<$BlogRSDURL$>

Friday, March 03, 2006

நூக்கல் வடை 



தேவையானவை:

நூல்கோல் 2, பொட்டுக்கடலை மாவு 1 கப், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, பெரிய வெங்காயம் 3, கறிவேப்பிலை சிறிது, பூண்டு 10 பல், உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப, கடுகு தாளிக்க.

செய்முறை:

நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும். நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர் விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். இதில் கொத்து மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிப் போட்டு, காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டு, சிவக்க வேக வைத்தெடுங்கள். வடையாகத் தட்டாமல், அப்படியே உதிராகவும் பரிமாறலாம். இந்த நூல்கோல் புட்டு, சூடாக சாப்பிட சுவை அள்ளும்.

கலவை இளக்கமாக இருந்தால் பொட்டுக்கடலைப் பொடியை அதிகமாகப் போட்டுக்கொள்ளுங்கள். நூல்கோல் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்கும் இதன் ருசி.

This page is powered by Blogger. Isn't yours?