, கேரட் துருவல் 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு 4, பச்சை மிளகாய் 2, சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன்.&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள். உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்). அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கோஸ்வடை &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு 1 கப், பொடியாக நறுக்கிய கோஸ் 1 கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ரச வடை &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, மல்லித்தழை சிறிதளவு.&lt;br /&gt;ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் 2 கப், புளித் தண்ணீர் அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) அரை கப், பழுத்த தக்காளி 1, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, பெருங்காயம் அரை டீஸ்பூன்.&lt;br /&gt;பொடிக்க: மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது.&lt;br /&gt;தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து, ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;இனிப்பு போண்டா&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;ரவை முக்கால் கப், பச்சரிசி மாவு கால் கப், பொடித்த வெல்லம் 1 கப், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் ஆட்டியெடுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். மாவு இளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;சாம்பார் வடை &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு தேவைக்கு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை கால் கப், எண்ணெய் தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு அரை கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, புளி நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, வெந்தயம் அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.&lt;br /&gt;பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;பருப்பு போண்டா &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், பாசிப்பருப்பு கால் கப், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, மல்லித்தழை சிறிது, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு, பூண்டு 5 பல்.&lt;br /&gt;அரைக்க: சோம்பு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள். வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள். தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து எடுங்கள். எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இட்லி மாவு போண்டா &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;இட்லி மாவு 2 கப், சின்ன வெங்காயம் 1 கப், பச்சை மிளகாய் 3, தேங்காய் துருவல் கால் கப், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், கடலைபருப்பு 2 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்து வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114228355925307919?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114228355925307919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114228355925307919'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114228355925307919.html' title='முப்பது வகை போண்டா'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114228269345619761</id><published>2006-03-13T12:40:00.000-08:00</published><updated>2006-03-13T12:44:53.456-08:00</updated><title type='text'>உப்பு - வெல்ல - அடைகள்</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=440943&amp;amp;sid=rKL94sEIM1" border="0" height="361" width="500" /&gt;        &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உப்பு அடை :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி  ஒரு கப், வெள்ளை காராமணி  1 டேபிள்ஸ்பூன், கடுகு  அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  அரை டீஸ்பூன், பெருங்காயம்  சிறிது, பாசிப்பருப்பு  1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது, பச்சை மிளகாய்  2, உப்பு &lt;br /&gt;தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசியை சன்ன ரவையாக உடைக்கவும். காராமணியை லேசாக வறுத்து, ஊற வைக்கவும். குறைந்தது 4 மணி நேரமாவது ஊறிய பிறகு, குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் 2 கப் (ஒரு பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர்) தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு உப்பு போடவும். அத்துடன் வெந்த காராமணியையும் சேர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் கொதித்ததும், ரவையைக் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும். நன்கு கெட்டி ஆனதும் இறக்கவும். (கவனிக்கவும்: உப்புமா போல ரவை முழுவதுமாக வெந்துவிடக்கூடாது). ஆறிய பிறகு, இந்த மாவை கையால் மெல்லிய அடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் அடுக்கி வேகவைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியை நன்கு சிவக்க வறுத்து, ரவையாக உடைத்து செய்தால் அடைகள் நன்கு வாசமுடன் இருக்கும். காராமணி கொஞ்சமாகப் போட்டால் போதும். பாசிப்பருப்பு போடாமலும் இதை செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெல்ல அடை :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி ரவை  1 கப், பொடி செய்த வெல்லம்  ஒன்றரை கப், ஊறவைத்து, வேகவைத்த காராமணி  1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள்  அரை டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் வாணலியில் 2 கப் தண்ணீர் வைத்து, ஏலக்காய்தூள், வெந்த காராமணி சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவையைப் போட்டுக் கிளறவும். ரவை நன்கு வேகவேண்டும். பிறகு, வெல்லத்தூளில் கால் கப் தண்ணீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடவும். கொஞ்சம் கெட்டிப் பாகாக வந்ததும், அதை வெந்த ரவையில் சேர்த்துக் கிளறவும். ஆறியபிறகு, அடைகளாகத் தட்டி இட்லி தட்டில் வேக வைக்கவும். இரண்டு அடைகளையும் செய்து வரப் போகும் நோன்புக்கு அசத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரவை வெந்தபிறகுதான், வெல்லப்பாகை ஊற்றிக் கிளறவேண்டும். வெல்லப்பாகு ஊற்றிவிட்டால், பிறகு ரவை வேகவே வேகாது. இனிப்பு தூக்கலாக விரும்புபவர்கள், இன்னும் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114228269345619761?