<$BlogRSDURL$>

Friday, March 03, 2006

வாழைப்பூ வடை 

இது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஸ்ரீவித்யா மற்றும் மம்மூட்டியுடன் நடித்து இருக்கிறது. ;-)



தேவையானவை:

வாழைப்பூ 1 (ஆய்ந்தது), உருளைக் கிழங்கு 2 (பெரியது), பொட்டுக்கடலை 50 கிராம், பிரட் துண்டுகள் 4, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 2, தனி மிளகாய்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கறி வேப்பிலை, கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) சிறிது.


செய்முறை:

வாழைப்பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையை நன்கு பொடிக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரட் துண்டுகளை நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து உதிர்த்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் நைசாக அரைத்து கொள்ளவும். இப்போது எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு போட்டு நன்கு பிசறவும். கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை போடவும் (தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்). எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, விரும்பிய வடிவத்தில் வடை போல் தட்டி எண்ணெயில் பொரிக்கலாம். அல்லது தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கலாம். இது மாலை நேரத்துக்கான, சத்து மிகுந்த டிபன்.

வாழைப்பூவின் துவர்ப்பு சுவை பிடிக்காதவர்கள், உருளைக்கிழங்கின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம்.கட்லெட்டை வேகவைக்கும்போது, அடுப்பை ஸிம்மில் வைத்து, நிதானமாக வேகவிடுங்கள். இல்லையென்றால், வெளியே சிவந்திருக்கும். உள்ளே அப்படியே வேகாமல் இருக்கும்.

This page is powered by Blogger. Isn't yours?