<$BlogRSDURL$>

Friday, May 12, 2006

ஓரின்- மள்ளு ஸ்பெஷல் 


தேவையானவை:

பூசணி பத்தை 1, பச்சை மிளகாய் 4, தேங்காய்ப்பால் 3 கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:

பூசணியை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். மிளகாயை கீறிக்கொள்ளுங்கள். காராமணியை வாசனை வரும் வரை வறுத்து வேக விடுங்கள். பாதியளவு தேங்காய்ப்பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பூசணி, வேகவைத்த காராமணி, மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். காய் நன்கு வெந்ததும் மீதமுள்ள பாலை விட்டு, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து மூடுங்கள்.

தேங்காய்ப்பால் மணக்கும் இந்தக் கூட்டு, வயிற்றுக்கும் வாய்க்கும் இதமானது. தேவையானவை: கோதுமை மாவு 2 கப், உப்பு அரை டீஸ்பூன், தனி மிளகாய்தூள் அரை டீஸ்பூன், தனியா தூள் கால் டீஸ்பூன், நெய் 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை கொத்துமல்லி சிறிதளவு.

This page is powered by Blogger. Isn't yours?