<$BlogRSDURL$>

Wednesday, December 28, 2005

தென்னிந்திய சமையல்! - 1 

இனிப்பு சீடை

தேவையானவை: பச்சரிசி மாவு & 2 கப், தேங்காய் துருவல் &amp; அரை கப், வெல்லம் (துருவியது) & 2 கப், எள் & 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலுடன் பச்சரிசி மாவு சேர்த்து நன்கு இடித்துக்கொள்ளுங்கள். இது நன்கு சேர்ந்து வந்ததும் வெல்லம் சேர்த்து மேலும் நன்கு இடிக்கவேண்டும். எல்லாம் நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும், எள்ளைச் சேர்த்து கலந்து எடுங்கள். எண்ணெயை குறைந்த தீயில் காய வைத்து, இடித்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு நிதானமாக வேக வைத்தெடுங்கள் (குறிப்பு: உடைந்து விடும் போலிருந்தால் சிறிது மைதா சேர்த்து பிசையலாம்).
தேங்காயின் சுவையோடு தித்திக்கும் இந்த இனிப்பு சீடை, ஆந்திரத்தில் விசேஷ தினங்களில் வெகு பிரபலம்.

பூர்லு

தேவையானவை: பூரணம் தயாரிக்க & கடலைப்பருப்பு & அரை கப், வெல்லம் & அரை கப், தேங்காய் துருவல் & 2 டேபிள்ஸ்பூன், நெய் & 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் & கால் டீஸ்பூன்.
மேல்மாவு தயாரிக்க: உளுத்தம்பருப்பு & கால் கப், பச்சரிசி & கால் கப், உப்பு & 1 சிட்டிகை, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: மேல் மாவுக்கு பச்சரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊற வைத்து நன்கு அரைத்தெடுங்கள் (இட்லி மாவு பதம்). கடலைப்பருப்பை வேக வைத்து தண்ணீர் வடியுங்கள். நைஸாக அரையுங்கள். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வையுங்கள். நெய்யில் தேங்காய் துருவலை வறுத்து வெல்லப்பாகுடன் சேர்த்து, அத்துடன் அரைத்த பருப்பு விழுதையும் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறுங்கள். ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து இறக்குங்கள். எண்ணெயைக் காய வையுங்கள்.
அரைத்து வைத்திருக்கும் மேல்மாவில் உப்பு சேர்த்து கலக்குங்கள். பூரணத்தை உருட்டி, மாவில் நன்கு அமிழ்த்தி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
பரிமாறும்போது இரண்டாகக் கிள்ளி அதன்மேல் நெய்யூற்றி பரிமாறுங்கள். அப்போதுதான் இதன் ருசியை சுவைக்க முடியும். வெல்லமும் பருப்பும் சேர்ந்து மணக்க மணக்க விருந்து படைக்கும்.

பயத்த முறுக்கு

தேவையானவை: பாசிப்பருப்பு & 1 கப், பச்சரிசி மாவு & 2 கப், மிளகாய்தூள் & 1 டீஸ்பூன், எள் & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு, எண்ணெய் & தேவைக்கு, வெண்ணெய் & 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை மெத்தென்று வேக வைத்து வடித்துக்கொள்ளுங்கள். அத்துடன் அரிசி மாவு, மிளகாய்தூள், எள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெயை காய வைத்து முறுக்குகளாக பிழிந்து, வேகவிட்டு எடுங்கள். கரகரவென வாயில் கரையும் இந்த பயத்த முறுக்கு இல்லாத பண்டிகையே ஆந்திராவில் இல்லை.

மசாலா பால்:

2 கப் பாலை, 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். சர்க்கரையை உங்கள் விருப்பப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டுக் கொள்ளலாம். தீயைக் குறைத்துவைத்து, நிதானமான தீயில் காய்ச்சவேண்டும். 4 பாதாம்பருப்புகளை எடுத்து, கொதிக்கும் நீரில் போட்டெடுத்து, தோலைத் தேய்த்தால், தோல் நீங்கிவிடும். அதோடு 4 முந்திரிப்பருப்புகளைச் சேர்த்து, விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதையும் பாலோடு சேர்த்து காய்ச்சுங்கள். பால் சற்றுக் குறுகியதும், அரை டீஸ்பூன் ஏலக்காய்தூள், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் கலக்கி, இறக்குங்கள். இன்னும் கொஞ்சம் பாதாம்பருப்புகளை (7 அல்லது 8) தோல் நீக்கி, பொடியாக நறுக்கி, பாலின் மேல் தூவி, சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறுங்கள்.

This page is powered by Blogger. Isn't yours?