<$BlogRSDURL$>

Monday, March 13, 2006

புட்டு + கடலை கறி 

இதுவும் மள்ளு ஸ்பெஷல்


புட்டு :



தேவையானவை:

புட்டரிசி 4 கப், உப்பு சிறிதளவு, தேங்காய் துருவல் சிறிதளவு.

செய்முறை:

அரிசியை கழுவி, ஊறவைத்து, ஊறியதும் நிழலில் உலர வையுங்கள். சற்று ஈரமிருக்கும்போதே மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இதை சிறிது சிறிதாக வறுத்து, சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவிலிருந்து தேவையான அளவு எடுத்து, உப்பு கரைத்த தண்ணீரை தெளித்துப் பிசறுங்கள். இந்த மாவு சற்று ஈரமாக இருக்க வேண்டும்.
குழாய்ப்புட்டு குழாயில் இரண்டு கை மாவைப் போட்டு, அதன் மேல், சிறிது தேங்காய் துருவலை போடுங்கள். மீண்டும், மாவு, தேங்காய் என்ற வரிசையில் போட்டு, குழாயை நிரப்புங்கள். குழாய்ப்புட்டு பானையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, புட்டுக் குழாயை வைத்து, வேகவிடுங்கள். குழாயின் மேலே ஆவி வந்ததும் எடுத்துப் பரிமாறலாம். கடலைக் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிட, சுவையோ சுவை!

கடலை கறி :



தேவையானவை:

கறுப்பு கொண்டை கடலை 1 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், தனியா தூள் 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், புளி தண்ணீர் கால் கப், கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க:

பட்டை 2 துண்டு, எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

கொண்டை கடலையை 6 முதல் 8 மணி நேரம் வரை நன்கு ஊறவிடுங்கள். ஊறிய கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை காயவைத்து, பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், தனியாதூள், தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளித் தண்ணீரை சேர்த்து, அதனுடன் கொண்டை கடலையையும் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். கடைசியில் சிறிது கறிவேப்பிலை சேருங்கள். புட்டும் கடலைக் குழம்பும் கேரள உணவுகளில் நம்பர் ஒன் காம்பினேஷன்.

This page is powered by Blogger. Isn't yours?