<$BlogRSDURL$>

Thursday, March 23, 2006

மலபார் அவியல் - அடைக்கு உகந்தது 


தேவையானவை:

முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) கால் கிலோ, கேரட் (கலருக்காக) 1, தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், புது தயிர் 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவைக்கு. அரைக்க: தேங்காய் சிறியதாக 1, பச்சை மிளகாய் 3, சீரகம் 1 டீஸ்பூன்.


செய்முறை: காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, சற்று கரகரப்பாக (தண்ணீர் ஊற்றாமல்) அரைத்து எடுங்கள். அரைத்த விழுதை காய்கறியுடன் சேர்த்து, அதோடு தயிர், எண்ணெய், கறிவேப்பிலை கலந்து பரிமாறுங்கள். ஹோட்டல்கள் முதல் விருந்துகள் வரை பிரபலமான கேரள ஸ்பெஷலான இந்த ‘மலபார் அவியல்’, அடைக்கு நல்ல ஜோடி.

This page is powered by Blogger. Isn't yours?