<$BlogRSDURL$>

Monday, March 20, 2006

கேசரி & எலுமிச்சைசாதம் 

கேசரி.

தேவை:

மீடியம் ரவை(இந்தியாவில் பம்பாய்ரவை என்பார்கள்) ஒரு காபி கோப்பைஅளவு என்றால் அதற்கு ஒன்றரை கோப்பை சக்கரை. இதெ அளவு நெய் முந்திரி ஏலம் வாசனைக்கு, அரைகோப்பைபால், தண்ணிர் தேவையான அளவு, கேசரிகலர்பவுடர் சிறிது.

செய்முறை :

முதலில் ரவையில் ஒரு கோப்பை நெய் விட்டு பொன்னிறமாவறுக்கணும் முதலிலேயெ நெய் அதிகம் விடுவது நல்லது,பிறகு அது மூழ்கும்வரை எடுத்துவைத்தபால் கலந்த சுடுநீர்(அல்லதுமுழுவதுமே நீராகவும் இருக்கலாம்) ஊற்றி அடுப்பை நிதான எரிச்சலில் மூடவும், ரவை 5 நிமிடத்தில் வெந்து விடும். பிறகு சக்கரை சேர்க்கவும்,கலர்பொடி தூவவும்.அடுப்பு சற்று பெரிதா எரியட்டும்,மீத நெய் விடவும். பாயச நிலையில் இருக்கும்போதே அடுப்பை அணைத்துவிட்டு தளர்ந்திருக்கும் ரவைகரைசலை மூடி10நிமிடம் வைக்கவும்,பிறகு திறந்தால் பதமான கேசரி இருக்கும் இதில் வறுத்த முந்திரி சேர்க்கவும், த்ராட்சையும் போடலாம். நெய்யை முதலிலேயே சேர்க்க வேண்டும். அப்பொதான் அது சுடுநீர்ல ரவை கட்டி ஆவதை தடுக்கும்மேலும் அந்த நெய் கேசரியில் பிறகு ஊறிக்கொள்ளும்.

எலுமிச்சைசாதம்

சாதம் பொலபொலன்னு தட்டில பரத்தி லேசா உப்பு நல்லெண்னை கலந்து ஆறவைக்கணும். இதுல வேக வச்சபச்ச பட்டாணி இருந்தா போடலாம் வெந்த உருளைகிழங்கை குட்டியா சதுர நறுக்கலாய் கலக்கலாம். குடமிளகாயைவதக்கிப் போடலாம்,முந்திரி கடல வறுத்து சேர்ப்பது அவசியம்.மற்றவை இருந்தால் சேர்க்கலாம் இல்லேன்னா பரவால்ல. சாதத்தின்மேல் மஞ்சள்பொடிதூவிவிடவும் பிறகு எண்ணையில் கடுகு உ பருப்பு,க பருப்பு பச்சைமிளகாய்1, வற்றல்மிளகாய்1 கிள்ளிப்போட்டு பெருங்காயம் சேர்த்துதாளீக்கவும்,கருவேப்பிலை கொத்தமல்லி கட் செய்து போடணும்.உப்புபோட்டு எலுமிச்சை சாறைவிட்டுக்கலந்து வைக்கணும், கடைசியா சிறிது வறுத்துப்பொடி செய்த வெந்தயப்பொடி தூவணும் இதுவே எலுமிச்சைசாதத்தின் சுவையைக்கூட்டி மணம் நிரம்பக் கொடுக்கும்.வெந்தயபொடி அதிகமாபோட்டுட்டா கசந்துடும் அரைதேக்கரண்டி போதும்

நன்றி: மரத்தடி ஷைலஜா

This page is powered by Blogger. Isn't yours?