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114228269345619761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114228269345619761'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114228269345619761.html' title='உப்பு - வெல்ல - அடைகள்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114228207553081283</id><published>2006-03-13T12:31:00.000-08:00</published><updated>2006-03-13T12:37:32.440-08:00</updated><title type='text'>புட்டு + கடலை கறி</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;இதுவும் மள்ளு ஸ்பெஷல்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புட்டு : &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=440941&amp;amp;sid=gnq96nZuJ4" border="0" height="317" width="450" /&gt;        &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தேவையானவை: &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புட்டரிசி 4 கப், உப்பு சிறிதளவு, தேங்காய் துருவல் சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;செய்முறை: &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியை கழுவி, ஊறவைத்து, ஊறியதும் நிழலில் உலர வையுங்கள். சற்று ஈரமிருக்கும்போதே மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இதை சிறிது சிறிதாக வறுத்து, சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாவிலிருந்து தேவையான அளவு எடுத்து, உப்பு கரைத்த தண்ணீரை தெளித்துப் பிசறுங்கள். இந்த மாவு சற்று ஈரமாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;குழாய்ப்புட்டு குழாயில் இரண்டு கை மாவைப் போட்டு, அதன் மேல், சிறிது தேங்காய் துருவலை போடுங்கள். மீண்டும், மாவு, தேங்காய் என்ற வரிசையில் போட்டு, குழாயை நிரப்புங்கள். குழாய்ப்புட்டு பானையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, புட்டுக் குழாயை வைத்து, வேகவிடுங்கள். குழாயின் மேலே ஆவி வந்ததும் எடுத்துப் பரிமாறலாம். கடலைக் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிட, சுவையோ சுவை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடலை கறி :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=440940&amp;amp;sid=QHZ22buPR3" border="0" height="305" width="450" /&gt;        &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தேவையானவை:&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பு கொண்டை கடலை 1 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், தனியா தூள் 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், புளி தண்ணீர் கால் கப், கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவைக்கேற்ப.&lt;br /&gt;தாளிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;பட்டை 2 துண்டு, எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;செய்முறை: &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டை கடலையை 6 முதல் 8 மணி நேரம் வரை நன்கு ஊறவிடுங்கள். ஊறிய கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை காயவைத்து, பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், தனியாதூள், தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளித் தண்ணீரை சேர்த்து, அதனுடன் கொண்டை கடலையையும் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். கடைசியில் சிறிது கறிவேப்பிலை சேருங்கள். புட்டும் கடலைக் குழம்பும் கேரள உணவுகளில் நம்பர் ஒன் காம்பினேஷன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114228207553081283?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114228207553081283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114228207553081283'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_13.html' title='புட்டு + கடலை கறி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114186278327630092</id><published>2006-03-08T15:00:00.000-08:00</published><updated>2006-03-13T12:36:48.496-08:00</updated><title type='text'>பாலட பிரதமன் - மள்ளு ஸ்பெஷல்</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=440942&amp;amp;sid=dmP65grtA1" border="0" height="357" width="400" /&gt;        &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானவை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால் 1 லிட்டர், பாலடை (எல்லா பெரிய கடைகளிலும் கிடைக்கும்) 50 கிராம், சர்க்கரை ருசிக்கேற்ப, ஏலக்காய் தூள் சிறிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;3 டம்ளர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வையுங்கள். கொதிக்கும் தண்ணீரில் பாலடையை சேருங்கள். பாலடை வெந்ததும் வடிகட்டி, பச்சை தண்ணீரில் 4 அல்லது 5 முறை அலசுங்கள். பாலைக் காய்ச்சுங்கள். காய்ச்சிய பால் முக்கால் பாகமாக ஆனதும், அடையையும் தேவையான சர்க்கரையையும் சேர்த்து, மேலும் நன்கு கொதிக்க விடுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள் சேர்த்து, பரிமாறுங்கள். பால் வாசனைதான் இதில் முக்கியம். எனவே, பாலை நன்கு காய்ச்சிக் குறுக்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114186278327630092?