<$BlogRSDURL$>

Thursday, February 23, 2006

வெங்காய வடகம் 

‘உரித்த சின்ன வெங்காயம் 8 கப், பச்சை மிளகாய் 10, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி ஆகியவற்றை பொடி யாக நறுக்குங்கள். ஒரு கப் உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ஊறியதும் கழுவி, கிரைண்டரில் போட்டு அவ்வப்போது தண்ணீர் தெளித்து பஞ்சு போல ஆட்டிக் கொள்ளுங்கள். கிள்ளி வைப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாக, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை உளுந்து மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்துகொண்டு, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சின்னச் சின்னதாகக் கிள்ளி வையுங்கள். (கலந்ததும் கிள்ளிவைக்கவேண்டும். பிசைந்த மாவை அதிக நேரம் வைத்திருந்தால் நீர்த்துவிடும்).

இரண்டு மூன்று நாட்கள் நன்கு காய வைத்து எடுத்து வையுங்கள். கறிவட கத்தை வறுக்கும் போது, நிதானமான தீயில் வடகம் மூழ்கும் அளவு எண்ணெய் ஊற்றி, பொரித்தெடுங்கள். தீ அதிகமாக இருந்தால் மேலே கருகியும் உள்ளே வேகாமலும் இருக்கும். இந்த வடகத்தைப் பொரித்து சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். வற்றல் குழம்பு தாளிக்கும்போது, வடகத்தையும் சேர்க்க லாம். குழம்பு வாசனையாகயும் ருசியாகவும் இருக்கும்.’’

This page is powered by Blogger. Isn't yours?