<$BlogRSDURL$>

Thursday, July 27, 2006

ஜாதி நாரத்தங்காய் சாதம் இன்ன பிற .... 

ஜாதி நாரத்தங்காய் சாதம்

தேவையானவை:

வடித்த சாதம் 2 கப், நாரத்தங்காய் amp; 1, தேங்காய்துருவல் 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 2, உப்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது. தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் சிறிது.

செய்முறை:

நாரத்தங்காயைப் பிழிந்து சாறெடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு இவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து அந்த விழுதை சாதத்துடன் சேர்க்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை தாளித்து சாதத்தில் கொட்டி, கடைசியாக நாரத்தங்காய் சாறையும் விட்டு எல்லா வற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி இறக்கவும். பித்தத்துக்கு மிகவும் நல்லது. இதே போன்று கிடாரங் காய் சாறு விட்டும் செய்யலாம்.

கடுகோரை

தேவையானவை:

வடித்த சாதம் 2 கப். அரைக்கவேண்டியவை: தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, புளி கொட்டைப்பாக்கு அளவு, வெல்லம் ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், பெருங்காயம் சிறிது, கறிவேப்பிலை சிறிது. தாளிக்க: கடுகு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு அரை டீஸ்பூன், வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, எண்ணெய் கால் கப்.

செய்முறை:

அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, பின் அரைத்த விழுதையும் போட்டு நன்றாக வதக்கவும். பின் வடித்த சாதத்தைப் போட்டு கிளறி இறக்கவும். ஆடி 18க்கு செய்ய அருமையான சித்ரான்னம், கர்நாடகா ஸ்பெஷலான இந்த கடுகோரை!
அரைக்கும் சாமான்களில் கடுகுக்கு பதில் எள் சேர்த்து இதே போன்றே செய்யலாம்.

மல்டி புரோட்டீன் ரைஸ்

தேவையானவை:

வடித்த சாதம் 2 கப், வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 5, பாதாம்பருப்பு 5, காய்ந்த மிளகாய் 4, பெருங் காயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன்.

செய்முறை:

வேர்க்கடலை, முந்திரி, பாதாம் இவை களை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை இவைகளை ஒன்றாக வறுத்துக் கொள்ளவும். மிளகாயை ஒரு துளி எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், உப்பு, பெருங்காயப் பொடி இவைகளை பொடி செய்து பின்னர் அவற்றுடன் வேர்க்கடலை, முந்திரி, பாதாம் இவைகளை போட்டு பொடி செய்யவும். பின்னர் இந்த பொடியை சாதத்தில் போட்டு கலந்து பரிமாறவும். சுவையான புரோட்டீன் ரைஸ் தயார்.வேர்க்கடலை, பாதாம், முந்திரி இவைகளை கடைசியில் தான் போட்டு பொடி செய்ய வேண்டும். முதலிலேயே போட்டால் மற்ற பருப்புகள் பொடியாகாது.

This page is powered by Blogger. Isn't yours?