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114186278327630092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114186278327630092'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_08.html' title='பாலட பிரதமன் - மள்ளு ஸ்பெஷல்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114141267543878534</id><published>2006-03-03T11:03:00.000-08:00</published><updated>2006-03-03T11:04:35.466-08:00</updated><title type='text'>பருப்புப் பொடி</title><content type='html'>தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டு கடலை &amp; அரை கப், காய்ந்த மிளகாய் &amp;amp; 6, கடுகு &amp; கால் டீஸ்பூன், சீரகம் &amp;amp; அரை டீஸ்பூன், பூண்டு &amp; 2 பல், உப்பு &amp;amp; தேவைக்கு, எண்ணெய் &amp; 1 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;சீரகம், கடுகை எண்ணெயில் பொரித்தெடுங்கள். மிளகாயை வெறும் கடாயில் வறுத்தெடுங்கள். மிக்ஸியில் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சற்று கரகரப்பாக பொடியுங்கள். சூடான சாதத்துக்கு நெய்யுடன் பரிமாறினால், கூடவே இரண்டு கவளம் உள்ளே இறங்கும். ஆந்திரத்தில், பந்தியில் முதலிடம் பருப்புப் பொடிக்கே&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114141267543878534?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114141267543878534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114141267543878534'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114141267543878534.html' title='பருப்புப் பொடி'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114141233201561804</id><published>2006-03-03T10:58:00.000-08:00</published><updated>2006-03-03T11:00:57.706-08:00</updated><title type='text'>திப்பிலி ரசம்</title><content type='html'>தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;(பொடிக்க) திப்பிலி, தேசாவரம் _ தலா 10 கிராம், மிளகு, சீரகம், மல்லி, துவரம்பருப்பு _ தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் _ 5, பூண்டு _ 3 பல், புளி _ சிறிய எலுமிச்சை அளவு, உப்பு _ தேவைக் கேற்ப.&lt;br /&gt;தாளிக்க: நெய் _ 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் &amp; தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;amp;pid=437010&amp;sid=kBK92eioJ6" border="0" height="348" width="350" /&gt;        &lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கூறியுள்ள பொடிக்க வேண்டிய பொருட்களை (பூண்டு, புளி தவிர) எண்ணெய் விடாமல் வாணலியில் வறுத்து, பொடி செய்து கொள்ளவும். புளியை நன்கு கரைத்து, அந்தக் கரைசலில் பொடித்த ரசப்பொடியைப் போட்டு, பூண்டுப் பற்களை நசுக்கிச் சேர்த்து, உப்புடன் நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் மேலும் நீர் சேர்த்து நுரைக்கவிட்டு நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். விறுவிறுப்பான குளிர்கால ரசம் ரெடி. பனியினால் ஏற்படும் உடம்பு வலி பறந்து விடும். இதற்கு தேவையான திப்பிலியும் தேசாவரமும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். அளவு ஜாஸ்தியாகி விட்டால், கசந்துவிடும். கொஞ்சமாகப் பார்த்துப் போடவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/20287032-114141233201561804?l=cookoou.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114141233201561804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/20287032/posts/default/114141233201561804'/><link rel='alternate' type='text/html' href='http://cookoou.blogspot.com/2006/03/blog-post_114141233201561804.html' title='திப்பிலி ரசம்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-20287032.post-114141225829882052</id><published>2006-03-03T10:57:00.000-08:00</published><updated>2006-03-08T14:59:31.093-08:00</updated><title type='text'>வெந்தயக் குழம்பு</title><content type='html'>தேவையானவை:&lt;br /&gt;&lt;br /&gt;முளைகட்டிய வெந்தயம் 4 டேபிள்ஸ்பூன், உரித்த சின்ன வெங்காயம் _ 1 கப், பூண்டு _ 15 பல், வத்தக்குழம்பு பொடி _ 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு _ _ அரை டீஸ்பூன், கறிவேப்பிலை _ சிறிது, எண்ணெய் _ 6 டேபிள்ஸ்பூன், உப்பு _ தேவையானது, தேங்காய் துருவல் _ 2 டேபிள்ஸ்பூன், புளி _ பெரிய எலுமிச்சை அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="339" src="http://www.weblogimages.com/v.p?uid=sundar23&amp;pid=437011&amp;amp;sid=diQ15lZXu1" width="350" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;வெந்தயத்தை ஊறவைத்து, நீரை வடித்து துணியில் கட்டிவைத்தால் மறுநாள் முளை விட்டிருக்கும். முளைகட்டிய வெந்தயத்தில் பாதியை, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகைப் போடவும். வெடித்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த வெங்காயம், பூண்டு, மீதி உள்ள முளைவிட்ட வெந்தயம் என ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். கடைசியில், வத்தல் குழம்புப் பொடியை போட்டுக் கிளறவும். அடுத்து ஊற வைத்த புளியை கரைத்து விட்டு, உப்பைப் போட்டு கொதிக்க விடவும். பாதி கொதிக்கும்போது அரைத்த விழுதைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெய் லேசாக பிரிந்து நிற்பதுத
