<$BlogRSDURL$>

Thursday, July 27, 2006

சேமியா பால் போளி ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி 

தேவையானவை:

சேமியா ஒரு கப், மைதா amp; ஒரு கப், பால் 4 கப், எண்ணெய் ஒன்றரை கப், சர்க்கரைத் தூள் 2 கப், ஏலப்பொடி ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை.

செய்முறை:

சேமியாவை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, சிறிது பால் விட்டு அரைக்கவும். பின் மைதா, நெய்யையும் சேர்த்துப் பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிபோல் இட்டுப் பொரிக்கவும். பொரித்த பூரிகளை தாம்பாளத்தில் அடுக்கவும். பாலைக் காய்ச்சி, ஏலப்பொடி, கேசரி பவுடர் போட்டு, சுடச் சுட பூரிமேல் விடவும். நன்றாக ஊறிய பிறகு, தனித்தனி தாம்பாளத்தில் போட்டு அவரவர் தேவைக்கு ஏற்றவாறு சர்க்கரைப் பொடியை தூவி, ஸ்பூன் போட்டு பரிமாறவும். மிக மிக சுவையான இந்த பால் போளி, வீட்டு விருந்துகளுக்கு செய்வதற்கேற்ற புதுமையான ஸ்வீட். காய்ச்சிய பாலில், சிறிது மில்க்மெயிட் சேர்த்து கரைத்து, பூரி மேல் ஊற்றிக் கொடுத்தால், சர்க்கரை தூளின் அளவைக் குறைத்துக் கொள்ள லாம்.

ஸ்பைஸி புரோட்டீன் டிக்கி

தேவையானவை:

உடைத்த சேமியா - அரை கப், உருளைக்கிழங்கு _ கால் கிலோ, சோயா உருண்டை துருவல் _ கால் கப், சோம்பு _ அரை டீஸ்பூன், இஞ்சி _ சிறு துண்டு, பச்சை மிளகாய் _ 3, பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) _ அரை கப், மிளகுதூள் _ முக்கால் டீஸ்பூன், கரம்மசாலா தூள் _ அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் _ அரை டீஸ்பூன், உப்பு _ ருசிக்கேற்ப, வெள்ளை அவல் (வறுத்து பொடித்தது) _ அரை கப், கார்ன்ஃப்ளார் _ கால் கப், எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

சோயா உருண்டை துருவலை ஐந்து நிமிடம் சுடுநீரில் போட்டு, ஊற வைத்து, வடிகட்டி, 23 முறை அதில் குளிர்ந்த நீரை விட்டு, வாடை போக நன்கு அலசி, பிழிந்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். சேமியாவையும் வேகவிட்டு, உதிர் உதிராக, வடிகட்டி வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும், சோம்பு போட்டு வெடித்ததும், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பிழிந்து வைத்த சோயா துருவல் போட்டு, ஒன்றிரண்டு நிமிடம் கிளறவும். அத்துடன் கரம்மசாலா தூள், மிளகுதூள், மஞ்சள்தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். இத்துடன் வெந்த சேமியாவை சேர்த்து கலந்து கொள்ளவும். இக்கலவையை நன்கு ஆறவிட்டு, உருண்டைகளாக உருட்டவும். கார்ன்ஃப்ளாருடன் போதுமான நீர் விட்டு நீர்க்க கரைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கியெடுத்து, அவல் பொடியில் புரட்டி எடுத்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பின் ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். இதனை சூடாக, தக்காளி சாஸ§டன் பரிமாற, சுவையோ சுவை!
கார்ன்ஃப்ளார் மாவுடன் சிறிது கடலைமாவையும் சேர்த்துக் கரைத்தால், கூடுதல் ருசி கிடைக் கும்.

This page is powered by Blogger. Isn't yours?