<$BlogRSDURL$>

Wednesday, February 01, 2006

ஆந்திரா ஸ்பெஷல் 

புளிஹாரா



தேவையானவை:

பச்சரிசி 2 கப், நல்லெண்ணெய் 20 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, புளி சிறிய உருண்டை, பெருங்காய தூள் சிட்டிகை, உப்பு தேவைக்கு, வெல்லத்தூள் 2 டீஸ்பூன்.
தாளிக்க: நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, பச்சை மிளகாய் 1, கறிவேப்பிலை சிறிது. அரைக்க: கடுகு 1 டீஸ்பூன்.

செய்முறை:

சாதத்தை குழையாமல் பக்குவமாக வடிக்கவும். ஒரு பேசினில் வடித்த சாதத்தை சூடாக குவித்து கொட்டவும். குவித்த சாதத்தின் நடுவில் சிறிய பள்ளம் போல செய்யவும். அதில் நல்லெண்ணெய், கீறிய மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து மூடவும். புளியைக் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கரைத்த புளியை சேர்க்கவும். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். கடைசியில் வெல்லம் சேர்த்து இறக்கி சாதத்தில் சேர்க்கவும். கடுகை பச்சையாக அரைத்து அதையும் சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். ஆந்திரத்தின் மிக பிரபலமான இந்த சாதம், நம்ம ஊர் புளி சாதத் தைப் போன்றது.

பெசரட்டு



தேவையானவை:

பாசிப்பயறு 1 கப், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, உப்பு தேவைக்கு, எண்ணெய் தேவைக்கு. தாளிக்க: சீரகம் டீஸ்பூன், வெங்காயம் 3, உப்பு சிட்டிகை, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2.

செய்முறை:

பாசிப்பயறை 3 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நன்கு கழுவி களைந்து பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து கரைக்கவும். (இந்த மாவு நுரை போலிருக்கும்).
மிளகாய், வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். எண்ணெயை காய வைத்து சீரகம் தாளித்து வெங்காயம், மிளகாய் உப்பு சேர்த்து சிறிது வதக்கி எடுக்கவும். தோசைக்கல்லை காய வைத்து ஒரு கரண்டி மாவெடுத்து மெல்லிய தோசையாக தேய்க்கவும். அதன் மேல் வெங்காயக் கலவையை சிறிது தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி நன்கு வேக விட்டு மடித்து எடுக்கவும். இஞ்சி துவையலுடன் பரிமாறவும். ஆந்திரா என்றதும் நினைவுக்கு வரும் விஷயங்களில் பெசரட்டும் ஒன்று.
பாம்பே ரவையை உப்புமா செய்து, அதில் சிறிதளவை பெசரட்டின் நடுவில் வைத்து எடுத்து அதனுடனேயே சேர்ந்தாற்போல் சாப்பிடுவது வேறுவிதமான சுவை.

சௌ சௌ பச்சடி



தேவையானவை:

சௌசௌ 1 சிறியதாக, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 4 அல்லது 5, புளி நெல்லிக்காயளவு, வெங்காயம் பாதி, பூண்டு 3 பல், மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சௌசௌவை நன்கு கழுவி இரண்டாக நறுக்கி, விதை நீக்கி மெல்லியதாக நறுக்கவும். (தோலுடன்) எண்ணெயை காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன் நிறமானதும் சௌசௌ முதல் உப்பு வரை எல்லாவற்றையும் சேர்த்து 10 நிமிடம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, விப்பர் பிளேடால் விட்டு, விட்டு அரைக்கவும். சற்று கரகரப்பாக அரைத்து எடுத்து பரிமாறவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும் இந்தக் கூட்டு.

This page is powered by Blogger. Isn't yours?