<$BlogRSDURL$>

Thursday, February 23, 2006

நிமப்பண்டு பச்சடி 

எலுமிச்சங்காய் ஊறுகாய்

தேவையானவை:

எலுமிச்சம்பழம் (சற்றுப் பெரியதாக) & 12, மிளகாய்தூள் & அரை கப், உப்பு & அரை கப், மஞ்சள்தூள் & 1 டீஸ்பூன், நன்கு அழுத்தமான பச்சை நிறமுடைய பச்சை மிளகாய் & 8.



செய்முறை:

ஆறு எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாறு எடுங்கள். பச்சைமிளகாயை கழுவித் துடைத்து லேசாகக் கீறிக் கொள்ளுங்கள். எலுமிச்சம்பழச் சாற்றில், மிளகாய்தூள், உப்புதூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்துகொண்டு, மிளகாயையும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். மீதமுள்ள ஆறு பழங்களை பொடியாக நறுக்கி, அதனுடன் சேருங்கள். நன்கு கலந்துவிடுங்கள். இது வருஷத்துக்கும் கெடாமல் அப்படியே இருக்கும். தேவையானபோது கடுகு தாளித்துக்கொள்ளலாம். அப்படியேயும் உபயோகிக்கலாம். எண்ணெய் சேர்க்காத ஊறுகாய் இது.

This page is powered by Blogger. Isn't yours?