<$BlogRSDURL$>

Monday, March 20, 2006

பக்கோடா - வடை - பாதாம்கீர் 

தூள் பக்கோடா

கடலைமாவு ஒரு கப், அரிசி மாவு கால் கப்தேவை. இதுலநல்லா மூணு கப் அளவு வெங்காயம் சின்னதாநறுக்கிப்போடலாம்.4பச்சைமிளகாய்.நிறைய கொத்தமல்லித்தழை பொடியா நறுக்கிப்போடணும்.கொஞ்சம் புதினாஇலைகருவேப்பிலை இஞ்சி சேர்க்கலாம்.இதெல்லாம் போட்டு அரைகரண்டி ரி·பைண்ட்எண்னை காச்சி விட்டு தண்ணீரெ ஊற்றாமல் ஒருமணி ஊறவச்சி அப்புறமாஎண்னையில்உதிர்த்தாற்போல போட்டால் க்ரிஸ்ப்பா வரும்.வெங்காயமும் மற்றபதார்த்தங்களும்தானாகவே நீர் சேர்த்துவிடுவதால் இதை இப்படிச் செய்தால் சூப்பர வரும்.'

ஆமைவடை

ஒருகப் கடலைப்பருப்புன்னா அரை கப் பயற்றம்பருப்பு கைப்பிடி அளவு உளுத்தம்பருப்பு இவைகளை ஊறவச்சி அறைக்கிறபோதுஉப்பு காரம் பெருங்காயம் சேர்க்கணும், மாவுல அரைகரண்டி தேங்காயெண்னைகலந்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வடை செஞ்சா ஜோரா வரும்.

கீரைவடை

உளுத்தம்பருப்புதான் தேவை. ஒரு கப்புக்கு 2 ஸ்பூன் அரிசி சேர்த்துஊறவச்சிகொஞ்சமா அவுல் போட்டு உப்பு போட்டு மைய அறைச்சி அதுல பொடியாநறுக்கியவெங்காயம் கட் செஞ்சகீரை ஒருகப், இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்துமிக்ஸில ஒரே ஒரு சுத்து சுத்தி எடுக்கணும்இதேபோல கோஸ், கேரட் துருவுப்போட்டுகூட இதே மாதிரி செய்யலாம்

பாதாம் கீர்

பாதாம் பத்து முந்திரி பத்து எடுத்து சுடற நீரில் ஒருமணி நேரமாவதுஊறவக்கணும்குக்கர்ல சாதம் வைக்கும்போதே ஒருதட்டுல 2 கேரட் கட் செஞ்சி வேகவச்சிஎடுத்துவச்சிக்கணும். இப்போ வெந்த கேரட்டுடன் தோல் உறிச்ச பாதாம்பருப்புமுந்திரிபருப்புகளை பால் விட்டு சட்னி பதத்துல மிக்ஸில அறைச்சிகக்ணும்.பால் ஒருலிட்டர் எடுத்து காச்சி அதில் ஒரு கப் அலல்து ஒரு டம்ளர்சக்கரைபோட்டுகொதிக்கவிடவும். 10நிமிஷம் கொதிச்சதும் அறைத்த விழுது சேர்த்துஎல்லாமாய்5நிமிஷம் கொதித்ததும் ஏலம் போடணும் ·ப்ரிட்ஜிலவச்சிக்குடிக்கலாம்.

நன்றி - மரத்தடி ஷைலஜா

This page is powered by Blogger. Isn't yours?