<$BlogRSDURL$>

Thursday, February 23, 2006

ரஸமலாய் 

தேவையானவை:

பால் & ஏழரை கப், சர்க்கரை & 3 கப், வினிகர் & அரை டீஸ்பூன், குங்குமப்பூ, முந்திரி, பாதாம், பிஸ்தா & தலா 5 கிராம்.

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் நன்கு கொதித்ததும் அதில் வினிகரை ஊற்றினால் பால் திரிந்து விடும். திரிந்த பாலை (தண்ணீரை வடித்துவிட்டு) மிக்ஸியில் போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். கையாலும் மசித்துக் கொள்ளலாம். மசித்ததை மெதுவாக, (கண்டிப்பாக கைக்கு அழுத்தம் கொடுக்க கூடாது), ரொம்ப ரொம்ப மெதுவாக குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். உருட்டியதை ஒரு தட்டில் மெதுவாக வைக்கவும்.

பிறகு, 2 கப் சர்க்கரையை 2 கப் நீரில் கொதிக்க விட்டு, உருட்டிய உருண்டைகளை மெதுவாக போட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும். இப்போது ஜீரா நன்கு உருண்டையில் ஊறி விடும். அதன் பிறகு, பிரஷர் பேனில் மீதி இருக்கும் ஐந்து கப் பாலை ஊற்றி, அது பாதியளவாக வற்றும் வரும் வரை சுண்டக் காய்ச்சவும். அதில் ஒரு கப் சர்க்கரையை போடவும். நன்கு வாசம் வந்ததும் ஊறிய உருண்டைகளை அதில் போடவும்.



பிறகு பொடியாக நறுக்கிய குங்குமப்பூ, முந்திரி, பாதாம், பிஸ்தா போட்டு அலங்கரிக்கவும். (விருப்பப்பட்டால் 6 அல்லது 7 முந்திரிகளை விழுதாக அரைத்து கலக்கலாம்). இந்த ரசமலாய் வீட்டுக்கும் விருந்துகளுக்கும் சும்மா ‘நச்’னு இருக்கும்.

வினிகருக்கு பதிலாக எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கலாம். கறந்த பாலில் செய்தால், இந்த ரசமலாய் கூடுதலாக சுவைக்கும்.

This page is powered by Blogger. Isn't yours?