<$BlogRSDURL$>

Friday, March 03, 2006

திப்பிலி ரசம் 

தேவையானவை:

(பொடிக்க) திப்பிலி, தேசாவரம் _ தலா 10 கிராம், மிளகு, சீரகம், மல்லி, துவரம்பருப்பு _ தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் _ 5, பூண்டு _ 3 பல், புளி _ சிறிய எலுமிச்சை அளவு, உப்பு _ தேவைக் கேற்ப.
தாளிக்க: நெய் _ 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் & தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை.



செய்முறை:

மேலே கூறியுள்ள பொடிக்க வேண்டிய பொருட்களை (பூண்டு, புளி தவிர) எண்ணெய் விடாமல் வாணலியில் வறுத்து, பொடி செய்து கொள்ளவும். புளியை நன்கு கரைத்து, அந்தக் கரைசலில் பொடித்த ரசப்பொடியைப் போட்டு, பூண்டுப் பற்களை நசுக்கிச் சேர்த்து, உப்புடன் நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் மேலும் நீர் சேர்த்து நுரைக்கவிட்டு நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். விறுவிறுப்பான குளிர்கால ரசம் ரெடி. பனியினால் ஏற்படும் உடம்பு வலி பறந்து விடும். இதற்கு தேவையான திப்பிலியும் தேசாவரமும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். அளவு ஜாஸ்தியாகி விட்டால், கசந்துவிடும். கொஞ்சமாகப் பார்த்துப் போடவேண்டும்.

This page is powered by Blogger. Isn't yours?