<$BlogRSDURL$>

Thursday, March 23, 2006

உண்ணி அப்பம் 


தேவையானவை:

பச்சரிசி மாவு 2 கப், கோதுமை மாவு அரை கப், வெல்லம் (பொடித்தது) 3 கப், பல்லுபல்லாக நறுக்கிய தேங்காய் கால் கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நன்கு பழுத்த பூவன் வாழைப்பழம் 1, நெய் சிறிதளவு, எண்ணெய் சிறிதளவு, ஆப்பசோடா கால் டீஸ்பூன்.



செய்முறை:

அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். சிறிதளவு நெய்யில் தேங்காயை சிவக்க வறுத்து அதனுடன் சேருங்கள். வாழைப்பழத்தை தோலுரித்து மிக்ஸியில் அடித்து மாவுக்கலவையில் ஊற்றுங்கள். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும், வடிகட்டி சூடாக மாவில் ஊற்றுங்கள். அத்துடன் ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள்.

குழிப்பணியார சட்டியைக் காயவைத்து ஒவ்வொரு குழிக்கும் சிறிது எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, முக்கால் குழிக்கு மாவை ஊற்றி, சிறு தீயில் வைத்து, மூடி போட்டு நன்கு வேக விட்டு திருப்பிவிடுங்கள். நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். பஞ்சு போன்றிருக்கும் இந்தப் பணியாரம், கேரள விருந்தில் இடம்பெறும் முக்கியமான இனிப்பு. அப்பம் இல்லாத பண்டிகையும் அங்கே இல்லை.

This page is powered by Blogger. Isn't yours?